வியாழன், 25 ஆகஸ்ட், 2022

நாட்டில் கொவிட் அபாயம் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டில் கொரோனா வைரசினால் ஏற்படக்கூடிய இறப்புக்களை குறைக்க, பொதுமக்கள் Covid-19 க்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளை பெறுவதன் முக்கியத்துவத்தை சுகாதார அமைச்சு மீண்டும்
 வலியுறுத்தியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில்.25-08-2022. இன்று காலைநடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே இதனை வலியுறுத்தியுள்ளார்.
மேலும்  தெரிவிக்கையில்,
கொவிட் -19 அபாயம் தற்போது அதிகரித்துள்ளதாகவும், எனவே பூஸ்டர் டோஸ்க்களை பெறாதவர்களை விரைவில் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் Covid-19 பரவலால் நாட்டில் பாரிய பாதிப்பு ஏற்படவில்லை எனவும் எதிர்காலத்தில் புதிய வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு பூஸ்டர் டோஸ் பெறுவது மிக அவசியமானது எனவும் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.