ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

மானிப்பாயில் வீடு புகுந்து தாக்குதல் அதிகாலை 2 மணிக்கு சம்பவம்

யாழ் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீட்டின் மீது .28-08-2022.இன்றுஅதிகாலை 2 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த கும்பல் ஒன்று வீட்டு ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்து விட்டு, அங்கு நின்ற உந்துருளிக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்றும் மாறாக பாரிய பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் உந்துருளி முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறன்றது.
இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.