ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

ஊறவைத பாதாமை தோல் நீக்கியோ அல்லது அப்படியோ சாப்பிடலாம்

பாதாம் உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்தை தரும் ஒரு இயற்கையான நட்ஸ் வகையாகும், ஆயுர்வேதத்தில் பாதாம் சிறந்ததொரு மருந்தாக 
கருதப்படுகிறது.
ஆயுர்வேதத்தின்படி வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவை சமநிலையில் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.
இவற்றை சமநிலையில் வைத்துக்கொள்ள பாதாம் உதவுகிறது என்று கூறப்படுகிறது.
பாதாமை ஊறவைத்து தோல் நீக்கியோ அல்லது அப்படியோ சாப்பிடலாம்.பாதம் பருப்பின் சக்தியை முழுமையாக நீங்கள் பெற வேண்டுமாயின் அதனை தினமும் சாப்பிட வேண்டும்.
பாதாம் பருப்பு சாப்பிடுவது வீண் வாத மற்றும் பித்த தோஷங்களைப் போக்கும் என்று நம்பப்படுகிறது
பாதாம் பருப்புகளை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிடுவதன் மூலம் உடல் பலவீனம், நீரிழிவு நோயின் சில சிக்கல்களைத் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.
ஆயுர்வேதத்தின் படி உடல் பருமன் ப்ரீடியாபயாட்டீஸ் மெட்டபாலிக் சிண்ட்ரோம் போன்ற மருத்துவக் கோளாறுகளுடன் தொடர்புடைய பிரமேஹா (நீரிழிவு) போன்றவற்றிலிருந்து பாதாம் நமது உடலை
 பாதுகாக்கிறது.
ஆயுர்வேதத்தின் படி தினமும் பாதாம் பருப்பை உட்கொள்வது, உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளிக்கும்,
சருமத்தின் நிறத்தை அதிகப்படுத்துகிறது மற்றும் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பதில் முக்கிய
 பங்காற்றுகிறது.
பாதாம் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது மட்டுமல்ல, அவை முடிக்கும் உறுதியளிக்கிறது.தனால் இளநரை மற்றும் முடி உதிர்தல் போன்றவை தடுக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.