வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

இலங்கையில்12 எரிபொருள் விநியோகம் அதிரடியாக இடைநிறுத்தம்

நாட்டிலுள்ள 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடை நிறுத்த அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தேசிய எரிபொருள் அனுமதி வழிகாட்டுதலுக்கு அமைய குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இணங்க தவறியதால் 
குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதற்கமைய 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை உடனடியாக நிறுத்துமாறு 
ஏரிசத்தி அமைச்சர் கட்டளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்காத 
எரிபொருள் நிரப்பு நிலையங்களை தொடர்ந்து கண்காணிக்கவும் பொதுமக்கள் தங்கள் முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கான்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.