புதன், 6 ஜூலை, 2022

கடவுச்சீட்டு விநியோகம் இலங்கை வரலாற்றை புரட்டிப்போட்டுள்ளன

இலங்கை வரலாற்றில் அதிகளவான வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட மாதம் கடந்த ஜூன் மாதம் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜுன் மாதத்தில் மட்டும் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை சுமார் 400,000 என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியுமி பண்டார தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வெளிநாடு செல்வதற்காக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள் என்பது விசேட அம்சமாகும்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கடவுச்சீட்டு பெற ஒரு நாள் சேவைக்காக விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாகவும் அடுத்த 60 நாட்களுக்கு திகதிகளும் நேரங்களும்
 ஒதுக்கப்பட்டுள்ளன.
யாராவது வேலைக்காக அவசரமாக வெளிநாடு செல்ல விரும்பினால், அதை உறுதி செய்ய வாட்ஸ்அப் மூலம் 0706311711 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு திணைக்களம்
 கேட்டுக் கொண்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.