செவ்வாய், 5 ஜூலை, 2022

நாட்டில் மண்ணெண்ணெய் விலை ஓரிரு நாட்களில் ஏற்படவுள்ள அதிகரிப்பு

நாட்டில் எதிர்வரும் நாட்களில் மண்ணெண்ணெய் விலையை கட்டாயம் அதிகரிக்க வேண்டியேற்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
04-07-2022.அன்று  நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடருந்து கருத்துரைத்த அவர், “கடந்த காலங்களில் நாட்டு மக்களுக்கு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் என்பவற்றை குறைந்த விலைகளிலேயே அரசாங்கம் வழங்கி வந்தது.
இதற்காக ஏற்படும் மேலதிக செலவுகளை திறைசேரியினால் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், தற்போதைய நிலைமையில் 
அதனை செய்ய முடியாது.
மண்ணெண்ணெய் தற்போது 87 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 420 ரூபா செலவாகின்றது
எரிபொருளை சரியாக விநியோகிக்க வேண்டுமாயின் அதில் நஷ்டம் ஏற்படக்கூடாது. கூட்டுத்தாபனம் இதுவரை குறைந்த விலையில் மண்ணெண்ணெயை வழங்கி வந்தது. இதனை தொடர்ந்தும் 
செய்ய முடியாது.
மண்ணெண்ணெய் விலையை அதிகரித்தால், மீனவர்கள் மீது அரசாங்கம் தாக்குதல் தொடுக்கின்றது என்று குற்றம் சுமத்துவார்கள். மறுபுறம் அவர்கள் எரிபொருளை தருமாறு கோரி கோஷமிடுகின்றனர். எரிபொருளை தொடர்ந்தும் வழங்க வேண்டுமாயின் நஷ்டமின்றி அதனை விற்பனை 
செய்ய வேண்டும்.
கடனை திரும்ப செலுத்த எமக்கு நிவாரண காலம் தற்போது கிடைக்காது. கடனை உடனடியாக திரும்ப செலுத்த வேண்டும். டொலர்களை போலவே ரூபாவை சேகரிப்பது தற்போது பிரச்சினையாக உள்ளது.
இதன் காரணமாகவே பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின்
 கடன் வரையறை அதிகரிக்குமாறு யோசனை முன்வைக்கப்படுகிறது. பிரதமரும் அது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார்” 
எனக் குறிப்பிட்டார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.