சனி, 28 பிப்ரவரி, 2026

இலங்கை கட்டுநாயக்கவில் சிக்கிய சிவப்பு பிடியாணை சந்தேகநபர்

நாட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தி மேற்கொள்ளப்பட்ட இரட்டைக்கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். 
குறித்த சந்தேகநபர் நேற்று (27) கட்டார் நாட்டிலிருந்து நாட்டை வந்தடைந்தபோது, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது 
செய்யப்பட்டுள்ளார். 
கடந்த 2022.03.24 அன்று கடவத்தை பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது டி-56 ரக துப்பாக்கியால் சுடப்பட்டு இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. 
இந்தக் குற்றச் செயல் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர், மஹர நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 
பின்னர் பிணையில் விடுதலையான அவர், நீதிமன்ற உத்தரவுகளை மீறி வெளிநாடு தப்பிச் சென்றிருந்தார். இதன் காரணமாக அவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 
கைது செய்யப்பட்டவர் சியம்பலாபே பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவராவார். கடவத்தை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கம்பஹாவில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

நாட்டில் மாவட்டம் பமுனுகம, முத்துராஜவெல பகுதிகளில், சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் கோடா வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (27) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பமுனுகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையில், சந்தேகநபரிடமிருந்து 168 லீற்றர் 750 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 2,835 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டது. 
இதன்போது சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் உஸ்வெட்டகெய்யாவ் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபராக அடையாளம் காணப்பட்டார். 
பமுனுகம பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

நாட்டில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தாயும் மகனும் கைது

நாட்டில் மலர்ச் சாலையொன்றை நடத்தும் போர்வையில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவரை பாணந்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது பாணந்துறை வடக்கு பிரதேசத்தில் இயங்கி வந்த பிரபலமான மலர்ச் சாலை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் நேற்று (25) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், இந்த மலர்ச் சாலையின் உரிமையாளரான மகனும் அவரது தாயாரும் 21 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மகனுக்கு 39 வயது எனவும், தாயாருக்கு 69 வயது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கபடவுள்ளதாக பொலிஸார் 
கூறுகின்றனர்.
சந்தேகநபர்கள் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் மக்களின் கருத்தை திரட்டிஅமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை

பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில்
 முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இன்று பொது அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடன் குறித்த நடவடிக்கை இடம்பெற்றது.
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் மற்றும் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு தேவையில்லை என்பதை வலியுறுத்தி அந்த கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதன்போது பெருமளவில் பொதுமக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு தபால் அட்டைகளில் தமது கருத்துக்களை பதிவு செய்து வழங்கியிருந்தனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 26 பிப்ரவரி, 2026

நாட்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவு - சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்

நாட்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்ததைத் தொடர்ந்து மாணவர்களிடையே ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தடுக்க காவல்துறை சிறப்பு பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 
 பிப்ரவரி 17 ஆம் திகதி தொடங்கிய பரீட்சை26-02-2026. இன்று ..
முடிவடைய உள்ளது. 
 கடந்த ஆண்டுகளில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் தேர்வுகள் முடிந்த பிறகு ஒழுங்கீனமான நடத்தையில் ஈடுபட்டதாக பதிவான சம்பவங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் ஒரு அறிக்கையை
 வெளியிட்டுள்ளது.
 இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாமல் தடுக்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்கவும், தங்கள் குழந்தைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


கிரான்ஸ்-மொன்டானா மதுபான விடுதி விபத்து - பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

சுவிஸ் கிரான்ஸ்-மொன்டானாவில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் 50,000 பிராங் இழப்பீட்டை வழங்க சுவிஸ் அரசாங்கம்
 திட்டமிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிதி சிக்கல்களைச் சமாளிக்க விரைவான மற்றும் நேரடியான ஆதரவை வழங்குவதற்காக இந்த கட்டணம் வழங்கப்படவுள்ளது.
சுவிட்சர்லாந்தின் நிர்வாக அமைப்பான ஃபெடரல் கவுன்சில், இந்த பங்களிப்பை சமூக ஒற்றுமையின் ஒரு முக்கிய சைகையாகவும், கூட்டமைப்பின் ஆதரவின் அடையாளமாகவும் கருதுவதாகக் கூறுகிறது.
ஒற்றுமை இழப்பீட்டுத் தொகையை அங்கீகரிக்க அவசர கூட்டாட்சி சட்டத்தை ஃபெடரல் கவுன்சில் அங்கீகரித்துள்ளது மற்றும் தேவையான கூடுதல் நிதியை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
மார்ச் மாதம் அதன் வசந்த கால அமர்வின் போது கூட்டாட்சி சட்டமன்றம் அவசரகாலச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் பணம் விரைவாக விடுவிக்கப்படும்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 25 பிப்ரவரி, 2026

நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ரணிலை சந்தித்த எதிர்கட்சி தலைவர்கள் - சமகால அரசியல் குறித்து கலந்துரையாடல்

கொழும்பில்.எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு ஒன்று 25-02-2025. இன்று  காலை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் உயர்மட்டக் கூட்டமொன்றை நடத்தியுள்ளன. 
இதன்போது எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக
 தெரியவருகிறது. 
கட்சித் தலைவர்களிடையே ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல் மற்றும் தற்போதைய நிலக்கரி கொள்முதல் சர்ச்சை, பாதாள உலகக் கொலைகள் மற்றும் எரிவாயு விநியோக நெருக்கடி உள்ளிட்ட தேசிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
கொழும்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் உதய கம்மன்பில, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜி.எல். பீரிஸ், மஹிந்த அமரவீர, சாகல ரத்நாயக்க மற்றும் தலதா அதுகோரளே உள்ளிட்ட பல மூத்த அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டமை என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இந்த ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதித் துறை 13.71 சதவீதம் வளர்ச்சி

இந்த ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதித் துறை 2026 ஆம் ஆண்டை வலுவான வேகத்தில் தொடங்கியது, ஆண்டுக்கு ஆண்டு 13.71% வலுவான 
வளர்ச்சியைப் பதிவு செய்தது. 
இது வெளிப்புற வர்த்தக செயல்திறனில் புதுப்பிக்கப்பட்ட வேகத்தைக் குறிக்கிறது என்று இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB) தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான மதிப்பிடப்பட்ட ஏற்றுமதி புள்ளிவிவரங்களுடன், மொத்த ஏற்றுமதி வருவாய் 1,532.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
இந்த நேர்மறையான செயல்திறன் முக்கிய ஏற்றுமதித் துறைகளில் பரந்த அளவிலான வளர்ச்சியையும், உலகளாவிய 
தேவை நிலைமைகளை மேம்படுத்துவதையும், ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கான நீடித்த தேசிய முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது என்று EBD குறிப்பிட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

நாடுமுழுவதும் 400000 நிரந்தர ஓட்டுநர் உரிமம் விநியோகிப்பு

நாடுமுழுவதும்  தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு நிரந்தர ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதற்கமைய இதுவரை  400,000 நிரந்தர ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் துறை
 தெரிவித்துள்ளது.
நிரந்தர ஓட்டுநர் உரிம அட்டைகள் பற்றாக்குறை காரணமாக ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு சமீபத்திய மாதங்களில் தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டன.
கூடுதலாக 100,000 நிரந்தர ஓட்டுநர் உரிமங்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளன என்றும், வரும் நாட்களில் தற்காலிக ஓட்டுநர் உரிமம் 
வைத்திருப்பவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.   
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் .வடக்கின் இதயமாக மாறுகின்றது மாங்குளம் 10 ஆண்டுகால அபிவிருத்தித் திட்டம் ஆரம்பம்

.கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வடக்கின் மையமாக மாங்குளத்தைக் கட்டியெழுப்புவோம் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி அதிகார சபையால் புதுக்குடியிருப்பு, மாந்தை கிழக்கு மற்றும் வவுனியா வடக்கு ஆகிய பிரதேச சபைகளுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் மாங்குளம் நகர அபிவிருத்தித் திட்டத்தின் (2026 – 2036) உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வும், முதலாவது பங்குதாரர்கள் கூட்டமும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், எமக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் நாம் உரிய முறையில் பயன்படுத்தி, மாகாணத்தின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவை மீண்டும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே என்று குறிப்பிட்ட ஆளுநர், எமக்குத் தேவையானவற்றை நாமே கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
"நான் முல்லைத்தீவு மாவட்டச் செயலராகக் கடமையாற்றிய காலத்தில், மாங்குளத்தை வடக்கு மாகாணத்தின் மையமாக அடையாளப்படுத்தி அதற்கான நிலப்பரப்புகளும் ஒதுக்கப்பட்டன. எனினும், அத்திட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. 
போரின் பின்னர், ஏ-9 பிரதான வீதியில் அமைந்துள்ள மாங்குளம் நகரம் வலுவிழந்த நிலையில் காணப்படுவது கவலைக்குரியது. அதனை மாற்றியமைத்து, நகரத்தை மீளக் கட்டியெழுப்பும் பெரும் முயற்சியின் ஒரு வெளிப்பாடாகவே இத்திட்டம் அமைந்துள்ளது." என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி இயங்கும் வடக்கு மாகாண சபையின் பல திணைக்களங்களை, படிப்படியாக மாங்குளத்தை நோக்கி நகர்த்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநர் இதன்போது வெளிப்படுத்தினார்.
வடக்கு மாகாணம் வளங்கள் நிறைந்ததாக இருந்
தும், வறுமை நிலையில் முன்னிலையில் உள்ள முரண்பாட்டைத் தகர்க்க, நகர அபிவிருத்தி அதிகார சபையின் இத்திட்டம் பெரும் 
உறுதுணையாக அமையும் என்றும் நம்பிக்கை வெளியிட்ட அவர், தமது கோரிக்கைக்கு அமைவாக இந்தக் கூட்டத்தை விரைவாக ஏற்பாடு செய்த நகர அபிவிருத்தி அதிகார சபையினருக்குத் தனது விசேட நன்றிகளையும் தெரிவித்தார்.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் வரவேற்புரையாற்றிய நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் திஸாநாயக்க, எதிர்வரும் 10 ஆண்டுகாலத் திட்டத்தைத் தயாரிக்கும்
 இம்முதலாவது கூட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் தொடர்ச்சியான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய புதுக்குடியிருப்பு
 பிரதேச சபையின் தவிசாளர், கடந்த ஆண்டு 
சபையைப் பொறுப்பேற்றதன் பின்னர் ஆளுநருடன் இணைந்து மாங்குளம் நகரத்துக்கு மேற்கொண்ட களப் பயணத்தின் தொடர்ச்சியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையை
 வரவேற்றதுடன், அங்குள்ள பஸ் நிலையத்தை 
மீள இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் கருத்துத் தெரிவிக்கையில், மாங்குளம் நகர அபிவிருத்தித் திட்டத்துக்குள் தமது சபைக்குட்பட்ட நான்கு கிராமங்களும் உள்வாங்கப்பட்டுள்ளமையால், அக்கிராமங்களின் வளர்ச்சிக்கு இத்திட்டம் பெரும் வாய்ப்பாக அமையும் என்று நம்பிக்கை 
வெளியிட்டார்.
அதேபோன்று, வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளரும், போரால் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள தமது பிரதேச சபையின் நான்கு வட்டாரங்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளமையை வரவேற்று, பிரதேசத்தின் வளர்ச்சிக்கான தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
பின்னர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் திருமதி கவிதா ஜீவகன், மாங்குளம் நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான முழுமையான தொழில்நுட்ப விளக்கங்களை
 வழங்கினார்.
அனைத்துப் பங்குதாரர்கள் மத்தியிலும் அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், திட்டமிடல் குழு, பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கிடையில் 
நெருக்கமான ஒத்துழைப்பை வளர்த்தல், எவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற தொலைநோக்குக் 
கருத்துக்களைப் பெறுதல், தற்போதைய சாத்தியக்கூறுகள் மற்றும் பிரச்சினைகளை அடையாளம் காணுதல் மற்றும் எதிர்கால அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்த ஆரம்ப யோசனைகளைச் சேகரித்தல் ஆகிய உயரிய இலக்குகளை மையமாகக் கொண்டே இன்றைய கூட்டம் 
அமைந்திருந்தது.
இந்நிகழ்வில், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், செயலாளர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கொழும்பு தலைமைப் பணிமனை மற்றும் வடக்கு மாகாணப் பணிமனை
 அதிகாரிகள், ஏனைய 
தொடர்புடைய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்றனர்
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 23 பிப்ரவரி, 2026

பனிப்புயல் காரணமா நியூயார்க் நகரத்தை முழுவதுமாக மூட உத்தரவு

நியூயார்க் நகரத்தைத் தாக்கிய கடுமையான பனிப்புயல் காரணமாக,22-02-2026. அன்று  இரவு 9:00 மணி முதல் நகரத்தை முழுவதுமாக மூட (லாக்டவுன்) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 நகரத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளும் மூடப்பட்டுள்ளன, மேலும் பேருந்துகள் மற்றும் விமானங்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக 
நிறுத்தப்பட்டுள்ளன. 
 இந்த பனிப்புயல் திங்கள் கிழமை பிற்பகல் வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய சேவைகள் தவிர பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் குமண தேசிய பூங்காவிற்குள் நுழைந்து வேட்டையாடிய ஆறு பேர் கைது

நாட்டில் குமண தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியைப் படகு மூலம் கடத்திச் சென்ற ஆறு பேரை விசேட அதிரடிப்படையினர் (STF) கைது 
செய்துள்ளனர்.
அறுகம்பே விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட தொடர் சுற்றிவளைப்புகளின் போதே இந்தச் சந்தேகநபர்கள் பிடிபட்டுள்ளனர்.
அதிரடிப்படையினரின் கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் போது இரண்டு வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
 இதன் போது கடற்கரைப் பகுதியில் வைத்து இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் 57 கடலாமை முட்டைகள் அவர்கள் வசம் இருந்து மீட்கப்பட்டன.
வனவிலங்கு இறைச்சிகள் ஒரு தொகை மற்றுமொரு சோதனையில் மீட்கப்பட்டன. இதில் 17 கிலோ கிராம் மானிறைச்சி 56 கிலோ கிராம் காட்டு எருமை இறைச்சி மற்றும் 16 கிலோ கிராம் மான்
 மற்றும் எருமையின் ஈரல் என்பன உள்ளடங்குகின்றன.
மேலும் கடல் வழியாக இந்த இறைச்சிகளைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு பைபர் படகு, 25 குதிரைத்திறன் கொண்ட வெளிச்செல்லும் இயந்திரம் (Outboard engine) மற்றும் 
இரண்டு எரிபொருள் கொள்கலன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட 
இறைச்சி மற்றும் ஏனைய பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக லாகுகலை வனஜீவராசிகள் அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


போர்னியா தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

.மலேசியாவின் சபா  மாநிலத்தில் உள்ள போர்னியா  தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
7.1 ரிக்டர் அளவில் பதிவான குறித்த நிலநடுக்கமானது 100 கி.மீ.க்கும் குறைவான ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் குறித்த நிலநடுக்கத்தினால் எவ்வித உயிரிழப்புகளும் பதிவாகவில்லை  என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும்

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

 இலங்கையில் இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் 
வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 312.53 ரூபா
ஜப்பானிய யென் 2.04 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 422.49 ரூபா
யூரோ 369.04 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 224.28 ரூபா
சுவிஸ் பிராங் 405.75 ரூபா
கனடிய டாலர் 229.59 ரூபா
கத்தார் ரியால் 86.62 ரூபா
குவைத் தினார் 1033.02 ரூபா
சவுதி ரியால் 84.11 ரூபா
என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் .

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் .புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம் - மக்களுக்கு அழைப்பு.

நாட்டில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டம் நாளை நடைபெறவுள்ளது. 
இதற்காக வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு அழைப்பு 
விடுக்கப்பட்டுள்ளது. 
பயங்கரவாத தடைச் சட்டமே வேண்டாம் என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்படும் இந்த கையெழுத்து போராட்டம் நாளை காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் .

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



சனி, 21 பிப்ரவரி, 2026

நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில்  பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் நிலவுவதாகவும், 21-02-2026.இன்று மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கும் என்றும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி,
  வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன்
 கூடிய மழை பெய்யும். 
அதேநேரம் பிற இடங்களில்  பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. 
சில பகுதிகளில் 75MM மழைவீழச்சி பதிவாகும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளதுடன், மக்கள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் .புதுக்குடியிருப்பில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட குடும்ப பெண்

நாட்டில் . முல்லைத்தீவு மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 6.5 கிராம் கஞ்சாவுடன் குடும்பப் பெண் ஒருவர் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல். அடசூரிய அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின்படி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர், தனது வீட்டில் விற்பனை நோக்கத்திற்காக 6.5 கிராம் கஞ்சா வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

பணிப்பாளர் எச்சரிக்கை யாழ்.போதனாவைத்தியசாலைக்குள் வெற்றிலை துப்பினால் கடுமையான நடவடிக்கை

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் வெற்றிலை துப்புவோருக்கு எதிராக  காவல்துறையினா்  ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.  இது குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் 
குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தினசரி பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தரும், மிகுந்த நெரிசல் கொண்ட சுகாதார நிலையமாகும். இவ்வளவு பெரும் மக்கள் வருகையுள்ள சூழலில் வைத்தியசாலையை சுத்தமாகவும் சுகாதாரத் தரநிலைகளுக்கு இணங்கவும் பேணுவது எங்களின் முதன்மை பொறுப்பாகும்.
இத்தகைய நோக்கத்துடன், நூற்றுக்கும் மேற்பட்ட சுத்திகரிப்பு தொழிலாளர்கள் தினமும் இரவு பகலாக பணியாற்றி, வார்டுகள், நடைபாதைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் மிகுந்த 
தூய்மையுடன் பராமரித்து வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பு சேவையால் வைத்தியசாலை சுத்தமான சூழலை நிலைநிறுத்தி வருகிறது.
ஆயினும், சிலர் வெற்றிலைப் பயன்படுத்தி எச்சில் துப்புவதன் மூலம் வைத்தியசாலை வளாகத்தில் அசுத்தமும் அசௌகரியமும் ஏற்படுகிறது. இது சுகாதாரத் தரநிலைகளுக்கு முரணானதோடு, நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களின் நலனுக்கும் பாதிப்பை 
ஏற்படுத்தக்கூடியது.
அரசாங்கத்தின் பொது இடங்களை பாதுகாக்கும் விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு 
அமைவாக, வைத்தியசாலை வளாகத்தில் வெற்றிலைப் பயன்படுத்துதல் மற்றும் எச்சில் துப்புதல் முற்றாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பல அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைத்தியசாலை முழுவதும் 
பதியப்பட்டுள்ளன.
இனிவரும் காலங்களில் இத்தடை மீறப்படின், சம்பந்தப்பட்டவர்கள்  காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்காக அனுப்பப்படுவார்கள் என்பதை பொதுமக்களின் கவனத்திற்கு 
கொண்டு வருகிறோம்.
இந்த வைத்தியசாலை உங்கள் அனைவரின் வைத்தியசாலையாகும். அதனை சுத்தமாகவும் சுகாதாரமான சூழலுடனும் பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். எனவே, இத்தகைய 
செயல்களில் இருந்து
 முழுமையாக விலகி, சுத்தம் மற்றும் ஒழுங்கை பேணுவதில் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

நாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் தமது உறவுகளை தேடி ஆரம்பித்த போராட்டம் 09வது ஆண்டு இன்று நிறைவடைகின்ற நிலையில் தமது உறவுகளுக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சி நகர் சித்தி விநாயகர் ஆலயம் முன்பாக காலை 10.30மணிக்கு ஆம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் பேரணியாக சென்று டிப்போ சந்தி மீனாட்சி அம்மன் ஆலயம் முன்பாக நிறைவடைந்தது. 
2017ம் ஆண்டு 02ம் மாதம் 20ம் திகதி கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தமது உறவுகளைத்தேடி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 
தொடர்ந்து சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் 3287 நாட்கள் நிறைவடைந்துள்ளது
.வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 
உறவினர்களாகிய நாங்கள் யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களை கடந்தும் தொடர்ச்சியாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை கிளிநொச்சி மாவட்டத்தில் கந்தசாமி கோவில் முன்றலில் 20.02.2017 அன்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 
இன்றுடன் 3287 நாட்களைக் கடந்தும் எந்த வித பதிலும் நீதியும் கிடைக்கப் பெறவில்லை.
நாம் தள்ளாடும் முதிர்ந்த வயதிலும் நாம் தொடர்ந்தும் போராடி வருகின்றோம், பிள்ளைகளைத் தேடி அலையும் தாய்மார்களாகிய எங்களின் கண்ணீருக்கு என்ன பதில்? மீண்டும் சர்வதேச நாடுகளுக்கு
 நாம் வலியுறுத்துவது யுத்தத்திற்கு முன்பும் பின்பும் எமது தமிழ் இனத்துக்கு நடைபெற்ற இன ஒடுக்குமுறைகளின் மிக உச்சக்கட்டமாக 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இனவழிப்புக்கு இது வரை நீதி கிடைக்கவில்லை, நாம் எம் கண் முன்னே பார்த்து சொல்லனாத் துயரத்தை 
அனுபவித்தோம்.
குறிப்பாக புதைகுழிகள் பல மூடப்பட்டுள்ளன. தற்போது செம்மணி புதைகுழிக்கான அகழ்வுப்பணிகள் இடை நிறுத்தப்பட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுகொண்டு 
இருக்கின்றது. 
எனவே அதற்கான சர்வதேச தலையீடு அவசியம் என்பதனை வலியுறுத்தி நிற்கின்றோம். படுகொலையை செய்யும் இராணுவத்திற்கு பதவி உயர்வு வழங்கும் நாட்டில் எமக்கான நீதி 
வழங்கப்பட மாட்டாது . 
எனவே தான் நாம் சர்வதேச நீதி கேட்டு 3287 நாட்களைக் கடந்து போராடி வருகின்றோம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சாட்சிகளாக இருந்த 400 மேற்பட்ட தாய் தந்தையரை இழந்து 
நிற்கின்றோம். 
அவர்களின் பிள்ளையின் உண்மை நிலை அறியாமல் ஏக்கத்துடன் மரணித்து விட்டார்கள். 
மிகுதியாக எஞ்சியிருக்கும் சாட்சியங்களாக இருக்கின்ற நாங்களும் இறப்பதற்கு முன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என கண்டறிய சர்வதேச சிறப்பு சுயாதின விசாரணையை வலியுறுத்தி நிற்கின்றோம். எனவே பின்வரும் கோரிக்கைகளையும் 
முன்வைக்கின்றோம் 
1.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும். 
2.அரசியல் கைதிகள் நிபந்தனை இன்றி உடனடியாக விடுதலைசெய்யப்படவேண்டும்.
3. நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடை சட்டத்தை[P.T.A]அத்தோடு புதிதாக அமுல்படுத்த இருக்கும் பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம்[PSTA] இரண்டு சட்டங்களும் உடனடியாக நீக்கப்படவேண்டும். 4. இராணுவ முகாம்கள் வட கிழக்கில் 
மூடப்பட வேண்டும். 
5.வட கிழக்கில் மனித புதைகுழிக்கான அகழ்வு பணியை கண்காணிக்க சர்வதேச நிபுணர்களின் தலையீடுவேண்டும். 
6. பத்திரிகையாளர்கள், மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் புலனாய்வுத் துறையின் அச்சுறுத்தல் உடனடியா 
நிறுத்தப்பட வேண்டும். 
7. பொளத்த மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும். 
8. எமது தாயகத்தின் வளச் சுரண்டல்
 நிறுத்தப்படவேண்டும். 
9. அனத்து வகையாக தாயகத்தில் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




வியாழன், 19 பிப்ரவரி, 2026

உங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகளால் ஏற்படும் ஆபத்து

 பூனைகள் மூலம் இலங்கையில் ரேபிஸ் தொற்று பரவுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள்
 தெரிவித்துள்ளனர்.
 கடந்த ஆண்டு பதிவான பெரும்பாலான ரேபிஸ் தொற்றுகள்  பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான பூனைகளால்  ஏற்பட்டதாக தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
 ஆபத்தான நோயாக கருதப்படும் ரேபிஸ் நோய்,  
நாய்கள், பூனைகள், நரிகள், அணில்கள், வௌவால்கள், கீரிகள், கால்நடைகள் மற்றும் குதிரைகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட விலங்குகளின் கடி அல்லது கீறல்கள் மூலம் பரவக்கூடும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


.நாட்டில் புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தையும் முற்றாக நிராகரிப்பதற்கு தீர்மானம்

.நாட்டில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாளிகிதன் .19.02.2026. இன்றைய தினம்ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு இருந்தார்.
   குறித்த ஊடக சந்திப்பு வாயிலாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கரைச்சி பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு 18.02.206 நேற்று நடைபெற்றது. இதன்போது பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பாக பெரும் விவாதம் பல மணி நேரம் நடைபெற்றது.
  குறித்த விவாதத்தின் கடந்த 1979 ஆம் ஆண்டிலிருந்து பயங்கரவாத தடைச் சட்டமானது பல்வேறு வகையில்   தமிழ்மக்களை அடிமைப்படுத்தி ஆட்கொண்டிருக்கின்றது.   
ஜனாதிபதி  ஆட்சிக்கு வரும்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதாகவும் தெரிவித்திருந்தார் தற்பொழுது கூறுகிறார் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக புதிய பயங்கரவாத தடைச் சட்டம் ஒன்றை அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
  குறித்த விடயம் தொடர்பாக நேற்றைய சபை அமர்வில் பல மணி நேரம் விவாதிக்கப்பட்டது.   விவாதத்தின் போது தமிழ் மக்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் அமையாது என்ற வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நிராகரிப்பதாக ஏகமனதாக தீர்மானம்
 எடுக்கப்பட்டது.
   இதன்போது சபை அமர்வில் கலந்து கொண்ட 37 பேரில் 36 பேர்கள் ஏகமனதாக தமது பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர்” எனக் கூறினார். 
   இதேவேளை  கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் கட்டாகாளி கால்நடைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் வீதிகளில் மற்றும் பொது இடங்களில் மக்களுக்கு பல அசைவுகரியங்களை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் வீதி விபத்துக்களை ஏற்படுத்தி வருவதாகவும் பொலிஸாரால் கரைச்சி பிரதேச 
சபையிடருக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகிறது. 
 இதன் காரணமாக குறித்த விடயம் தொடர்பாக
 எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.  
$என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 18 பிப்ரவரி, 2026

நாட்டில் ரூபாய் ஐயாஆயிரத்தை கையூடலாக பெற்ற நீதிபதி கைது

நாட்டில் வாழைச்சேனையில் உள்ள கோறளைப்பற்று பகுதியில் கடமையாற்றும் நீதிபதி ஒருவர் 5000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) நேற்று அவரை கைது செய்துள்ளதாக 
அறிவித்துள்ளது. 
ஓட்டமாவடியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆணையம்
 தெரிவித்துள்ளது. 
சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட மனைவி குழந்தை பராமரிப்பு கொடுப்பனவுகள் கோரி பராமரிப்பு வழக்கு தொடர்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 
முறைப்பட்டாளர் தேவையான கொடுப்பனவுகளைச் செய்யத் தவறியதால், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு எதிராக திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது. 
இந்நிலையில்  திறந்த பிடியாணையை இரத்து செய்ய வேண்டி குறித்த வழக்கின்   சான்றளிக்கப்பட்ட நகலை வழங்க மேற்படி நீதிபதி  5,000 ரூபாயை லஞ்சமாக பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பில்  லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


.நாட்டில் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து மறுக்கப்படும் நீதி சபையில் சிறீதரன் சுட்டிக்காட்டு

யாழ் அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் செயற்பாடுகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் நிலை தொடர்பில் நிலையான 
விசாரணை அவசியம், இதற்கு இது வரையில் சரியான
 விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் 
குற்றம் சாட்டியுள்ளார். 
நாடாளுமன்றத்தில் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். 
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டிப் பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் ஒருவர் 
உயிரிழந்தார். 
இந்த சிறுவனின் உறவினர் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் இந்த சம்பவத்துக்கும் நீதி
 கிடைக்கவில்லை. 
 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு 2026.01.13 ஆம் திகதியன்று ' இலங்கையில் மோதல்கள்சார் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள்' தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை 
வெளியிட்டுள்ளது. 
இந்த அறிக்கை தொடர்பில் அரசாங்கமோ அல்லது விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரோ பதிலளிக்கவில்லை. இலங்கையில் 1983 -2009 வரையான காலப்பகுதியில் பாலியல் ரீதியான வன்முறைகள் தீவிரமடைந்தன. 
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் 23 பெண்களும், 04 ஆண்களும் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து சாட்சியமளித்துள்ளார்கள்.அறிக்கையில் ஆதாரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 
 1983 -2009 வரையான காலப்பகுதியில் பாலியல் ரீதியான சித்திரவதைகள் இந்த நாட்டில் கூர்மையடைந்தன. குற்றவாளிகள் பலர் இன்றும் சுதந்திரமாக உள்ளார்கள். ஒருசிலர் பதவிகளிலும் உள்ளார்கள். இந்த
 அரசாங்கம் சட்டத்தை மதித்து செயற்படுவதாயின் இந்த அறிக்கையை 
அடிப்படையாகக் கொண்டு முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். 
 யுத்த சூழலில் உயிர்பிழைத்தவர்கள் புகாரளிப்பதற்கு
 முடியாத அளவுக்கு பல்வேறுப்பட்ட வகையில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். நீதிக்கான காத்திருப்பும் காலவோட்டத்தில் 
கேள்விக்குள்ளாக்கப்படுவது நீதி பொறிமுறைக்கு முரணானது. ஆகவே இந்த அறிக்கை பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளது .
 ஆகவே நீதி வழங்கலில் இந்த அறிக்கையை ஒரு ஆதாரமாக கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

நாட்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பம்

நாட்டில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண த
ரப் பரீட்சை .17-02-2026.இன்று  ஆரம்பமாகவுள்ளது. 
 பரீட்சைகள் திணைக்களத்தின்படி, நாடு முழுவதும் 3,545 மையங்களில் மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் பரீட்சை 
எழுதவுள்ளனர். 
 பரீட்சை இன்று முதல் 2026 பிப்ரவரி 26 வரை நடைபெறும். பரீட்சார்த்திகள் பரீட்சை தொடங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அந்தந்த தேர்வு மையங்களுக்கு சமூகமளிக்க
 வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

Blogger இயக்குவது.