திங்கள், 26 ஆகஸ்ட், 2024

கொழும்பு துறைமுகத்தில் .சீனாவில் இருந்து வருகை தந்துள்ள இராணுவ கப்பல்கள்

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் மூன்று போர்க்கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
"HE FEI", "WUZHISHAN" மற்றும் "QILIANSHAN" ஆகிய மூன்று போர்க்கப்பல்களும் 26-08-2024இன்று காலை வந்துள்ளதாக கடற்படை
 தெரிவித்துள்ளது.
அந்தவகையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Destroyer ரக போர்க்கப்பலான "HE FEI" 144.50 மீற்றர் நீளம் கொண்டதுடன் 267 பணியாளர்களைக் கொண்டது.
Landing Platform Dock வகையின் "WUZHISHAN" போர்க்கப்பல் 210 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 872 பணியாளர்களைக் 
கொண்டுள்ளது.
Landing Platform Dock வகையின் "QILIANSHAN" போர்க்கப்பல் 210 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 334 பணியாளர்களைக் 
கொண்டுள்ளது.
ஒரு பயிற்சிக்குப் பிறகு, கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு ஆகஸ்ட் 29 அன்று தீவிலிருந்து புறப்பட உள்ளது.
குறிப்பிடத்தக்கது. என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.