ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

இலங்கையில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளாகக் காட்டிக் கொண்டு பணம் வசூலிக்கும் கும்பல்


இலங்கையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் கூற்றுப்படி, ஒரு குறிப்பிட்ட குழுவினர் வர்த்தகர்களிடம் சென்று உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளாகக் காட்டிக் கொண்டு பணம் வசூலிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பணம் எடுக்க வருபவர்களிடம் பணம் கொடுப்பதை தவிர்க்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவிக்கிறது.
இவ்வாறானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் வகையில் இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களம் இலங்கை பொலிஸில் முறைப்பாடு 
செய்துள்ளது.
இவ்வாறு அறவிடப்படும் தொகைக்கு தாம் பொறுப்பல்ல என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பில்
 தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தால் நிர்வகிக்கப்படும் அனைத்து வகையான வரிகள் தொடர்பாகவும், வரி வசூல் நிலுவைத் தொகைகள் முறையாக எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ச
ட்டப்பூர்வமாக மட்டுமே செய்யப்படும் என அனைத்து வரி செலுத்துவோருக்கும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும், வரி செலுத்துவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் அருகில் உள்ள பிராந்திய அலுவலகம் அல்லது உள்நாட்டு இறைவரி
 திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு வந்து பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளுமாறு உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் மேலும் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.என்பது  குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.