செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

ஜேர்மனியில் வேலை பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த ஒருவர் கைது

வெளிநாட்டு தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக கூறி 24 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபர் கந்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 
119 தகவல் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  
சந்தேக நபர் பேலியகொட பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. 
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஜேர்மனியில் வேலை பெற்றுத் தருவதாக கூறி மாவட்ட நீதிபதி மற்றும் சட்டத்தரணி போன்று நடித்து 24 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
நிதி மோசடி தொடர்பில் கெசல்வத்தை பொலிஸில் 03 முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.