வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

நாட்டில் பல தரப்பினரையும் சந்தித்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்

இலங்கையின் சமகால பொருளாதார நிலைவரம் மற்றும் மறுசீரமைப்புக்களில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் நோக்கில் இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச நாணய நிதிய$
 அதிகாரிகள் குழு, ஜனாதிபதி, எதிர்க்கட்சித்தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை 
நடத்தியுள்ளது.
 சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையினால் எட்டப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் நாட்டின் பொருளாதாரத்தில் அடையப்பட்டுள்ள சாதக மாற்றங்கள் மற்றும் நாணய 
நிதியத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை 
நடைமுறைப்படுத்துவதில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்பன தொடர்பில் ஆராயும் நோக்கில் சர்வதேச நாணய
 நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப்பிரதானி பீற்றர் ப்ரூவர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கொழும்புக்கு
 வருகைதந்துள்ளனர். 
 இதன்போது அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ
 தலைமையிலான பிரதிநிதிகள், வர்த்தக அமைப்புக்களின் தலைவர்கள், தொழிற்சங்கப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர். 
 இச்சந்திப்புக்களின் முடிவில் ஊடக சந்திப்பொன்றை நடாத்துவதற்கு உத்தேசித்திருக்கும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், அதில் தமது அவதானிப்புக்கள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து
 அறிவிக்கவுள்ளனர். 
அது இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் மூன்றாம் கட்ட மீளாய்வாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.குறிப்பிடத்தக்கது  என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.