சனி, 24 ஆகஸ்ட், 2024

நாட்டில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணிலுக்கே ஆதரவு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் பேசி எமது பிரச்சனைகளை தீர்க்க முடியும். முன்னாள் போராளிகள் தொடர்பான 5 கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். அதனால் ஜனாதிபதி தேர்தலில் எமது ஆதரவு ரணில் அவர்களுக்கே என புனர்வாழ்வு 
அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் இன்பராசா தெரிவித்துள்ளார்.  
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பு இன்று (24.08) வவுனியா, இரண்டாம் குறுக்குதெருவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. 
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவித்த அவர், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்து இருந்தோம். யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் முன்னாள் போராளிகள் கைவிடப்பட்ட 
நிலையில் உள்ளனர். 
தமிழ் அரசியல்வாதிகள் தமக்குள் பதிவிக்காக சண்டை பிடிக்கிறார்களே தவிர முன்னாள் போராளிகள் தொடர்பில் பேசுவதில்லை.
 எமது முன்னாள் போராளிகளுக்கு உதவி செய்பவர்களும், வெளிநாட்டில் இருந்து எம்மோடு இணைந்து பயணிப்பவர்களும் எம்மை ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்திக்க சொன்னார்கள். 
நாம் சந்தித்து ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க அவர்களுடன் பேசியிருந்தோம். இதன்போது 
எமது கோரிக்களை ஆழ்மனதுடன் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், நிச்சயமாக எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக 
தெரிவித்ததன் பிரகாரம் எமது கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிப்பதாக முடிவெடுத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல தடவை பிரதமராக இருந்தவர்
. ஜனாதிபதியாக உள்ளார். 
சிறந்த ராஜதந்திரி. எமது போராட்ட வரலாறு தெரியும். தற்போது சாரைப் பாம்பு போன்று நாம் உள்ள நிலையில் நாம் தான் பேச வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசுவது தான் பொருத்தமானது. அதனால் நாம் அவரை நம்புகிறோம். வடக்கு கிழக்கில் உள்ள முன்னால் போராளிகளுக்கு 
பாதுகாப்பு வேண்டும். 
வீணாக போராளிகளை அழைத்து விசாரணைகள் என்ற ரீதியில் கைதுகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். வடக்கு கிழக்கில் உள்ள முன்னால் போராளிகளுக்கு தங்களூடாக உதவித்திட்டங்கள்
 மற்றும் பொருளாதார ரீதியான செயல்திட்டங்களை 
மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் உட்பட ஐந்து 
கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். 3000 பேரின் பெயர் விபரங்களும் வழங்கியுள்ளோம். அவர்களுக்கு முதல் கட்டமாக வேலைத் திட்டங்களை வழங்குவதாக தெரிவித்தார்.  
ரணில் விக்கிரமசிங்க ஒரு நரி அவரிடமே நாம் பேச்சுவாதர்த்தை செய்தோம் என பாலா அண்ணை சொனனவர். அந்த வளர்ப்பில் வந்தவர்கள் தான் நாங்கள். அவர் நரியோ, எலியோ, புலியோ, சிங்கமோ பிரச்சனை
 இல்லை. நாங்கள் அவர் மீத நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் புலி. 
அவருக்கு தான் எமது வலி தெரியும். அவருடன் தான் நாம் பேச முடியும். எனவே, தமிழ் மக்களும், முன்னாள் போராளிகளும் சிலின்டர் சின்னத்துக்கு மாத்திரம் புள்ளடியிட்டு ரணில் விக்கிரமசிங்க அவர்களை 
வெற்றியடைய வைக்க வேண்டும் என தெரிவித்தார்.
குறிப்பிடத்தக்கது என்பதாகும்


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.