இலங்கையில் .2026 ஆம் ஆண்டுக்கான யால பருவப் பயிர்ச்செய்கையின் போது, கையிருப்பிலுள்ள யூரியா உரத்தை நெற்செய்கைக்கு மாத்திரம்
வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தித் திணைக்களம்
தீர்மானித்துள்ளது.
தற்போது கையிருப்பிலுள்ள உரத்தின் அளவு மட்டுப்படுத்தப்பட்ட மட்டத்தில் உள்ளதைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாடு முழுவதுமுள்ள விவசாய சேவை நிலையங்கள் ஊடாக மாத்திரமே இந்த உர விநியோகம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
பயிரிடப்பட்டுள்ள நிலத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டே விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நெற்செய்கை எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தற்போதுள்ள உரக் கையிருப்புகளை மிகவும் வினைத்திறனான முறையில் முகாமைத்துவம் செய்யுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதர பயிர்ச்செய்கைகளை விட நெற்செய்கைக்கு முன்னுரிமை அளித்து, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தத் தீர்மானத்தின் முக்கிய நோக்கம் என விவசாய அபிவிருத்தித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக