செவ்வாய், 27 டிசம்பர், 2022

நீங்கள் ஆட்டுஇறைச்சி வாங்கும்போது இனி இதை கவனமா பார்த்து வாங்குங்கள்

நீங்கள் ஆட்டிறைச்சியை எப்படி பார்த்து வாங்கலாம் அதில் என்னென்ன பயன்கள் இருக்கிறது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.பொதுவாக அசைவ உணவு என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு சிலர் தான் இறைச்சியை விரும்ப மாட்டார்கள்.
நாம் சாப்பிடும் பிராய்லர் சிக்கனை விட ஆட்டு இறைச்சி இகவும் சத்தானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆட்டு இறைச்சி சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் நமக்கு கிடைக்கும் என்று குறித்து 
இப்போது பார்க்கலாம்.
கடைக்கு சென்று ஆட்டிறைச்சி வாங்கும்போது ஆட்டின் கழுத்துப் பகுதி மற்றும் நெஞ்சுப் பகுதியை தான் பொதுவாக விரும்பி வாங்குவார்கள். ஏனென்றால் ஆட்டின் கழுத்துப்பகுதியில் உள்ள கறியானது மிகவும் மென்மையாகவும், சாப்பிட சுவையாக இருக்கும். மேலும் இது குழந்தைகளுக்கு 
சாப்பிட மிகவும் ஏற்றது
மேலும் ஆட்டின் கழுத்து பகுதியில் கொழுப்பு இருக்காது என்பதால் இது அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும். ஆட்டின் தொடைப்பகுதி சற்று சாப்பிடுவதற்கு கடினமாக இருந்தாலும் இதுவும் சுவையாக
 இருக்கும். ஆட்டின் மூளை சாப்பிடுவதால் ஆண்களுக்கு 
மலட்டுத்தன்மை நீங்கும், குழந்தைகளுக்கு நினைவாற்றலை அதிகரிக்கும், உடல் சூடு குறையும்.
ஆட்டுக்கால் சூப் செய்து சாப்பிடுவதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும், நெஞ்சு சளியை வெளியேற்றும். ஆட்டின் தலையை சமைத்து சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உள்ள சூடு குறையும். இதயம் சம்பந்தமான பிரச்சினைகளை தடுக்கும். மேலும் ஆட்டின் கொழுப்பு உடம்பிலுள்ள எப்பேற்ப்பட்ட வலி, ஆறாத புண் ஆகியவற்றை நீக்கக்கூடியது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.