கோவில் திருவிழாவில் மது குடித்து புதுமாப்பிள்ளை ஆடியதை உறவினர்கள் கண்டித்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை தச்ச நல்லூர் மங்களா குடியிருப்பை சேர்ந்தவர் துரைப்பாண்டி(வயது24) கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் ஆனது. இவர்களது குடும்ப கோவில்
தாழையூத்தில் உள்ளது.
இந்த கோவில் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது துரைப்பாண்டி மது குடித்துவிட்டு ஆடியுள்ளார். இதை அவரது உறவினர்கள் கேலி கிண்டல் செய்தனராம். இதையடுத்து துரைப்பாண்டியின் தாய் மற்றும் வீட்டினர் அவரை கண்டித்தனர்.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த துரைப்பாண்டி வீட்டுக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவில் விழா முடித்து வீட்டுக்கு வந்த துரைப்பாண்டியின் பெற்றோர் அவர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி
அடைந்தனர்.
இதுபற்றி தச்சநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டி தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக