சனி, 31 ஆகஸ்ட், 2024

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள கோரிக்கை

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு நாட்டை நேசிக்கும் உண்மையான ஐ.தே.க.ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சற்று முன்னர் பண்டாரவளையில் நடைபெற்ற "இயலும் ஶ்ரீலங்கா" வெற்றிப் பேரணியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதை தெரிவித்தார்.குறிப்பிடத்தக்கது ...

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

நாட்டில் கொழும்பில் புதிய கூட்டணி தொடர்பில் கலந்துரையாடல்

நாட்டில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஜனாதிபதிக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய புதிய கூட்டணி எதிர்வரும் 5ஆம் திகதி உருவாக்கப்படவுள்ளது. இதனை, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று...

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

நாட்டில் PAYE வரி திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் PAYE வரி திருத்தம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும், அது எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில்  ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் அஹலியகொடவில் 28.08.2024 அன்று .இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்...

புதன், 28 ஆகஸ்ட், 2024

அடிப்படை சுதந்திரத்திற்கு இலங்கையில் அச்சுறுத்தல் ஐ.நா அறிக்கையில் தெரிவிப்பு

இலங்கையின் அடிப்படை சுதந்திரத்திற்கு மேலும் அச்சுறுத்தல்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா அறிக்கையை மேற்கோள் காட்டி மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால்...

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

தற்காலிகமாக கனடாக்கு குடிபெயரும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய தகவல்

தற்காலிகமாககனடாவுக்குக் குடிபெயரும்  வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.கனடாவில் குறைந்த வருமானம் கொண்ட வேலைகளுக்காகக் தற்காலிகமாக குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால், கனேடியர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.எனவே...

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

கொழும்பு துறைமுகத்தில் .சீனாவில் இருந்து வருகை தந்துள்ள இராணுவ கப்பல்கள்

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் மூன்று போர்க்கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன."HE FEI", "WUZHISHAN" மற்றும் "QILIANSHAN" ஆகிய மூன்று போர்க்கப்பல்களும் 26-08-2024இன்று காலை வந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.அந்தவகையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Destroyer ரக போர்க்கப்பலான "HE FEI" 144.50 மீற்றர்...

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்தும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் ஐ.நா பேரவை வெளியிட்ட அறிக்கை

இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஆறு மாதம் முதல் அடுத்த ஒன்றரை ஆண்டு காலத்தில் மாத்திரம் பாலியல் துஷ்பிரயோகம் உட்பட 3,000 குற்றச்சாட்டுக்களை இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு பதிவு செய்துள்ளது.அதிர்ச்சியளிக்கும் தொடரும் துஷ்பிரயோகங்கள் குறித்த இந்த விவரங்கள் ஐ நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையரின் சமீபத்தைய விரிவான அறிக்கையில்...

சனி, 24 ஆகஸ்ட், 2024

நாட்டில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணிலுக்கே ஆதரவு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் பேசி எமது பிரச்சனைகளை தீர்க்க முடியும். முன்னாள் போராளிகள் தொடர்பான 5 கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். அதனால் ஜனாதிபதி தேர்தலில் எமது ஆதரவு ரணில் அவர்களுக்கே என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் இன்பராசா தெரிவித்துள்ளார்.  புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள்...

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

நாட்டில் விநியோகத்தினை ஆரம்பிக்கவுள்ள அவுஸ்திரேலியாவின் பெற்றோலிய நிறுவனம்

நாட்டில்அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் பிரைவேட் லிமிடெட், யுனைடெட் பெட்ரோலியம் லங்கா நிறுவனத்தின் கீழ் 2024, ஆகஸ்ட் 28 முதல் இலங்கையில் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது. இந்நிலையில், செயல்பாடுகளுக்கான எரிபொருள் கப்பல்கள் ஏற்கனவே வந்துவிட்டதாகவும், இறக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. யுனைடெட் பெட்ரோலியம்...

வியாழன், 22 ஆகஸ்ட், 2024

நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்வது தொடர்பில் மோட்டார் திணைக்களம் புதிய அறிவிப்பு

நாட்டில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் சாரதிகள் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன திணைக்களம் தயாராகி வருவதாக வெளியான செய்தி தொடர்பிலான உண்மைகளை திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. அதன்படி, அவ்வாறான சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வது தொடர்பில் மோட்டார் வாகன திணைக்களமோ அல்லது...

புதன், 21 ஆகஸ்ட், 2024

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மலைப்பாம்புகள் மூவர் கைது

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில்  கொண்டு வந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு வெளிநாட்டு மலைப்பாம்புகளை வத்தளை பொலிஸார் .21-08-2024.இன்று  மீட்டுள்ளனர்.இந்த சோதனையின் போது இலங்கையின் முடிச்சு முதலை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வத்தளை பிரதேசத்தில் உள்ள பெட்டிக்கடை ஒன்றின் மாடியில் விலங்குகள்...

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

ஜேர்மனியில் வேலை பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த ஒருவர் கைது

வெளிநாட்டு தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக கூறி 24 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபர் கந்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 119 தகவல் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  சந்தேக நபர் பேலியகொட பிரதேசத்தை...

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

நாட்டில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு வெளியான சுற்றறிக்கை

இலங்கையில் ஓய்வூதியம் பெறும் அனைத்து அரச ஊழியர்களுக்கும்  இடைக்கால கொடுப்பனவொன்றை வழங்குவது தொடர்பாக சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளரினால் இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.  இதன்படி செப்டம்பர் மாத கொடுப்பனவை ஒக்டோபர் மாத கொடுப்பனவுடன் வழங்கவுள்ளதாக...

சனி, 17 ஆகஸ்ட், 2024

நாட்டில் கடவுச்சீட்டு விநியோக எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

நாட்டில் கடவுச்சீட்டு அச்சிடும் புத்தகங்கள் தீர்ந்துவிட்டதால், தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 250 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும், திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் வரும் 30 பேருக்கு மட்டுமே கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விமான அனுமதிக்கான இ-பாஸ்போர்ட்...

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

யாழில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உறவுகளிடம் விசாரணை இடம்பெற்றது

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் இன்று வெள்ளிக்கிழமை (16) விசாரணைகள் இடம்பெற்றது.  உடுவில், கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்களிடையே விசாரணைகள் இடம்பெற்றது.  இவ்விசாரணைகள் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால்...

வியாழன், 15 ஆகஸ்ட், 2024

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல்

இலங்கை 2024 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.01....

புதன், 14 ஆகஸ்ட், 2024

பாடசாலை பரீட்சை வினாத்தாளில் இடம் பிடித்த வைத்தியர் அர்ச்சுனா

இலங்கையில் மாகாண கல்வித் திணைக்களத்திற்கு உட்பட்ட வலய பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பரீட்சையில் டாக்டர் அருச்சுனா தொடர்பில் வந்த வினாதாள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பாடசாலைகளில் இடம்பெற்ற இரண்டாம் தவணை பரீட்சை இடம்பெற்ற நிலையில் குடியியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் ஒன்றிலேயே இவ்வாறு மருத்துவர் அருச்சுனா பெயரில் கேள்வி இருந்துள்ளது.அதாவது...

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் கடிதம் மன்னார் விவகாரம் யார் பணம் பெற்றது மோதல் ஆரம்பம்

மன்னார் விவகாரம் சிந்துஜாவுக்கு ஆன போராட்டம் திட்டமிட்ட ரீதியில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு அண்ணன் செந்தூரன்னால் குலைக்கப்படுகிறது.அன்புள்ள செந்தூரன் அண்ணா. நீங்கள் எதுக்கு மன்னாருக்கு வந்து நிக்கிறீங்க என்று பொதுமக்களுக்கு விளங்காத வரைக்கும் நீங்கள் அங்க நிக்கலாம்.நீங்களா வீட்ட போகாட்டி.. இல்லாட்டி அவங்களே பார்சல் பண்ணி இந்தியாவில விட்டுருவாங்க.கெதியாக...

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

மருத்துவர் அர்ச்சுனாவின் மன்னார் சம்பவமும் ஏழுபேர் கொண்ட நண்பர்கள் அணி

மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா நண்பர்கள் அணி' (நண்பர்கள் அணி) சென்ற ஓகஸ்ற் மூன்று, ஐந்து மற்றும் ஏழாம் திகதிகளில் அர்ச்சுனா சார்பில் மன்னார் நீதிமன்றில் முன்னிலையான சட்டவாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறது.அவ்வகையில், பின்வரும் சட்டவாளர்கள் (Attorney at Law) மிகுந்த நன்றியுடன் பெயரிடப்படவேண்டியவர்கள்:அன்ரன் புனிதநாயகம்றெஜி றோய்ஸ் குரூஸ்ஜெகநாதன்...

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

இலங்கையில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளாகக் காட்டிக் கொண்டு பணம் வசூலிக்கும் கும்பல்

இலங்கையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் கூற்றுப்படி, ஒரு குறிப்பிட்ட குழுவினர் வர்த்தகர்களிடம் சென்று உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளாகக் காட்டிக் கொண்டு பணம் வசூலிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.பணம் எடுக்க வருபவர்களிடம் பணம் கொடுப்பதை தவிர்க்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவிக்கிறது.இவ்வாறானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் வகையில்...

சனி, 10 ஆகஸ்ட், 2024

நாட்டில் தேர்தலில் என்னதான் நடக்கும் நொந்து புண்ணாகப்போவது மக்கள் வாழ்வு மட்டுமே

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக அறிவித்துள்ளன.இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக ஒருவர் களமிறக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.இந்த நிலையில்,...

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

தினசரி யாழ் பலாலி சென்னை இடையிலான விமான சேவை

யாழ் பலாலி சென்னை இடையிலான தினசரி விமான சேவையை இன்டிகோ (INDIGO) விமானத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். தினசரி பிற்பகல் 3.55 மணிக்கு யாழ். விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 5.10 PM இற்கு சென்னை சென்றடையும். சென்னை விமான நிலையத்தில் பிற்பகல் 1.55 இற்கு புறப்பட்டு , 3.10 மணியளவில் யாழ். வந்தடையும். பயணியொருவர் 30Kg மற்றும் 7Kg Hand luggage...
Blogger இயக்குவது.