வியாழன், 1 ஜூன், 2023

தென்னிலங்கையில் கசிப்பு காய்ச்சிய ஆங்கில வாத்தி கைது ; மனைவியும் அரச ஊழியராம்

 .நாட்டில்  தென்னிலங்கையில் ரிதிமாலிய எனுமிடத்தில் காய்ச்சிய கசிப்பு ஆங்கில வாத்தியார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கசிப்பை காய்ச்சி அதனை விற்பனைச் செய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் லீற்றர் கைப்பற்றப்பட்டது.ஒரு இலட்சத்து 90 ஆயிரம் லீற்றர் கசிப்பு
கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்கள் கடந்த 29ஆம் திகதியன்று கைப்பற்றப்பட்டதுடன் காய்ச்சியவரும் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
​சம்பவம் தொடர்பில் அந்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை​யொன்றில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது
 செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, வடிக்கட்டிய 5,000 லீற்றர் கசிப்புடன் அந்த ஆசிரியரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைதானவரின் மனைவி பிரதேச செயலாளர் காரியாலயத்தில் பணியாற்றுகின்றார் என்றும் விசாரணைகளின் ஊடாக 
கண்டறியப்பட்டுள்ளது.
கலால் திணைக்களத்தின் புள்ளிவிபரத் தகவல்களின் பிரகாரம் நாட்டில் மதுபான பாவனை சடுதியாக குறைந்துள்ள அதேநேரம் கசிப்பு உள்ளிட்ட ஏனைய சட்டவிரோத மதுபாவனைகள் அதிகரித்துள்ளன.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.