புதன், 2 பிப்ரவரி, 2022

தாய்லாந்தில் ஒரே வீட்டில் 8 மனைவிகளுடன் ஒன்றாக வாழும் இளைஞர்

தாய்லாந்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே வீட்டில் 8 மனைவிகளுடன் வாழ்ந்து குடும்பம் நடத்தி வருகிறார்.8 மனைவிகளுடன் ஒருவர் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வரும் செய்தி சமூகவலைத்தளங்களில் 
வைரலாக பரவி வருகிறது.
தாய்லாந்தைச் சேர்ந்தவர் ஓங் டாங் சோரூட், டாட்டூ கலைஞரான இவர் 8 பேரை மணந்து அவர்களுடன் ஒரே வீட்டில் ஒன்றாக எந்த வித சண்டையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார். அத்தனை மனைவிகளும் சோரூட் மீது மிகுந்த காதலுடனும், இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் 
சோரூட்டை பகிர்ந்து வருகின்றனர்.
சோரூட் தனது 8 மனைவிகளிடமும் பார்த்த இடத்திலேயே காதலில் விழுந்துள்ளார். இவரது முதல் மனைவி நாங் ஸ்பெரிட் என்பவரை ஒரு நண்பரின் திருமணத்தில் பார்த்துள்ளார். அவரை திருமணம் செய்த பிறகு இரண்டாவது மனைவி நாங் எல்லை மார்கெட்டில் பார்த்துள்ளார். நாங் எல்லிற்கு சோரூட்டின் முதல் திருமணம் குறித்து தெரியும் முன்பே அவரை திருமணம் செய்துவிட்டார்.
மூன்றாவது மனைவியை மருத்துவமனையிலும், நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது மனைவியை சமூகவலைத்தளங்களாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பார்த்தும் காதலித்து திருமணம்
 செய்து கொண்டார்.அவரது 7வது மனைவியை அவரது தாயுடன் கோவிலுக்கு செல்லும் போது பார்த்துள்ளார். அவரது எட்டவது மனைவியை மற்ற மனைவிகளுடன் விடுமுறையை கழிக்க செல்லும் போது பார்த்துள்ளார். இவர்களை எல்லாம் பார்த்து உடனே காதலில் விழுந்து திருமணம்
 செய்துள்ளார்.
அத்தனை மனைவிகளுடனும் தற்போது ஒரே வீட்டில் ஒன்றாக தான் வாழ்ந்து வருகிறார். இதில் அதிசயம் என்னவென்றால் அவர்களுக்குள் சண்டையே வருவது இல்லையாம். அதற்கு முக்கியமான காரணம்
 சோரூட்டின் குணம் தான் என சொல்லப்படுகிறது அத்தனை மனைவிகள் மீதும் பாரபட்சமின்றி அன்பை காட்டுவாராம். ஏற்கனவே திருமணமான நபரை ஏன் திருமணம் செய்தீர்கள் என அவரது மனைவிகளிடம் கேட்ட போது அவர்கள் அளித்த ஒரே பதில் “அவர் மீது தீராத காதல் வந்துவிட்டது” 
என்பது தானாம்.
இப்படியாக இவர்கள் இரவு படுக்கையை திட்டமிட்டு பகிர்ந்து கொள்வார்களாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் இவருடன் படுக்கையை பகிர்வாராம். ஒரு மனைவி சோரூட்டுடன் படுக்கையை பகிரும் போது மற்ற மனைவிகள் வேறு ரூமில் படுத்துக்கொள்வார்களாம்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.