ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

நாடளாவிய ரீதியில்பணிப்புறக்கணிப்பை தொடரும் தொழிற்சங்கம்

நாடளாவிய ரீதியில் தாதியர், துணை மற்றும் துணை மருத்துவ சேவைகள் உட்பட சுகாதாரத் துறையைச் சேர்ந்த 18 தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணி நிறுத்தப் போராட்டம் நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் 
மீறி 11-02-2022.அன்று  ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.
தமது போராட்டத்துக்கான தடை உத்தரவு இன்னும் எழுத்துப்பூர்வமாக வரவில்லை என அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது
.தடை உத்தரவு கிடைத்தவுடன் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தை கூட்டி எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்..
அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னப்பிரிய ஆகியோரின் தொழிற்சங்க நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரி கொழும்பு மாவட்ட 
நீதிமன்றம் 11-02-2022.அன்று மாலை இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்தது.
சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.