வெள்ளி, 27 ஜனவரி, 2017

தங்கையை இழந்த அண்ணன் நீதிமன்றில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்`?

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை கரம்பன் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏழு மாத கர்ப்பிணியான ஞனசேகரம் ரம்சிகாவின் சகோதரன் இன்று நீதிமன்றில் பொலிஸாருடன் வாக்குவாதத்தில்
 ஈடுபட்டுள்ளார்.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இன்று கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரன் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் 
ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து நீதிமன்ற எல்லையை விட்டு குறித்த இளைஞனை பொலிஸார் வெளியேற்றி உள்ளனர்.
மண்டைதீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு மக்கள் பொலிஸாருடன் முரண்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தடுத்து
 வைக்கப்பட்டிருந்தனர்.
மேலும், இன்று அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியிலேயே மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.