திங்கள், 2 ஜனவரி, 2017

அத்தியார் கல்லூரியில் 27 ஆண்டுகளாக சேவையாற்றிய தயாராணி ஆசிரியர.

அத்தியார் இந்துக்கல்லூரியிலேயே ஆரம்பக்கல்வி முதல் தனது உயர்தரம் வரை கற்று இந்தக்கல்லூரியிலேயே 27 ஆண்டுகள் ஆசிரியராகவும் உபஅதிபராகவும் கடமையாற்றிய எங்கள் ஆசிரியை திருமதி மனோகரன் தயாராணி அவர்கள் 01.01.2017 அன்று தனது 60 ஆவது வயதில் ஓய்வு பெறுகின்றார். அத்தியார் இந்துக்கல்லூரியில் ஆயிரம் ஆயிரம் மாணவர்களை கற்பித்து ஆளாக்கிய 
அனைவரது மதிப்புக்கும் உரிய தயாராணி ஆசிரியர் 01.01.1957 ஆம் ஆண்டு பிறந்தார்.ஆரம்பக்கல்வி முதல் தனது உயர்தரம் வரை அத்தியார் இந்துக்கல்லூரியிலேயே கற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை தொடர்ந்தார்.
 பின்னர் 1982.02.17 இல் 
கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார்.அதன் பின்னர் 1989.04.01 அன்று அத்தியார் இந்துக்கல்லூரியில் கடமைப்பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை பாடசாலையின் வளர்ச்சிக்காகவும் மாணவர்களின் 
வளர்ச்சிக்காகவும் 27 ஆண்டுகள் அயாராது உழைத்தார். அத்துடன் ஆசிரியர் ,பகுதித்தலைவர், உப அதிபர் என பல பதவிகளை வகித்தார். இன்னும் ஒரு சில தினங்களில் அவரது சேவை நிறைவுக்கு வருவது அனைத்து அத்தியார் 
இந்துக்கல்லூரிச்சமூகத்திற்கும் கவலை தருகின்ற விடயமாகும். இன்னும் சில ஆண்டுகள் இவரது சேவைக்காலம் 
நீடிக்காதா என மாணவர்கள் ஏங்குகின்றனர். எங்கள் ஆசிரியை திருமதி மனோகரன் தயாராணி அவர்களின் ஓயு்வு காலம் சிறப்பாக அமையவும் நீண்டகாலம் நோயின்றி வாழவும் 
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். நீர்வேலி மக்கள். நவக்கிரி . நிலாவரை இணையங்கள்  வெளிநாட்டில் வாழும் நீர்வேலி மக்கள் அனைவரும் வாழ்த்துகிறோம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.