ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் இருவரை நேற்று இரவு(27) யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் அன்றைய தினம் np-Daf-8970 வாகனத்தில் ஆடு வாங்குவதற்காக அப்பகுதியில் நடமாடியதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பொம்மைவெளி பகுதியை சேர்ந்த சுஜா(வயது 31) மற்றும் அரபாத்(வயது-35) சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
தீவகப்பகுதியில் இவர்கள் மாடுகள் வாங்குவதற்கு சென்றதாகவும் குறித்த கொலை நடைபெற்ற போது யாழ் நகரப்பகுதியில் இருந்ததாக விசாரணையில் குறிப்பிட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக