ஞாயிறு, 13 அக்டோபர், 2024

நாட்டில் ஓய்வூதியதாரர்களுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

நாட்டில்  அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாவை அடுத்த வாரம் முதல் வழங்குமாறு
 ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபா ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி, அதே தொகையை அடுத்த வாரத்திற்குள் ஓய்வூதியர்களின் கணக்கில் வரவு வைக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 
அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு 24/08/2024 திகதியிடப்பட்ட அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 02/2024 வெளியிடப்பட்ட போதிலும், அதற்கான பணம் எதுவும் ஒதுக்கப்படவில்லை.
 இதனை ஆராய்ந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இது தொடர்பான பணத்தை வழங்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.