வியாழன், 10 அக்டோபர், 2024

கொழும்புக்கு போதைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் கைது

கொழும்புக்கு ஆறு கோடி ரூபா பெறுமதியான Pregab எனப்படும் 599,000 சட்டவிரோத போதைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் ஒருவர் பொரளையில் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மன்னார் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே கைது 
செய்யப்பட்டுள்ளார்.
பொரளை போக்குவரத்து சமிக்ஞைக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
 கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறியும் மேலதிக விசாரணைகளுக்காக 
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​மன்னார் பகுதியைச் சேர்ந்த
 சுஜி என்ற நபரே படகில் வந்து சிலாவத்துறை
 பாலத்திற்கு அருகில் போதைப்பொருள் கையிருப்பைக் கொடுத்ததாகவும், குறித்த போதைப்பொருளை கொழும்பு பகுதிக்கு
 கொண்டு வருமாறு அறிவுறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.