சனி, 12 அக்டோபர், 2024

நாட்டில் முன்னாள் அரசியல் வாதிகளில் பதின்ஒரு பேர் மாத்திரமே வீடுகளை காலி செய்துள்ளதாக தகவல்

நாட்டில் கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து அரசாங்க வீடுகளில் வசித்த 31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே வீடுகளைகாலி செய்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு 
தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கங்கள் அமைச்சர்களின் பாவனைக்காக கொழும்பு நகரில் வீடுகளை ஒதுக்கியிருந்தன. புதிய அரசாங்கத்தின் கொள்கை குறித்து கேட்டதற்கு, பின்னர் முடிவு செய்யப்படும் என்று அந்த 
வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது அரசாங்க அதிகாரத்தை வைத்திருக்கும் தேசிய மக்கள் சக்தி (NPP) செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது 
விதவைகளின் சலுகைகளை குறைக்க உறுதியளித்துள்ளது. 
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.