வியாழன், 17 அக்டோபர், 2024

நாட்டில் எதிர்காலத்தில் தானியங்கி முறையில் பரீட்சை வினாத்தாள்களை உருவாக்கும் புதிய முறை

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் எதிர்காலத்தில் தானியங்கி முறையில் பரீட்சை வினாத்தாள்களை உருவாக்கும் புதிய முறையை பின்பற்றும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர
 தெரிவித்துள்ளார்.
 இதன் மூலம் தேர்வுத் தாள்கள் கசிவு போன்ற மோசடிகள் குறையும் என்றும், வினாத்தாள் தயாரிப்பில் தனிநபரின் பங்களிப்பைக் குறைத்து அரை தானியங்கி முறையில் தாள் உருவாக்கம் கணினி மயமாக்கப்படும் என்றும் 
அவர் கூறினார்.
 இந்த புதிய முறையின் கீழ் மோசடி மற்றும் ஊழலை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 புதிய கல்விச் சீர்திருத்தங்களால், வினாத்தாள்கள் தயாரிக்கும் பணியில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக 
இந்தப் புதிய முறைகள் பின்பற்றப்படும் என்றும் அவர் 
கூறினார். பரீட்சை வினாத்தாள் தயாரிக்கும் பணியை 
தனி நபர்களை கொண்டு மேற்கொள்ளும் வரை 100 வீதம் மோசடி மற்றும் ஊழலை தவிர்க்க முடியாது எனவும் அவர் 
தெரிவித்துள்ளார்.
 இலங்கைப் பரீட்சை திணைக்களத்தின் பொறிமுறையில் கடந்த காலங்களில் வினாத்தாள்கள் பிரச்சினை இல்லையெனவும், தனிநபர்களின் நம்பிக்கை தொடர்பான பிரச்சினையே இந்த பிரச்சினைக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
 1968 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க பொதுத் தேர்வுச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்ட விதிகளின்படி, பரீட்சை மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதாகவும், பிடியாணையின்றி 
கைது செய்ய அனு
மதிக்கும் பொதுத் தேர்வுச் சட்டம், முற்றிலும் கிரிமினல் குற்றங்களைக் குறிப்பிடும் சட்டம். குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 16 அக்டோபர், 2024

நாட்டில் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்களை தயாரிக்க ஜனாதிபதி உத்தரவு

உலகளாவிய தேவைகளை கருத்திற் கொண்டு இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 
 இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் மனித வளத்தை மேம்படுத்தும் வகையில் பிள்ளைகள் அறிவாற்றலுடன் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 
 ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16.10) நடைபெற்ற கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்களின் முன்னேற்ற மீளாய்வு
 கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி
 இதனைத் தெரிவித்தார். 
அடுத்த 10 வருடங்களில் உலகிற்கு தேவையான மனித வளத்தை உருவாக்கும் பணியானது கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு எனவும், அதற்கான பரந்த நோக்குடன் கல்வி திட்டங்களை 
தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி 
சுட்டிக்காட்டியுள்ளார். 
 ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சுக்களின் முன்னேற்ற மீளாய்வின் போது கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்களால் நடைமுறைப்படுத்தப்படும் ஐந்து திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. 
 பாடசாலைக் கல்வி, ஆசிரியர் கல்வி, இடைநிலைக் கல்வி, தொழிநுட்பக் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்வியின் அபிவிருத்தி ஆகிய விடயங்கள் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 
 இது தொடர்பான திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அதிகாரிகளுக்கு பணிப்புரை
 விடுத்துள்ளனர். இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மிகவும் பயனுள்ள பாடசாலைகளாக மாற்றப்பட்டு 
பாடசாலைக் கல்வியை மறுசீரமைப்பதன் மூலம் பிள்ளைகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்கி
 சகல பிள்ளைகளும் கல்வி கற்கும் வகையில் கவனம் 
செலுத்தப்பட்டது. 
 விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்ப பாடத்திட்டங்களை உயர்தரத்திற்கு பயிலும் பள்ளிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவது குறித்து மேலும் விவாதிக்கப்பட்டது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 15 அக்டோபர், 2024

முன்னாள் ஜனாதிபதி தலைவர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும்.17-10-2024 வியாழக்கிழமை அன்று விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிடுவது இதுவே 
முதல் தடவையாகும்.
 இந்த விசேட அறிக்கையின் மூலம் நாட்டின் அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்தவுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 14 அக்டோபர், 2024

இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத்துக்கு தடை கோரி வழக்கு தாக்கல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க 
இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும் 2024 ஜனவரி மாதத்தின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானங்களை 
சட்டவலுவற்றதாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா
 வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
 அதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோர் எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 மட்டக்களப்பு - கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த
 முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா என்பவரால் கடந்த 10 ஆம் திகதி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 13 அக்டோபர், 2024

நாட்டில் ஓய்வூதியதாரர்களுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

நாட்டில்  அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாவை அடுத்த வாரம் முதல் வழங்குமாறு
 ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபா ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி, அதே தொகையை அடுத்த வாரத்திற்குள் ஓய்வூதியர்களின் கணக்கில் வரவு வைக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 
அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு 24/08/2024 திகதியிடப்பட்ட அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 02/2024 வெளியிடப்பட்ட போதிலும், அதற்கான பணம் எதுவும் ஒதுக்கப்படவில்லை.
 இதனை ஆராய்ந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இது தொடர்பான பணத்தை வழங்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 12 அக்டோபர், 2024

நாட்டில் முன்னாள் அரசியல் வாதிகளில் பதின்ஒரு பேர் மாத்திரமே வீடுகளை காலி செய்துள்ளதாக தகவல்

நாட்டில் கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து அரசாங்க வீடுகளில் வசித்த 31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே வீடுகளைகாலி செய்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு 
தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கங்கள் அமைச்சர்களின் பாவனைக்காக கொழும்பு நகரில் வீடுகளை ஒதுக்கியிருந்தன. புதிய அரசாங்கத்தின் கொள்கை குறித்து கேட்டதற்கு, பின்னர் முடிவு செய்யப்படும் என்று அந்த 
வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது அரசாங்க அதிகாரத்தை வைத்திருக்கும் தேசிய மக்கள் சக்தி (NPP) செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது 
விதவைகளின் சலுகைகளை குறைக்க உறுதியளித்துள்ளது. 
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 11 அக்டோபர், 2024

இலங்கை ஜனாதிபதியின் புகைப்படங்களை வௌியிட அனுமதி பெற வேண்டும்

இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளுக்காக பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி
 செயலகத்தின் எழுத்துமூல அனுமதியை அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பெறுமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
 அரச நிதியைப் பெற்று மேற்கொள்ளப்படும் பணிகளை ஏற்பாடு செய்யும் போது அரசாங்கத்தின் கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக செயற்படுவது அவசியமானது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் அரச நிறுவனங்களுக்கு மேலும் அறிவித்துள்ளார்.
 அனைத்து அமைச்சின் செயலாளர்கள், அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபன சபைகள் உள்ளிட்ட சட்டபூர்வ நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசிற்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுக்கு 
ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் இந்த அறிவித்தலை வழங்கியுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 10 அக்டோபர், 2024

கொழும்புக்கு போதைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் கைது

கொழும்புக்கு ஆறு கோடி ரூபா பெறுமதியான Pregab எனப்படும் 599,000 சட்டவிரோத போதைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் ஒருவர் பொரளையில் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மன்னார் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே கைது 
செய்யப்பட்டுள்ளார்.
பொரளை போக்குவரத்து சமிக்ஞைக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
 கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறியும் மேலதிக விசாரணைகளுக்காக 
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​மன்னார் பகுதியைச் சேர்ந்த
 சுஜி என்ற நபரே படகில் வந்து சிலாவத்துறை
 பாலத்திற்கு அருகில் போதைப்பொருள் கையிருப்பைக் கொடுத்ததாகவும், குறித்த போதைப்பொருளை கொழும்பு பகுதிக்கு
 கொண்டு வருமாறு அறிவுறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 9 அக்டோபர், 2024

வாக்கெடுப்பின்றி ஜெனிவாவில் நிறைவேறியது தீர்மானம்

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான இலங்கைக்கு எதிரான தீர்மான வரைவு வாக்கெடுப்பின்றி ஐ. நா.மனித உரிமைகள் பேரவையில் 
நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான A/HRC/57/L.1 தீர்மான வரைவு வாக்கெடுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57வது கூட்டத்தொடரில் குறித்த தீர்மான வரைவு நிறைவேற்றப்பட்டமை
 குறிப்பிடத்தக்கது.
51/1 பரிந்துரையின் நிர்பந்தத்தை நீட்டிக்கக் கோரி இன்று இச்சபையில் முன்வைக்கப்பட்டுள்ள வரைவுப் பரிந்துரையை நிராகரிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை அறிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





செவ்வாய், 8 அக்டோபர், 2024

கடந்த அரசாங்கத்தின் கொள்கையை ஐ.நா தீர்மானத்தில் பின்பற்றும் இலங்கை புதிய அரசாங்கம்

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்  சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை கடந்த அரசாங்கங்களைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கமும் 'வலுவாக நிராகரிக்க' தீர்மானித்துள்ளது.
புதிய அரசாங்கம் கலந்துகொள்ளும் முதலாவது ஜெனீவா அமர்வு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடராகும், இது இம்மாதம் 11ஆம் திகதி நிறைவடைகிறது.
இணைத் தலைமை (Core Group) எனப்படும் ஆறு நாடுகள் ஒன்றிணைந்து, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும்
 மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக 2021 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு
 மேலும் கால அவகாசம் வழங்குவதற்கு இந்த ஆண்டு வரைபில் முன்மொழியப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு எதிராக வெளிவிவகார அமைச்சர் முன்வைத்த விடயங்களை நேற்று (ஒக்டோபர் 7) கூடிய அமைச்சரைவை 
குழு பரிசீலித்தது.
“இந்தப் பிரேரணையில் உள்ள பல விடயங்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், புதிய அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாக்க புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
அதற்கு எமக்கு சிறிது கால அவகாசம் தேவை” என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (ஒக்டோபர் 8) கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
"மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 51/1 அடிப்படையில் தொடர்புடைய அனைத்து பணிகளையும் நீட்டிப்பது, அவையின் 58ஆவது அமர்வில், ஐ நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வாய்மொழியாக
 ஒரு அறிக்கையை அளிப்பது மற்றும் 60ஆவது
 அமர்வின் போது, 
இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் விவாதிக்கப்படக் கூடிய முழுமையான அறிக்கையை முன்வைக்கவும்” இந்த வருடம் ஜெனீவா அமர்வில் முன்வைக்கப்படும் வரைபில், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் கோரியிருந்தது.
பதினைந்து வருடங்களாக நீதி கிடைக்காத போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அரசாங்கத்தின் தாமதம் தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நிறுவப்பட்டுள்ள வெளி 
சாட்சிய சேகரிப்பு பொறிமுறையின் அதிகாரங்களை 
நீடிப்பதற்கான எந்தவொரு முன்மொழிவுக்கும் உடன்படுவதில்லை எனவும் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


திங்கள், 7 அக்டோபர், 2024

நாட்டில் ஆசிரியர்களை கண்ணீர் புகைக்குண்டு தாக்காத ஓர் அரசை உருவாக்குவதே நோக்கம் அநுரகுமார

நாட்டில்  ஆசிரியர் தொழிலில்தொழிலால் அளக்க முடியாத, சம்பளத்தால் அளக்க முடியாத பெரும் பாசம் இருப்பதாகக் ஜனாதிபதி 
குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் தினத்தைமுன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. 
அதில் மேலும் தெரிவித்துள்ள அவர்,  சமீப காலமாக வளர்ந்த ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, நமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதன் மூலம் புதிய 
மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கான மிக முக்கியமான கருவி கல்வி என்பதை நமது அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
 இதன் பைலட் பணி அன்பான ஆசிரியர்களே உங்கள் அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உங்கள் பள்ளிக்கு 
வரும் குழந்தையை உலக அறிவோடு போராடும் வகையில் கூர்மையாக்கும் திறன் ஆசிரியருக்கு உண்டு. 
 தொழிலால் அளக்க முடியாத, சம்பளத்தால் அளக்க முடியாத
 பெரும் பாசம் உண்டு. ஆசிரியர் தாய், ஆசிரியர் தந்தை எனப் போற்றப்படும் ஒரே தொழில் ஆசிரியர் தொழில். ஆனால் ஆசிரியர்களுக்கும் எதிர்கால 
நம்பிக்கை உள்ளது. 
அந்த நம்பிக்கைகளை முடிந்தவரை நிறைவேற்றி, ஆசிரியர்களை கண்ணீர் புகைக்குண்டு, தாக்காத அரசு என்ற பெருமையை 
உயர்த்துவதே எங்கள் நோக்கம். வாழ்க்கைப் பயணத்தில் பாதைகளைத் திறந்து 
ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் உலக ஆசிரியர் தினம் ஒரு அஞ்சலியாக இருக்கும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 6 அக்டோபர், 2024

இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ.நாவில் நீட்டிக்கப்படுமா

இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை மேலும் ஓராண்டுக்கு கால நீடிப்பு செய்யக் கோரி பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும்
 பிரேரணை 
எதிர்வரும் புதன்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.
 ஜெனிவாவில் கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு 
வருகின்றது.
 அதன்படி கூட்டத் தொடரின் தொடக்க நாளான கடந்த மாதம் 9 ஆம் திகதி இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்த
 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் எழுத்துமூல அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், உறுப்பு நாடுகளின் பங்கேற்புடன் இலங்கை தொடர்பான
 விவாதமும் நடைபெற்றது.
 இது இவ்வாறிருக்க, 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானமானது, 
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 51 ஆவது கூட்டத் தொடரின்போது மீண்டும் கால நீடிப்பு செய்யப்பட்டு தற்போது 51/1 தீர்மானம் எனும் பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
 அந்தத் தீர்மானம் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரும் நிலையில், பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, மாலாவி, வட மெசிடோனியா மற்றும் மொன்டெனிக்ரோ ஆகிய இணை அனுசரணை
 நாடுகள் ஒன்றிணைந்து 51/1 தீர்மானத்தை மேலும் ஒன்று 
அல்லது இரண்டு ஆண்டுகளுக்குக் கால நீடிப்பு செய்வது 
குறித்து ஆராய்ந்தன.
 அதற்கமைய 'இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் இணை அனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்ட முதல் வரைபுக்கு
 சகல தரப்பினரதும் ஒப்புதல் பெறப்பட்டு, அதனைப் பெரும்பாலும் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
 அந்தவகையில் இந்தப் பிரேரணை எதிர்வரும் புதன்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும், பெரும்பாலும் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் எனவும், இவ்விவகாரத்தில் நெருங்கிப் பணியாற்றி வரும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 5 அக்டோபர், 2024

நாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற உலக இருதய நாள் விழிப்புணர்வு நிகழ்வு


உலக இருதய நாள் வருடம் தோறும் செப்டம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை நினைவுகூரும் முகமாக, யாழ் போதனா 
வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவில் கடந்த 3 ஆம் திகதி சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. 
வடக்கு மாகாணத்தின் பிரதான சிகிச்சை அலகாக செயல்படும் இருதய சிகிச்சை மற்றும் சத்திர சிகிச்சை பிரிவுகள், பல சவால்களுக்கிடையே, மக்களுக்கு தேவையான இருதய நோய் சிகிச்சைகளை சிறப்பாக 
வழங்கி வருகின்றன..
இருப்பினும் கடந்த 13 வருடங்களாக இருதய சிகிச்சையை மேற்கொள்ள பயன்படுத்துகின்ற மிக முக்கிய உபகரணமாகிய Cardiac catheterization laboratory machinery புதிதாக மாற்றப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றது. இதற்கு பல மில்லியன்கள் செலவாகும்.
மேற்படி தின நிகழ்வில் வைத்தியசாலை ஊழியர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டதுடன், விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடைபெற்றது
. உலகளவில் இருதய நோய்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய
 நோய்கள் (Cardiovascular Diseases - CVD) குறித்து மக்களுக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த நோய்களால் ஏற்படும் பாதிப்புகளை
 குறைப்பதே 
உலக இருதய நாள் கொண்டாட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
2024 உலக இருதய நாளின் கருப்பொருள், இருதய 
நோய்களைத் தடுப்பதில், கண்டறிவதில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவது. இதன் மூலம், இருதய ஆரோக்கியத்தை 
பாதுகாக்கும் வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்படுகின்றன.
இன்றைய உலகில் சுகாதாரத் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் சிகிச்சை முறைகள் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், உலகம் முழுவதும் உள்ள மக்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்றச் செய்வதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன.
 என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






வெள்ளி, 4 அக்டோபர், 2024

மீண்டும் ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் கலந்துரையாடல்

மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான 
சந்திப்பொன்று.04-10-2024 இன்று  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பமானது.
 சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், (Krishna Srinivasan) சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் (Dr. Peter Breuer) உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினர் மற்றும் IMF பேச்சுவார்த்தைகளுக்கான
 நியமிக்கப்பட்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழுவினரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். 
 சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் இலக்குகளை அடைந்துகொள்ளும் அதேநேரம், மக்கள் சுமைகளை குறைப்பதற்கான மாற்று வழியில் செல்வதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நோக்கமாகும்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வியாழன், 3 அக்டோபர், 2024

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு தமிழரசு கட்சி வழங்கும் வாய்ப்பு

இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புகிற  கட்சியில் குறைந்தது இரண்டு 
வருடகால உறுப்புரிமை கொண்ட அங்கத்தவர்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பத்தை உரிய முறையில் இலங்கை 
தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளையிடம் சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 
இலங்கை தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர். சிவமோகன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்..
என்பது குறிப்பிடத்தக்கது
 
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 2 அக்டோபர், 2024

நாட்டில் யாழ் மற்றும் கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்

நாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரசியல் சபை உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சமீபகாலமாக பல மதுபானக் கடைகள் தோன்றுவது குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
வடமாகாணத்தில் பரந்தன் சந்தி தொடக்கம் இரணைமடு சந்தி வரையிலான மதுபானசாலைகளில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் 
தெரிவித்துள்ளார்.
"பெரும்பான்மையான மக்கள் தினசரி ஊதியம் பெறுபவர்களைக் கொண்டுள்ளனர், மேலும் மதுக்கடைகளின் பெருக்கம் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும்" என்று அவர் 
சுட்டிக்காட்டினார்.
 பிரதேசத்தில் உள்ள குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளின் ஆதரவைப் பெறுவதற்கு முன்னாள் ஆட்சியாளர்களால் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், புதிய ஜனாதிபதி
 தலையிட்டு, மீளாய்வு செய்து, தேவையற்ற
 மதுபான நிலையங்களை மூடுவதற்கு சாத்தியமுள்ளதாக வலியுறுத்தினார்.என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 1 அக்டோபர், 2024

யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் ஜனாதிபதி அனுரவை சந்தித்தார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்.01-10-2024. இன்று  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை
 சந்தித்தார். 
 இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக மக்கள் இறைமையால் தெரிவு செய்யப்பட்ட திரு.அனுரகுமார திஸாநாயக்கவிற்கு
 வாழ்த்து தெரிவித்த எஸ். ஸ்ரீதரன் ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.