ஞாயிறு, 28 ஜூலை, 2024

நாட்டில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஸ்டியை வலியுறுத்துபவர்களுக்கு ஆதரவு சிறீதரன்

நாட்டில் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது சமஸ்டியை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞானத்தில் வலியுறுத்தினால் அவர்களுக்கு
 ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழரசுக்கட்சி
 பரிசீலனை செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 
கிளிநொச்சியில் இன்று (28.07.2024) இடம்பெற்ற  நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனினும் எதிர்வரும் மாதம் 10 ,11திகதிகளில் மத்திய குழு கூடிய பொது வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது தேர்தல் விஞ்ஞானத்தில் சமஸ்டியை வலியுறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பதா என்று முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 
விக்கினேஸ்வரன் வடமாகாண சபையே நடாத்த முடியாதவர் என்று சுமந்திரன் நேற்றைய தினம் குறிப்பிட்டது தொடர்பாக ஊடக வியலாளர் கேள்வி கேட்ட போது எமது கட்சியைச்சேர்ந்தவரின் கருத்திற்கு
 வியாக்கினம் வழங்குது சரியான விடயம் அல்ல 
விக்கினேஸ்வரன் தான் வழங்க வேண்டும் என்றும் அவர் 
வலியுறுத்தியுள்ளார். 
இப்போதைய கால சூழல் அனைவரையும் ஒன்றிணைத்து செல்ல வேண்டும் ஒற்றுமையை குழப்பி அதனை விட்டு பேசிக்கொண்டு இருந்தால் அடிப்படை அரசியல் கொண்டு செல்வதில் பிரச்சனை உள்ளது.
மகிந்த ராஜபக்ஷ  பிள்ளையானை நம்பி பொலிஸ் அதிகாரம் கொடுக்கலாமா என்று கேட்டிருந்தார்.அதற்காகவே முன்னாள் நீதியரசரை களம் இறக்கி பொலிஸ் அதிகாரம் நிதி அதிகாரம் வழங்குமாறு 
கோரியிருந்தோம் எல்லாருடைய விருப்பத்திலே
 தெரிவு இடம்பெற்றது” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.