திங்கள், 22 ஜூலை, 2024

நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கௌரவம் வழங்கப்படும்

நாட்டில்கௌரவமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும் எனவும் கடந்த பொருளாதார நெருக்கடியின்போது நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்த அவர்களின் பங்களிப்புக்கு நன்றி என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
 குருணாகல் சத்தியவாதி விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற 'விகமனிக ஹரசர' நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 இலங்கையின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பை பாராட்டுவதற்காக, நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட 'விகமனிக ஹரசர' நிகழ்ச்சி வடமேற்கு மாகாணத்தில் 
ஆரம்பிக்கப்பட்டதுடன், இதில் குருணாகல், புத்தளம்,
 அனுராதபுரம், மாத்தளை, கேகாலை 
ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 5,000 பேர் கலந்துகொண்டனர்.
 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடாத்தும் நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் தொழில் முனைவர்களை உருவாக்குவதற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் பரிந்துரைக்கும் சுயதொழிலை
 ஆரம்பிக்கத் தேவையான நிதி மூலதனமாக தலா 50,000 ரூபாவையும் ஜனாதிபதி வழங்கினார். என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.