திங்கள், 15 ஜூலை, 2024

நாட்டில் ஜனாதிபதி தேர்தலிற்கான வேட்பு மனு திகதியை அறிவிக்க தயாராகும் தேர்தல்கள் ஆணைக்குழு

நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை இம்மாத இறுதியில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க
 தெரிவித்துள்ளார்.
 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை நாளை மறுதினம் (17) அரசியலமைப்பின் பிரகாரம் அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும் என அவர் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
 இம்மாத இறுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் திகதியை அறிவிப்பதன் மூலம் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு போதிய அவகாசம் கிடைக்கும் எனவும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் திகதியை விரைவில் அறிவிக்குமாறு எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் தேர்தல் கண்காணிப்புக் குழுவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. 
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு
 வந்து ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் திகதியை விரைவில் அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். எதிர்வரும்
 நாட்களில் ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தகூடிய வாக்காளர் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தவுள்ளதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 எவ்வாறாயினும், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 17 மில்லியன் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெறுவார்கள் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 17 வரை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரத்நாயக்க, அரசாங்க அச்சுப்பொறியாளர், பொலிஸ் மா அதிபர், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினர் தேர்தலுக்குத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.