திங்கள், 2 ஜனவரி, 2023

பாணந்துறையில் மகளிர் கல்லூரிக்கு அருகில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த பெண் கைது

 பாணந்துறை நகரில் உள்ள பிரதான மகளிர் கல்லூரிக்கு அருகில் போதை மாத்திரைகளை விற்பனை செய்தபெண் ஒருவரை வலானை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகநபரான் பெண் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
அத்துடன் கைது செய்த பெண்ணிடமிருந்து 300 போதை மாத்திரைகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
மேலும் பெண் பொலிஸ் அதிகாரியொருவர் பாடசாலை சீருடையுடன் போதை மாத்திரை வாங்குவதுபோல் குறித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று மாத்திரை வாங்குவதுபோல் பாசாங்குசெய்து சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.