வெள்ளி, 22 ஏப்ரல், 2022

திருநெல்வேலியில் வீடுடைத்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு

யாழ்.திருநெல்வேலியில் உள்ள விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவம்.19-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,குறித்த விரிவுரையாளரது குடும்பம் 19-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5.30 மணியளவில் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பிய இடை நேரத்தில் திருட்டு இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் சுமார் 50 பவுண் தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளன என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதாக 
பொலிஸார் கூறியுள்ளார்.
குறித்த சம்பவம் உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் விரிவுரையாளரது வீட்டிலேயே இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.