சனி, 22 ஜனவரி, 2022

ஏன் இந்த இன பாகுபாடு இலங்கைத் தமிழர்க்கு பொங்கல் வடை மட்டுமே

இலங்கையில் வாழ் யுவதிகள் இருவர் சாதனை படைத்துள்ளனர். அவர்களில் ஒருவர் சில பாடல்கள் பாடியதற்காக தடல்புடல் மரியாதை செய்யப்பட்டதுடன் பல கோடி ரூபா பெறுமதியான காணியும் வீடும் அவருக்கு அரசாங்கத்தினால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அரசாங்கத்தின் மரியாதையையும் வெகுமதியையும் பெற்றவர் தென்னிலங்கையை சேர்ந்த யுவதி யொஹானி டி சில்வா ஆவார். அதேசமயம் மற்ற தமிழ் யுவதி கணேஸ் இந்துகாதேவி குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை
 சேர்த்துள்ளார்.
ஆனால் அவருக்கு எவ்வித தடல்புடல் வரவேற்போ அல்லது வெகுமதிகளோ அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை . குறித்த யுவதி முல்லைத்தீவு மாவட்டத்தின் பிறந்தவராக உள்ளார். இந்நிலையில் ஒருவருக்கு பாடல் பாடியதற்காக பரிசும் வீடும் வழங்கி கௌரவித்த இந்த
 அரசாங்கம் , நாட்டை
கௌரவப்படுத்தி தங்கப்பதக்கம் பெற்றவருக்கு ஏன் எவ்வித மரியாதையையும் பரிசுகளையும் வழங்கவில்லை என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளானர். மேலும் இருவருமே ஒரே நாட்டை சேர்ந்தவர்கள் என்கின்ற நிலையில் ஒருவரை பாராட்டி கௌரவப்படுத்திய அரசாங்கம் , மற்றவரை கௌரவப்படுத்த தயக்கம் காட்டுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதேவேளை இதுவரையும், தங்க்கப்பதக்கம் பெற்ற முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவிக்கு அரசாங்கத்தில் இருக்கக்கூடியவர்களோ, அல்லது அந்த துறைசார்ந்த எந்த முக்கியஸ்தர்களோ வாழ்த்துக்களை கூறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை இங்கு
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.