வியாழன், 27 ஜனவரி, 2022

நாட்டில் பஸ்களில் நின்றுகொண்டு பயணிப்போருக்கான புதிய சலுகை

பஸ்களில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தை அறவிடும் முறையொன்றை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும், ஆசன விதிமீறல்கள் தொடர்வதால், நின்றுகொண்டு பயணிக்கும் பயணிகளுக்கு, கட்டண மறுசீரமைப்புக்கு முன்னர் அறவிட்ட கட்டணத்தை 
அறவிடும் வகையில்
புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படும்.அதன்படி அடுத்த வாரம் முதல் இரண்டு கட்டண முறைகளில் போக்குவரத்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர்
 தெரிவித்தார்.
அத்துடன் சுகாதார விதிகளை மீறும் அனைத்து பஸ்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள, பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக பல பகுதிகளில் சட்ட விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் 
மேலும் கூறினார்.
 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.