திங்கள், 30 செப்டம்பர், 2024

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தை தவிர்க்குமாறு வேண்டுகோள்

நாட்டில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை நேரடியாகப் பங்கேற்காமல் இருக்க முடிவெடுத்துள்ளது. அதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பயன்படுத்திய சங்கு சின்னத்தை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம்...

ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான நிதி உரிமத்தில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி

இலங்கையில் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு...

சனி, 28 செப்டம்பர், 2024

நாட்டில் பாடசாலை நிகழ்வுகளுக்குப் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடக் கூடாது கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் பாடசாலைகளில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளுக்குப் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடக் கூடாது எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள், வலய கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் இடம்பெறும் சிறுவர் தினம், ஆசிரியர் தினம் போன்ற விசேட...

வெள்ளி, 27 செப்டம்பர், 2024

நாநூற்ரி பதின்எட்டு கோடியில் மனைவி குளிப்பதற்காக தனி தீவு வாங்கிய கணவர்

துபாயை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜமால் அல்நடக். கோடீஸ்வரரான இவரது மனைவி சவுதிஅல்நடக் (வயது 26). இங்கிலாந்தில் பிறந்த சவுதி அல்நடக் துபாயில் படித்துக்கொண்டிருந்த போது ஜமால் அல்நடக்கை சந்தித்துள்ளார். பின்னர் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.மனைவி மீது மிகவும் அன்பு கொண்ட ஜமால் அல்நடக், அவருக்காக ஏராளமான பரிசு பொருட்களை வழங்கி...

வியாழன், 26 செப்டம்பர், 2024

உலக வங்கி இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு கைக்கொடுக்கும்

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதற்கு உலக வங்கி குழு தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.உத்தியோகபூர்வ கடிதத்தில், உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் ரிக்கார்டோ புலிட்டி ஆகியோர்...

புதன், 25 செப்டம்பர், 2024

ஜனாதிபதி அனுரவுடன் தொடர்ந்து பயணிப்பதற்கு தயார்: சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தற்போது செயற்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டம் உள்ளிட்ட இலங்கையின் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு இலக்குகளை அடைவதற்கு நிலையான பங்காளியாக தொடர்ந்து பணியாற்றுவதற்கு...

செவ்வாய், 24 செப்டம்பர், 2024

ஜனாதிபதி அனுர உறுதி அனைத்து நாடுகளுடனும் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன்

அனைத்து நாடுகளுடனும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இன்று காலை (23) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப் பிரமாண நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில்...

திங்கள், 23 செப்டம்பர், 2024

இலங்கையின் ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்றார்

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.23-09-2024.இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.என்பது குறிப்பிடத்தக்கது  இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

நாடு ரணிலை மீண்டும் தேடுமா மக்கள் தீர்ப்பு தவறாகுமா அடுத்து நடக்கபோவது என்ன

முன்னாள் ஜனாதிபதி ரணில் என்னும் இராஜதந்திரம் பொறுமையுடன் செல்கிறது! மக்கள் ஆணையை ஏற்று கையில் தூக்கிச் செல்வதற்கு எதுவும் இல்லை ! அதனை மீள அழைப்பது அழைக்காமல் விடுவது ஆட்சியாளர்களின் கையிலே! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதிக்கு வளிவிட்டு தனது உத்தியோக பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார்.ரணில் விக்கிரமசிங்க சிறந்த இராஜதந்திரி...

சனி, 21 செப்டம்பர், 2024

நாட்டில் தேர்தல் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுங்கள்!மக்களிடம் வேட்பாளர்கள் வேண்டுகோள்

ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் வாக்களித்தனர். வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுங்கள். வன்முறைகளுக்கு இடமளிக்க வேண்டாம் என பொதுமக்களிடம் வலியுறுத்தினார்கள். ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு . 21-09-2024.இன்று சனிக்கிழமை காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெற்றது....

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

நாட்டில் வாக்களிப்பு நிலையத்திற்கு பணியாளர்களை அழைத்துச் சென்ற சாரதி கைது

நாட்டில் தெரணியகலை பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு பணியாளர்களை அழைத்துச்சென்ற வேன் சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் மற்றும் பணியாளர்களுடன் தெரணியகலை பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு பயணித்த வேன் சாரதி கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார்...

வியாழன், 19 செப்டம்பர், 2024

விக்கினேஸ்வரன் அறைகூவல் தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்ற சங்குக்கு தமிழ் மக்கள் வாக்களியுங்கள்!

நாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பதை சர்வதேசத்திடம் சொல்லும் அதேவேளை, தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நோக்கில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு தமிழ் மக்கள் அனைவரும் திரண்டுவந்து வாக்களிக்கவேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும்,...

புதன், 18 செப்டம்பர், 2024

நாட்டில் இனப்பிரச்சினை தீர்வுக்குள் மாத்திரம் குறுகிவிடாது நாட்டின் பொருளாதாரத்தினையும் கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்

நாம் எமது ஜனாதிபதித்தெரிவினை மேற்கொள்ளும்போது தனியே இனப்பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வுக்குள் மாத்திரம் குறுக்கிவிடாது, நாட்டின் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார சூழ்நிலை குறித்துப் பகுத்து ஆராய்வது அவசியமாகும். தமிழ்த்தேசிய அரசியலை மாத்திரம் முன்னிறுத்தி, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக்கொண்டு தேர்தலில் வாக்குக்கோருவதும், தமிழ்த்தேசிய...

செவ்வாய், 17 செப்டம்பர், 2024

நாட்டில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் கட்டண அதிகரிப்பு தொடரும்

நாட்டில்வாகன இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டு முதல் நீக்கப்பட்டாலும், வாகன சுங்க கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டியில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி கையிருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலேயே கட்டண விகிதங்கள்...

திங்கள், 16 செப்டம்பர், 2024

நாட்டில் தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் தமிழர்கள் அழிந்து போகும் ஆபத்து

கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தமிழ் மக்கள் 15 ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாது அழிந்து போகக் கூடிய ஆபத்து இருக்கிறது ஆகவே இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால் தமிழர் தேசம் ஒன்று அங்கீகரிக்கப்பட்ட தீர்வு எட்டப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார். தமிழர்களுடைய தலை நகரமான திருகோணமலை இன்று...

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

 நாட்டில்   இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் மின் சிகரெட்டுகளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் என்பன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.குறித்த பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்த பயணி ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க...

சனி, 14 செப்டம்பர், 2024

ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்திற்கு வாக்களியுங்கள் சிவி.விக்னேஷ்வரன் கோரிக்கை

தேர்தலுக்கு வாக்களிப்பதற்கு இன்னும் 6 நாட்களே உண்டு. அனைவரும் தவறாமல் சங்கு சின்னத்திற்கு 21ந் திகதியன்று காலை வாக்களிக்க வேண்டும் என சிவி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.தமிழ்ப் பொது வேட்பாளர்  .அரியநேத்திரனின் ஆதரவுக் கூட்டம் நெல்லியடியில் இடம்பெற்றது. இதன்போது கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட...

வெள்ளி, 13 செப்டம்பர், 2024

நாட்டில் திருகோணமலையில் அதிகரித்துவரும் சிங்களக் குடியேற்றங்கள்

நாட்டில் யுத்தத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் விரிவடைந்துவருகின்றது. வடக்கு, கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒன்றிணைந்த தாயகம் என்ற கோட்பாட்டை இல்லாமல் செய்யும் அதேவேளை, அவர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அவர்களது சரித்திரம் மற்றும் கலாசாரம்...

வியாழன், 12 செப்டம்பர், 2024

இலங்கை இருவது வருடங்களில் அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் ஜனாதிபதி ரணில் உறுதி

இலங்கை  இன்னும் 20 வருடங்களில் அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் என்பதில் இளைஞர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். திருக்கோவிலில் 11-09-2024.அன்று  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.சஜித் பிரேமதாச அல்லது அனுரகுமார...

புதன், 11 செப்டம்பர், 2024

தமிழ் பொதுவேட்பாளருக்கு தமிழ் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்க வேண்டும்

தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பாராளுமன்றத்தில் மலையக மக்களுக்காக முன்னர் குரல் கொடுத்தவராவார். அவர் மலையக மக்களை சகோதர சகோதரிகளாகவே நேசிக்கின்றார். மலையக மக்களும் கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களும் அவருக்கு ஆதரவாக ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிப்பதை அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற...

செவ்வாய், 10 செப்டம்பர், 2024

இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளமாகஆயிரத்தி முன்னுறி ஐம்பது ரூபாவை வழங்க இணக்கம்

தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளமாக 1,350 ரூபாவும் மேலதிகமாக ஒரு கிலோ இலைக்கு 50 ரூபா கொடுப்பனவும் வழங்குவதற்கு 10-09-2024.இன்று  சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், தோட்ட முதலாளிகள் மற்றும் தோட்டத் தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர்.அதன்படி...
Blogger இயக்குவது.