வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

ஒரு நிமிடம் ஒதுக்கி படியுங்கள்.ஆங்கிலம் பேசுபவர்களை புத்திசாலி என்று நினைப்பது சரியா

பிரிட்டன் மக்களின் தாய்மொழி ஆங்கிலம் ஆயினும் அங்கேயும் அறிவில் குறைந்தவர்கள், கெட்டவர்கள், நல்லவர்கள், அறிவாளிகள் என்று பல ரகம் உண்டு. ஒரு மொழியை பேசும் திறனை வைத்து மனிதர்களை எடைபோடக்கூடாது.
சில விஷயங்களில், துறைகளில் திறமைசாலிகளாக இருப்பவர்கள் அயோக்கியர்களாகவும் இருப்பதுண்டு. ஒருவன் ஒரு மொழியில் திறமைசாலியாக இருந்தால் அதற்குரிய ஆன்மா அவனிடம் இருக்கிறது. அது அக்காரியத்தை மட்டுமே செய்யும். மற்ற விஷயங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. அவைகள் வேறு வேறு 
ஆன்மாக்கள்
ஆன்மாக்களைப் பற்றி சில விஷயங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ளவேண்டும். மக்களுடைய இறை நம்பிக்கையைப் பற்றி இறைவன் கவலைப்படுவதில்லை என்றே நினைக்கிறேன். ஒவ்வொருவரையும் தனித்தனியே தானே கண்காணிப்பதும் அவர்களை வழிநடத்துவதும் இறைவனால் இயலாதக் காரியம் என்றே நான் நினைக்கிறேன்.
ஒவ்வொருவரையும் கண்காணிப்பதற்கும், வழிநடத்துவதற்கும், அவர்கள் தவறு செய்யும்பொழுது தண்டிப்பதற்கும் இறைவன் ஆன்மாக்களை உருவாக்கி இருக்கிறார். பல புதிய ஆன்மாக்களை இன்றும் அவர் உருவாக்கிய வண்ணம் இருக்கிறார். இந்த புதிய ஆன்மாக்களாலேயே பல புதிய முன்னேற்றங்கள் உலகத்தில் ஏற்பட்டபடி இருக்கிறது.
உங்கள் கடந்த காலம் நிகழ் காலத்தை தீர்மானிக்கிறது, உங்கள் நிகழ் காலம் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. எவர்க்கும் தம் விருப்பம்போல் வாழ இறைவன் அனுமதி அளித்திருக்கிறார், ஆனால் பிறர்க்கு ஊறு விளைவித்தால் அதற்கான தண்டனையை அவர்கள் அடைந்தே 
தீரவேண்டும்.
 அதுவே விதி. அதை தீர்மானிப்பது உங்களுடன் வாழும் ஆன்மாக்களே. ஆன்மாக்கள் உங்களுடைய செயல், பேச்சு மற்றும் சிந்தனையிலிருந்தும் உங்கள் விதியை தீர்மானிக்கின்றன.
ஆன்மாக்கள் அல்லது ஆவிகள் தனிச் சக்திகள். மனிதனுக்கு ஆவியுடல் என்று ஒன்றும் இல்லை. ஒரு மனிதன் தனது வாழ்நாளில் பல ஆவிகளுடன் வாழ்ந்து க்கொண்டிருக்கிறான். அவைகள் அவன் 
பிறந்ததிலிருந்து 
ஒவ்வொன்றாக இணைந்தவை. அவை அறிவு, திறன்கள், உணர்வுகள், ஆர்வங்கள் மற்றும் அனைத்தும் ஆகும். இவற்றோடு உறவினர்கள்,
நண்பர்கள் மற்றும் சில தெரிந்தவர்கள் சார்பிலும் சில ஆன்மாக்கள் சேர்வதுண்டு. எண்ணங்களும் உங்களுக்குத் சொந்தமானதல்ல. உதாரணமாக, நீங்கள் ஒரு விஷயத்தில் ஒரு முடிவை எடுக்க 
விரும்பினால், 
ஒன்றன் பின் ஒன்றாக ஆவிகள் சிந்திக்கின்றன. அந்தச் சிந்தனைகளை ஆன்மாக்கள் உங்கள் மூளை வழியாக உங்கள் மனதிற்கு அனுப்புகின்றன
. அவைகள் அனுப்பும்
கருத்துக்களை நீங்கள் கவனிக்கிறீர்கள் பிறகு அதில்
 ஒன்றைத் தேர்வு செய்கிறீர்கள் அல்லது நிராகரிக்கிறீர்கள். மூளை என்பது உங்கள் மனதுடன் ஆவிகள் தொடர்புக்கொள்ள பயன்படும் ஒரு சாதனம். மனம் என்பது கணினியின் மனம். ஒரு கணினியை முற்றிலுமாக அழித்தபின் நீங்கள் அதன் மனதைப் பெற மாட்டீர்கள். மனிதர்கள் நிலை
 இதே நிலைதான்.
உயிர் என்பது ஒரு உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஒரு சக்தி. அது ஒரு ஆவியோ அல்லது வேறு எதுவோ இல்லை. அது ஆட்டோ மெக்கானிசம் போன்றது. மரணத்திற்குப் பிறகு ஒரு நபருடன் வாழ்ந்த 
அனைத்து ஆவிகளும் வெளியேறி புதிய உடல்களைத் தேடி வெவ்வேறு இடங்களுக்குச் செல்கின்றன. இறந்த பிறகு யாரும் 
எந்த வடிவத்திலும் வாழ்வதில்லை. எல்லா மனிதர்களும் சதை மற்றும் எலும்புகளால் ஆன ரோபாட்கள், ஆவிகளுடைய விளையாட்டுகளுக்காக பயன்படும் பொம்மைகள்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.