புதன், 5 மே, 2021

யாழில் முகக் கவசம் அணியாதவர்களை காவல் துறையினரால் கைது

 


யாழ்ப்பாணம் நகரில் முகக் கவசம் அணியாத மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களை காவல் துறையினர்  
கைது செய்தனர்.
யாழ்ப்பாணம் காவல் துறை  நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் நகர் பகுதியில் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது யாழ். நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் 30 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காவல் துறை  நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.