வெள்ளி, 31 ஜூலை, 2020

நாட்டில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் ஆகஸ்ட் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. நிலாவரை.கொம் செய்திகள் >>>>>...

பெருமளவு ஹெரோயின் வெள்ளவத்தையில் கைப்பற்றல்

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 23 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிரடி படையினரால் இந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.இதன்போது சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். .நிலாவரை.கொம் செய்திகள் >>>>&...

வியாழன், 30 ஜூலை, 2020

யாழில் 33 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய புத்தள இளைஞன்

யாழ்ப்பாணம், ஐந்துசந்திப் பகுதியில் 33 கிலோ கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஐந்து சந்திப் பகுதியில் பாவனையில்லாத கட்டடத்தில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த, கஞ்சா பொதிகளுடன் 36 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்...

வரணியில் பொலிஸாரைக் கண்டதும் தப்பியோடிய இளைஞன் பலி.

 யாழ் வரணியில் 29-07-20.அன்று.விபத்தில் சிக்கிய இளைஞர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.வரணியில் 29-07-20.அன்று.பகல், தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் இருண்டு இளைஞர்கள் பயணித்தனர். இதன்போது வீதியில் பொலிசாரின் வாகனம் வருவதை கண்டு, அதிவேகமாக தப்பியோடியுள்ளனர்.கொடிகாமம்- பருத்தித்துறை வீதி காப்பெற் வீதியாக மாற்றும்...

கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறப்பதில் சிக்கல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கை காலவறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.முன்னதாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.எனினும் தற்போது நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் கொரோனா ரைவஸ் பரவும் அபாயம் தீவிரம் அடைந்துள்ளதால்...

நாட்டில் சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற வகையில் வாகனங்களை செலுத்தி, அதன்மூலம் ஆபத்தான விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கொலை குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்த பின்னர் அவர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும்...

செயலக உத்தியோகஸ்தர் அலுவலக அறைக்குள் கஞ்சா ஸ்டோர்.

இரத்தினபுரி மாவட்டச் செயலக வளாகத்தில்(கச்சேரி) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அலுவலக உதவியாளர் ஒருவரும் மற்றும் அங்கிருந்த பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஒருவரும் நேற்று முன்தினம் (27-07-20.) கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது, மாவட்ட செயலகத்தின் அறையொன்றில் இருந்து 150 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பின்னர் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இரத்தினபுரி...

செவ்வாய், 28 ஜூலை, 2020

ஒரு தொகை கஞ்சா மற்றும் பெரும் தொகைப் பணத்துடன் இருவர் கிளிநொச்சியில் கைது

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று இலட்சத்து 18 ஆயிரம் ரூபா பணம் மற்றும் ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர்  27-07-20 முற்பகல் 11 மணியளவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி பொலீஸ் மா அதிபரின் விசேட பொலீஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய செயற்பட்ட பொலீஸார் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரும்...

வானிலை தொடர்பான இலங்கையின் சிவப்பு எச்சரிக்கை

இலங்கையின் வானிலை தொடர்பில் வானிலை அவதான மையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று ஜூலை 28ஆம் திகதி மாலையிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என வானிலை அவதான மையம் எதிர்வுகூறியுள்ளது. இந்தநிலையில் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும்...

திங்கள், 27 ஜூலை, 2020

மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள பழைய பாலம் தெற்கு கடற்கரையில் இன்று திங்கட்கிழமை(27) காலை உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலத்தை  தலைமன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.தலைமன்னார் கடற்கரைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் சடலத்தை அவதானித்துள்ளனர்.கடற்படையினர்...

நாட்டில் அரசாங்க சேவையில் வரப் போகும் மாற்றம்.விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கையில் ஓய்வு பெறும் வயதெல்லையை 61 வரை அதிகரித்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியில் பல்வேறு சேவைப் பிரிவுகளினால் பொது நிர்வாக மற்றும் உள்துறை  அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 61 வரை நீடிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையினால், இந்த கோரிக்கை...

மட்டக்குளி சமித்புர பகுதியில் போதைப் பொருளுடன் இளம் பெண் கைது

1.6 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் 24 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.கொழும்பு மட்டக்குளி சமித்புர பகுதியில் கைது குறித்த பெண் கைது  செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருடைய வங்கி கணக்கில் சுமார் 1.6 மில்லியன்  ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த...

சனி, 25 ஜூலை, 2020

பொலிஸாரிடம் .மன்னாரில் வசமாகச் சிக்கிய 45 கிலோ கேரளக்கஞ்சா

மன்னாரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் ஒரு தொகை  கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மன்னார்- சின்னக்கருசல் பகுதியில் சுமார் 6 கிலோ கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சா பொதிகளுடன் குறித்த  கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய  ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, மன்னார் மாவட்ட...

நாட்டில் இரு வங்கிகளில் கொள்ளையடித்த கும்பல்

இலங்கையில் பிரதான அரச வங்கி மற்றும் தனியார் வங்கி ஒன்றில் ஒரு கோடி ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது .கடன் அட்டைகள் மூலம் கொள்ளையடிக்கும் இந்த கும்பலலை தேடி குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.சர்வதேச  ஹெக்கர்கள் மற்றும் இலங்கை குழுவொன்று இணைந்து மேற்கொண்டதாக  சந்தேகிக்கப்படுகின்ற...

வெள்ளி, 24 ஜூலை, 2020

அமெரிக்காவில் பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் சமூக இடைவெளி, ஊரடங்கு மட்டுமே தற்காலிக தீர்வாக உள்ளது. மறுபுறம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் பெரு  ஆகியவை முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள்...

கள்ளக்காதலியை கொலை செய்து நடுவீட்டில் புதைத்த காதலன்

முஸ்லிம் மதத்துக்கு மாறுவதற்கு கள்ளக்காதலி மறுத்துவிட்டாராம்.. அதனால், அந்த ஆத்திரத்தில் காதலியை கொன்று புதைத்துவிட்டு, அந்த பிணத்தின் மேலேயே ஒருத்தர் பல மாசம் வாழ்ந்து வந்துள்ள சம்பவம் தூக்கி வாரி போட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பர்தாபூர் என்ற பகுதி உள்ளது… இங்கு வசித்து வந்த இஸ்லாமிய  இளைஞர் பெயர் ஷம்சாத்.. இவருக்கு கல்யாணம்...

வியாழன், 23 ஜூலை, 2020

அச்சுவேலி இராணுவ முகாமில் தன்னைத் தானே சுட்ட இராணுவச் சிப்பாய்

யாழ் அச்சுவேலி இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 23-07-20.இன்று.காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.கடமையில்  இருந்த குறித்த சிப்பாய் அதனது நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுள்ளார் எனத் தெரிய வருகின்றது.தற்போது அவசர சிகிச்சைப்...

புதன், 22 ஜூலை, 2020

மூளாய் பகுதியில் வீடு புகுந்து : 17 பவுன் தங்க நகை கொள்ளை

யாழ் மூளாய் பகுதியில் வாள் , கோடரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூளாய் யில் உள்ள வீடொன்றினுள்.21-07-20. (செவ்வாய்க்கிழமை அதிகாலை புகுந்த 2 கொள்ளையர்களே இவ்வாறு நகைகளை கொள்ளையடித்து  தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது, “வாள் , கோடரி உள்ளிட்டவற்றுடன் ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று முகங்களை மறைத்துக்கொண்டு...

நாட்டில் மின்சார சபையின் நஷ்டம் 2,000 கோடி ரூபாவால் குறைவு

நாட்டில்  கடந்த சில மாதங்களில் சமகால அரசாங்கம் மேற்கொண்ட சரியான தீர்மானங்களினால் இலங்கை மின்சார சபையின் நஷ்டம் இரண்டாயிரம் கோடி ரூபாவால் குறைந்ததுள்ளதாக சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மின்சார சபைக்கு எரிபொருள் நிவாரணம் கிடைத்தமை, தாமதமான திட்டங்களைப் பூர்த்தி செய்ய முடிந்தமை போன்றவை இதற்குக் காரணங்களாகும் எனவும் குறிப்பிட்டார். கொவிட்...

திங்கள், 20 ஜூலை, 2020

விமானத்தை உலகில் முதன்முறையாக பயன்படுத்திய இலங்கைத் தமிழ் மன்னன்

இலங்கையில் தமிழ் மன்னன் இராவணன் தொடர்பில் புதிய கண்டுபிடிப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.இராமாயணத்தின் வில்லனான இராவணன், ராமரின் காலத்தில் இலங்கையின் ஆட்சியாளராக  இருந்துள்ளார்.அவர் இந்தியாவில் இந்துக்களுக்கு ஒரு அரக்கனாக காணப்பட்டாலும், அவர் நிச்சயமாக ஒரு  புதிரானவர் எனவும், ஒரு சிறந்த மன்னன்...

ஞாயிறு, 19 ஜூலை, 2020

நாட்டில் உயர்தர புலமைப்பரிசில் பரீட்சைகளின் திகதி குறித்து முக்கிய அறிவிப்பு

கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விடுமுறை மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் 11, 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்காக  பாடசாலைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி திறக்கப்படுமெனவும் ஏனைய பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

மட்டக்களப்பில் எரிவாயு சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை

மட்டக்களப்பு நகரில் வீடொன்றில் எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து முதியவர் ஒருவர் தற்கொலை  செய்துள்ளார்.இச்சம்பவம் மட்டக்களப்பு நகர், இருதயபுரம் கிராமத்தின் 4ஆம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் தம்பிராசா பத்மராசா (65 வயது) என்பவரே  உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளார்.இந்நிலையில்,...

சனி, 18 ஜூலை, 2020

நாட்டில் பாடசாலைகள் மீள திறக்கப்படுமா இன்று அறிவிப்பு

நாட்டில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இன்று 18-07-20.அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த வாரம் முதல் 2ம் கொரோனா அலைக்கான நிலைமை காணப்பட்டதால் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் கடந்த திங்கட்கிழமை  (17-07-20) வரை  மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து, கற்றல் செயற்பாடுகளை...

வெள்ளி, 17 ஜூலை, 2020

புத்தங்கல பகுதியில் சிவில் பாதுகாப்பு அதிகாரி தன்னை தானே சுட்டு சாவு

சிவில் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் தனது கடமைநேர துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து  கொண்டுள்ளார். அம்பாறை – புத்தங்கல பகுதியிலேயே குறித்த சிவில் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>> ...
Blogger இயக்குவது.