புதன், 31 ஜூலை, 2024

யாழ் சாவகச்சேரி வைத்தியர் அர்ச்சுனா மீதான வழக்கு: நீதிமன்றில் நடந்தது என்ன

யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா மீதான வழக்குகள் இன்றையதினம்(31) சாவகச்சேரி நீதிமன்றில் நீதிபதி அ.யூட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை, தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா
 மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட 5 வழக்குகளே
 குறித்த தினத்தில் விசாரணைக்கு
 எடுக்கப்பட்டிருந்தது
 இதன்போது வைத்தியர் அர்ச்சுனா சார்பாக சட்டத்தரணி ஸெலஸ்ரின் ஆஜராகியிருந்தார். வைத்தியர் அர்ச்சுனா ஊழல் மோசடிகளை தடுக்கும் முகமாகவே கடமை நேரத்தில் வைத்தியர்கள் வெளியே
 செல்வதனைத் தடுத்திருந்தார் எனவும்-
வைத்தியர்கள்
 கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றிவிட்டு பின்னர் மேலதிக நேரக் கடமை என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை சூறையாடுவதாகவும் அவர் தனது வாதத்தின் போது
 சுட்டிக்காட்டியிருந்தார்.
 இதன்போது இரு தரப்பு விவாதங்களையும் கவனத்தில் எடுத்த நீதிபதி, 5 வழக்குகளையும் எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்கு 
தவணையிட்டுருந்தார்.
 அதேநேரம் வைத்தியர் அர்ச்சுணா சாவகச்சேரி வைத்தியசாலையில் வைத்து தனது தொலைபேசி மற்றும் பணத்தை பறித்தமைக்காக வைத்தியர்கள் மீது தொடுத்த வழக்கும் குறித்த தினத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளமை
 என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 30 ஜூலை, 2024

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரிஸை ஆதரிக்கும் பிரபல எழுத்தாளர்

மும்பையில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான கமலா ஹாரிஸின் வேட்புமனுவை 
ஆமோதித்துள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாட்டை சர்வாதிகாரத்திற்கு இழுப்பதைத் தடுக்கக்கூடிய நபர் அவர் என்று தான் நம்புவதாகக் தெரிவித்துள்ளார்.
பிரபல சட்டமியற்றுபவர்கள், எழுத்தாளர்கள், கொள்கை வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் உட்பட இந்திய-அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான 
முன்னணி பெயர்கள் கலந்துகொண்ட மெய்நிகர் ‘தெற்காசிய ஆண்கள் ஹாரிஸ்’ நிகழ்வின் போது ருஷ்டி 
அமெரிக்க துணை
 ஜனாதிபதி ஹாரிஸுக்கு தனது ஆதரவையும் ஒப்புதலையும் வழங்கினார்.
“இது ஒரு முக்கியமான தருணம். நான் பாம்பேயைச் சேர்ந்த 
பையன், வெள்ளை மாளிகைக்கு இந்தியப் பெண் போட்டியிடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
 மேலும் என் மனைவி ஆப்பிரிக்க-அமெரிக்கன், எனவே ஒரு கருப்பு மற்றும் இந்தியப் பெண் போட்டியிடுவதை நாங்கள் விரும்புகிறோம்” என்று ருஷ்டி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 29 ஜூலை, 2024

நாட்டில் வாகன இறக்குமதிக்கான அனுமதியை வழங்க நடவடிக்கை

நாட்டில் வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.  
இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “இந்தத் தேர்தலைக் கேட்டு இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலைக்கு
 ஒரு அரசாங்கம் நாட்டை மீண்டும் இட்டுச் செல்ல முடியாது. 
அப்போது வாகனங்களைத் தவிர மற்ற அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. வாகனக் கட்டுப்பாடு தளர்த்துவது
 தொடர்பாக ஆகஸ்ட் வரையிலான அரசின் நிலைப்பாடு
 எப்படி இருக்கிறது. 
வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக நீக்கப்படும், முதல் காலாண்டில் வணிக நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களுக்கு அனுமதி வழங்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 28 ஜூலை, 2024

நாட்டில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஸ்டியை வலியுறுத்துபவர்களுக்கு ஆதரவு சிறீதரன்

நாட்டில் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது சமஸ்டியை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞானத்தில் வலியுறுத்தினால் அவர்களுக்கு
 ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழரசுக்கட்சி
 பரிசீலனை செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 
கிளிநொச்சியில் இன்று (28.07.2024) இடம்பெற்ற  நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனினும் எதிர்வரும் மாதம் 10 ,11திகதிகளில் மத்திய குழு கூடிய பொது வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது தேர்தல் விஞ்ஞானத்தில் சமஸ்டியை வலியுறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பதா என்று முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 
விக்கினேஸ்வரன் வடமாகாண சபையே நடாத்த முடியாதவர் என்று சுமந்திரன் நேற்றைய தினம் குறிப்பிட்டது தொடர்பாக ஊடக வியலாளர் கேள்வி கேட்ட போது எமது கட்சியைச்சேர்ந்தவரின் கருத்திற்கு
 வியாக்கினம் வழங்குது சரியான விடயம் அல்ல 
விக்கினேஸ்வரன் தான் வழங்க வேண்டும் என்றும் அவர் 
வலியுறுத்தியுள்ளார். 
இப்போதைய கால சூழல் அனைவரையும் ஒன்றிணைத்து செல்ல வேண்டும் ஒற்றுமையை குழப்பி அதனை விட்டு பேசிக்கொண்டு இருந்தால் அடிப்படை அரசியல் கொண்டு செல்வதில் பிரச்சனை உள்ளது.
மகிந்த ராஜபக்ஷ  பிள்ளையானை நம்பி பொலிஸ் அதிகாரம் கொடுக்கலாமா என்று கேட்டிருந்தார்.அதற்காகவே முன்னாள் நீதியரசரை களம் இறக்கி பொலிஸ் அதிகாரம் நிதி அதிகாரம் வழங்குமாறு 
கோரியிருந்தோம் எல்லாருடைய விருப்பத்திலே
 தெரிவு இடம்பெற்றது” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 27 ஜூலை, 2024

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்துள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேலும் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று முதல் அடுத்த 6 மாதங்களுக்கு இந்த தடை நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.என்பது குறிப்பிடத்தக்கது 





 

வெள்ளி, 26 ஜூலை, 2024

நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம்

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு 
அறிவித்துள்ளது.
அதேபோல், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய இடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வியாழன், 25 ஜூலை, 2024

நாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.  
குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது.  
சர்வதேச விசாரணையை தேவை, இழப்பீடுகள் வேண்டாம் எமக்கு பிள்ளைகள் வேண்டும் போன்ற போன்ற கோசங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 



புதன், 24 ஜூலை, 2024

நாட்டில் உத்தேச சமரிசி சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய தேரர்கள்

நாட்டில் உத்தேச சமரிசி சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை திரியணிகைக மகாநாயக்க தேரர்கள் அனுப்பி 
வைத்துள்ளனர்.
 உத்தேச சமரிசி சட்டமூலம் சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் ஒழுக்கக்கேடானது என்று அதில் கூறப்பட்டுள்ளது.  
குறுகிய எதேச்சதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட அரசின் நிர்வாகத்தில் ஏதாவது கேலி செய்யப்பட்டால், அது மாநில 
அராஜகத்திற்கும் சமூகச் சிதைவுக்கும் வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 அதற்கிணங்க, நடைமுறைப்படுத்த முடியாத, நெறிமுறையற்ற இந்த சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 23 ஜூலை, 2024

பாராளுமன்றத்தில் கறுப்பு ஜூலைக் கலவரத்தை நினைவு கூர்ந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கறுப்பு ஜூலைக் கலவரத்தின் 41 ஆவது ஆண்டு நிறைவை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னிமாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் 
நினைவு கூர்ந்தார்.
 பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றும்போதே கறுப்பு ஜூலைக் கலவரத்தை நினைவு கூர்ந்த அவர் மேலும் பேசுகையில், இன்று (23) ஜூலைக் கலவரத்தின் 41 ஆவது 
ஆண்டு தினம் .
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி இலங்கையின் சகல பகுதிகளிலும் தமிழர்கள் மீது தொடர்ந்து 3 தினங்கள் காட்டேறித்தனமான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன . அவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் 41 வருடங்கள் ஆகிவிட்டன. 
ஆனால் இன்னும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தற்போது தமிழர்களுக்கு இருந்த நிலங்களும் ,கலாசார அடையாளங்களும் பறிபோய்க்கொண்டிருக்கின்றன என்பதனை இந்த சபையில் கவலையுடன் பதிவு செய்கின்றேன் என்றார்.என்பது குறிப்பிடத்தக்கது 


திங்கள், 22 ஜூலை, 2024

நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கௌரவம் வழங்கப்படும்

நாட்டில்கௌரவமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும் எனவும் கடந்த பொருளாதார நெருக்கடியின்போது நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்த அவர்களின் பங்களிப்புக்கு நன்றி என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
 குருணாகல் சத்தியவாதி விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற 'விகமனிக ஹரசர' நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 இலங்கையின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பை பாராட்டுவதற்காக, நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட 'விகமனிக ஹரசர' நிகழ்ச்சி வடமேற்கு மாகாணத்தில் 
ஆரம்பிக்கப்பட்டதுடன், இதில் குருணாகல், புத்தளம்,
 அனுராதபுரம், மாத்தளை, கேகாலை 
ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 5,000 பேர் கலந்துகொண்டனர்.
 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடாத்தும் நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் தொழில் முனைவர்களை உருவாக்குவதற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் பரிந்துரைக்கும் சுயதொழிலை
 ஆரம்பிக்கத் தேவையான நிதி மூலதனமாக தலா 50,000 ரூபாவையும் ஜனாதிபதி வழங்கினார். என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 21 ஜூலை, 2024

விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணை ஒன்றுக்கு அமைய அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேற 
முயன்றபோது குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  குற்றச்சாட்டுகள் மற்றும் அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகள் பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
 என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 20 ஜூலை, 2024

யாழில் குழந்தையை கணவனுடன் விட்டுவிட்டு காதலனுடன் ஓடிய தாய்

யாழில் தனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு, கள்ள காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய பெண்ணையும், காதலனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவன் மற்றும் தனது குழந்தையுடன் வசித்து வந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது காதலுடன் ஊரை விட்டு 
சென்று இருந்தார்.
 இது தொடர்பில் கணவனால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண்ணையும் , அவரது காதலனான இளைஞனையும் 
கைது செய்தனர். 
 கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, நீதிமன்ற விசாரணைகளை அடுத்து இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 19 ஜூலை, 2024

நாட்டில் ஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக பார்வையற்றோர் மற்றும் செவித்திறன்குறைபாடுள்ளவர்களும் வாக்களிக்கும் வசதி

நாட்டில் ஜனாதிபதித் தேர்தலில் பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு வாக்களிக்கும் வசதியை முதன்முறையாக ஏற்படுத்தத் தேர்தல்கள் ஆணையம் முடிவு 
செய்துள்ளது.
அதன்படி, பார்வையற்றோர் தங்கள் வாக்குச் சீட்டில் உள்ள அடையாளங்களை பிரெய்லி எழுத்து முறையிலும், செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் சைகை மொழியிலும் அடையாளம் காணும் வகையில்
 சிறப்பு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வியாழன், 18 ஜூலை, 2024

உர்சுலா வான் டெர் லேயன் மீண்டும் ஐரோப்பிய ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக Ursula von der Leyen இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
720 உறுப்பினர்களைக் கொண்ட அறையில் இரகசிய வாக்கெடுப்பில் 401 வாக்குகளும், எதிராக 284 வாக்குகளும் 
ஐரோப்பிய 
ஒன்றியத்தின் சக்திவாய்ந்த நிர்வாகக் குழுவின் தலைமையில் மற்றொரு ஐந்தாண்டு காலத்திற்கு வான் டெர் லேயனின் முயற்சியை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தனர்.
முந்தைய நாள் ஸ்ட்ராஸ்பேர்க்கில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய வான் டெர் லேயன், உக்ரைனில் ரஷ்யாவின் போர், உலகப் பொருளாதாரப் போட்டி மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் சவால்களால் வடிவமைக்கப்பட்ட செழிப்பு மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்ட 
ஒரு திட்டத்தை வகுத்தார்.
“அடுத்த ஐந்து ஆண்டுகள், அடுத்த ஐந்து தசாப்தங்களுக்கு உலகில் ஐரோப்பாவின் இடத்தை வரையறுக்கும். நமது எதிர்காலத்தை நாமே வடிவமைக்கலாமா அல்லது நிகழ்வுகளால் அல்லது மற்றவர்களால் வடிவமைக்கப்பட வேண்டுமா என்பதை இது 
தீர்மானிக்கும்” என்று வான் டெர் லேயன் தனது ரகசிய வாக்கெடுப்புக்கு முன்னதாக தெரிவித்தார்.
 காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதாரத்தின் “பசுமை ஒப்பந்தம்” மாற்றத்தில் பின்வாங்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 17 ஜூலை, 2024

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் எப்போது என்பது வெளியான அறிவிப்பு

இலங்கையில்  ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில்  இடம்பெறுமென நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் இன்று(17.07.2024) காலை சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் இடம்பெற்ற சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சுகாதாரத்துறை அமைச்சர் சினேகபூர்வ அடிப்படையில் எனது காரியாலயத்திற்கு 
வருகை தந்திருந்தார்.
 இதன் பொழுது வடக்கின் சுகாதார நிலைகள் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடபட்டது. இதன்போது புற்றுநோய் சிகிச்சை நிலையமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை
 காணப்படும் நிலையில் அதன் அபிவிருத்தி தொடர்பில் 
கலந்துரையாடப்ட்டது.
 மேலும் 1300 வைத்தியர்கள் மற்றும் 500 தாதியர்கள் நாட்டினை விட்டு வெளியேறியுள்ள நிலையில், மேலும் 15 வைத்தியர்கள் மீள திரும்பியுள்ளதாகவும் பொருளாதார நெருக்கடி
 குறைகின்ற 
பொழுது மீள நாட்டிற்கு திரும்புவார்கள் எனவும் சுட்டிகாட்டப்பட்டது.
 இதேவேளை 850 வகையான மருந்து வகைகளில் 40 வகையான மருந்து வகையே தட்டுபாடு காணப்படுகின்றது
 ஊடகங்களே இதனை பெரிதாக்குவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக
 இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படவுள்ளது 
எனவும் தெரிவித்தார்.
 இதேவேளை இலங்கை தமிழரசு கட்சி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குமா என கேட்டார் ? இதன் பொழுது எமது கட்சி பிரதான வேட்பாளர்களுடன் எமது அதிகாரப்பகிர்வு உட்பட உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி எமது மத்திய 
குழு முடிவெடுக்கும்.
 இதேவேளை எமது மத்தியில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் நிலவுகின்ற கருத்தியலையும் அவருக்கு தெளிவுபடுத்தினேன் . இதற்கு மக்கள் யாழ்ப்பாண மக்கள் தமது வாக்குகளை வழங்குவது அவர்களுடைய உரிமை தொடர்பானது என அவர் மேலும் தெரிவித்தார். என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 16 ஜூலை, 2024

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்தார் யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு
 தெரிவித்துள்ளது.
யுனெஸ்கோவில் இலங்கை உறுப்புரிமை பெற்று 75வது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 15 ஜூலை, 2024

நாட்டில் ஜனாதிபதி தேர்தலிற்கான வேட்பு மனு திகதியை அறிவிக்க தயாராகும் தேர்தல்கள் ஆணைக்குழு

நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை இம்மாத இறுதியில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க
 தெரிவித்துள்ளார்.
 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை நாளை மறுதினம் (17) அரசியலமைப்பின் பிரகாரம் அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும் என அவர் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
 இம்மாத இறுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் திகதியை அறிவிப்பதன் மூலம் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு போதிய அவகாசம் கிடைக்கும் எனவும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் திகதியை விரைவில் அறிவிக்குமாறு எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் தேர்தல் கண்காணிப்புக் குழுவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. 
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு
 வந்து ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் திகதியை விரைவில் அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். எதிர்வரும்
 நாட்களில் ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தகூடிய வாக்காளர் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தவுள்ளதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 எவ்வாறாயினும், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 17 மில்லியன் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெறுவார்கள் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 17 வரை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரத்நாயக்க, அரசாங்க அச்சுப்பொறியாளர், பொலிஸ் மா அதிபர், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினர் தேர்தலுக்குத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 14 ஜூலை, 2024

யாழில் சூரிய மின்னிணைப்பில் மோசடி ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள கோரிக்கை

யாழில் சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கலில் முறைகேடுகள் இடம்பெறுவது தொடர்ச்சியாக அவதானிக்க பட்டு வருகிறது. இது குறித்து ஜனாதிபதி செயலகம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை
 விடுத்துள்ளது.
 குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கலில் தொடர்ச்சி யான முறைகேடுகள் இடம்பெறுவதாக, ஜனாதிபதி செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டு
 செல்லப்பட்டதை தொடர்ந்தே, இது தொடர்பில் ஆராய்ந்து 
அறிக்கையிடுமாறு வலுசக்தி அமைச் சுக்கு உத்தரவு 
பிறப்பிக்கப்பட்டுள்ளது மேலும், யாழில் இயங்கும் பிராந்திய மின் இணைப்புப் பொறியியலாளர் காரியாலயத்தில் 
சூரியசக்தி இணைப்பு அனுமதிக்கான விண்ணப்பங்கள்
 சமர்ப்பிக்கப்படும்போது 
முறைகேடான விதத்தில்அனுமதிகள் வழங்கப்படுவதாகவும், மிக
 நீண்டகாலமாக விண்ணப்பித்தவர்களின் ஆயிரக்கணக்கான விண்ணப் பங்கள் வேண்டுமென்றே கிடப்பில் போடப் பட்டுள்ளன என்றும், 
இவை குறித்து
 மின்சாரசபை யின் பொது முகாமையா ளருக்கு முறைப்பாடுசெய்த வாடிக்கை யாளர்கள் பழிவாங்கப்படுவதாகவும் ஜனாதிபதியின் குறைகேள் அதிகாரிக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 இதனையடுத்தே குறித்த விடயம் தொடர் பில் சுயாதீன விசாரணைகளை மேற் கொண்டு, அறிக்கையிடுமாறு ஜனாதிப தியின் செயலாளரால் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தல் வைடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 13 ஜூலை, 2024

தமிழர் தாயாகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில்  தமிழர் தாயாகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று 
முன்னெடுக்கப்பட்டது.
 வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டு 
வரும் போராட்டத்தின் 2700 நாளான இன்றையதினம் குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும் எங்கே
 எங்கே உறவுகள் எங்கே, கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே என்று கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை
 என்பது குறிப்பிடத்தக்கதாகும்  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





வெள்ளி, 12 ஜூலை, 2024

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பதிவான நிலநடுக்கங்கள்

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் சில நில நடுக்கங்கள் பதிவாகியுள்ளன. மாகாணத்தின் கரையோர
 பகுதிகளில் இவ்வாறு நிலநடுக்கங்கள் பதிவாகியதாக 
தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் குறித்த நிலநடுக்கங்கள் காரணமாக சுனாமி அபாயம் கிடையாது என அறிவிக்கப்பட்டது.
6.4 ரிச்டர் அளவில் முதலாவது நில அதிர்வு பதிவானதாக அமெரிக்க மற்றும் கனடிய பூமி அதிர்வு கண்காணிப்பு நிறுவனங்கள் 
அறிவித்துள்ளனர்.
முதல் நில அதிர்வு பதிவாகி 30 நிமிடங்களில் மேலும் ஒரு நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நில அதிர்வு 4.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் தீவுப் பகுதியில் கரையோரங்களில் சில நில அதிர்வுகள் 
பதிவாகியுள்ளன.
நில அதிர்வு நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாக காலநிலை ஆயத்த மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் போவின் மா தெரிவித்துள்ளார்.
கனடாவில் வருடம் ஒன்றில் ஆயிரக்கணக்கான நில அதிர்வுகள் பதிவாகின்றன எனவும் அதில் அனேகமானவை பிரிட்டிஷ் கொலம்பியாவில் பதிவாகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
 அடிக்கடி நில அதிர்வு இடம் பெறும் பகுதிகளில் மக்கள் ஆயத்த நிலையில் இருப்பது உசிதமானது என அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 11 ஜூலை, 2024

இலங்கை அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள கலந்துரையாடலில் பங்கேற்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (12.07.2024) நடைபெறவுள்ள 5 ஆவது அமெரிக்க - இலங்கை பங்காண்மை கலந்துரையாடலில் இலங்கை சார்பில் வெளிவிவகார 
செயலாளர் அருணி விஜேவர்தன தலைமையிலான உயர்மட்டக்குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
 இலங்கை - அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இன்றைய தினம் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலுக்கு 
இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சின் 
செயலாளர் அருணி விஜேவர்தனவும், அமெரிக்கா சார்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பதில் செயலர் ஜோன் பாஸும் இணைத்தலைமை 
தாங்கவுள்ளனர்.
 இக்கலந்துரையாடலில் பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், காலநிலை மாற்றம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கல்வி மற்றும் கலாசார 
ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையிலான தொடர்புகள் என்பன உள்ளடங்கலாக இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
 அதேபோன்று இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தொடர்புகளை ஊக்குவித்தல், இருநாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கக்கூடிய துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளல், உலக
 அரங்கில் பொது அக்கறைக்குரிய விடயங்களைக் கையாள்வதில் ஒத்துழைப்பைப்பேணல் என்பன பற்றியும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
 இதில் அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்கவும், அமெரிக்காவிலுள்ள இலங்கைத்தூதரக அதிகாரிகளும் பங்கேற்பர்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 10 ஜூலை, 2024

அமெரிக்க காங்கிரஸில் ஈழத்தமிழர்களிற்கான அரசியல் தீர்வு அறிக்கை சமர்ப்பிப்பு

ஈழத்தமிழர்களிற்கு அரசியல் தீர்வை வழங்குவதற்காக சுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என கோரும் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்திற்கு 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளன.
 2024 மே 15ம் திகதி அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு பரந்துபட்ட ஆதரவு காணப்படுகின்ற நிலையில் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளன.
 இது தொடர்பான கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள 150க்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்தின் வரலாற்று சூழமைவையும் தமிழ் மக்களின்
 சுயநிர்ணய உரிமைக்கு தீர்வுகாணக்கூடிய அதன் சாத்தியப்பட்டாமையும் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அந்த தீர்மானத்தை வரவேற்றுள்ளன. இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடையும் தருணத்தில்
 இந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
 நல்லிணக்கம் பற்றி இலங்கை அரசாங்கம் பேசுகின்ற போதிலும் தமிழர் இனப்படுகொலையின் 15 வருட நினைவேந்தல் நிகழ்வின் போது இடம்பெற்ற சம்பவங்கள் நேர்மையான நீதி மற்றும் பொறுப்புக்கூறல்
 குறித்து அரசாங்கம் அரசியல் உறுதிப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
 இராணுவமயமாக்கல்,நிலஅபகரிப்பு,சித்திரவதைகள் தடுத்துவைத்தல் உட்பட ஏனைய மனித உரிமை மீறல்களிற்கு எதிராக தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராடுகின்றனர் எனவும் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
என்பது  குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 9 ஜூலை, 2024

நாட்டில் மன்னாரில் மீண்டும் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடி மக்கள் விசனம்

நாட்டில் மன்னார் பிரதான பாலத்தடி யில் சில வருடங்களாக காணப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் புதிதாக அமைக்க பட்டுள்ளமை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.  
கொழும்பு- அத்துருகிரிய பிரதேசத்தில், நேற்று (8.07.2024) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் பலர் 
காயமடைந்துள்ளனர்.  
எனினும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மன்னாரிற்கு சென்று தலைமன்னார் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உள்ளதாக புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு 
இரகசிய தகவல் கிடைத்துள்ளதாக புலனாய்வு செய்திகள் 
கிடைத்துள்ளன.  
அதற்கு அமைவாக குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மன்னாருக்கு சென்று இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல சந்தர்ப்பங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் மன்னாருக்குச் செல்லும் பிரதான பாலத்தடியில் விசேட இராணுவ சோதனைச் சாவடி 
அமைக்கப்பட்டுள்ளது.  
வேறு மாவட்டங்களில் இருந்து மன்னாரிற்குள் நுழைகின்ற சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சோதனைக்கு உற்படுத்தப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 என்பது  குறிப்பிடத்தக்கது




Blogger இயக்குவது.