ஞாயிறு, 13 நவம்பர், 2016

பெண் பொலிஸாரை கலைத்து கலைத்துத் தாக்கும் அதிர்ச்சிக்காணொளி,

மட்டக்களப்பில் நடு வீதியில் வைத்து கிராம சேவையாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அவரை தூசன வார்த்தைகளால் திட்டிய மங்களராமய விகாராதிபதி அண்மையில் பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிசார் பலர் முன்னிலையில் பெண் பொலிசார் ஒருவரை கலைத்துக் கலைத்து தாக்க முற்படும் காணொளி, ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழர்கள் மென்வலுவைக் கடைப்பிடிக்கவேண்டும் இல்லையெனில் கிடைக்கவிருக்கும் அரசியல் தீர்விற்கு குந்தகம் ஏற்பட்டுவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எல்லோருக்கும் வகுப்பு எடுத்துக்கொண்டுதிரியும் சூழலில் நல்லாட்சி அரசின் ஆசீர்வாதத்தோடு புத்த சிலைகள் வைக்கப்படுவதும், பொது வெளியில் இவ்வாறாக அநாகரினமாக நடந்து வன்முறையைத் தூண்டும் வகையிலுமான செயற்பாடுகளும் மறுபுறம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நல்லாட்சியால் இவற்றை வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது.
காணொளி. புகைபடங்கள் -இணைப்பு ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.