வியாழன், 10 நவம்பர், 2016

சாரதிகளுக்கு எச்சரிக்கை! அபராத தொகை 2500 ரூபாவாக அதிகரிப்பு!

போக்குவரத்து நடவடிக்கையின் போது ஏற்படுத்தப்படும் தவறுகளுக்காக அறவிடப்படும் குறைந்த பட்ச அபராத தொகையை 2500 ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இந்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. அபராத பணத்தை தொலைப்பேசி ஊடாக செலுத்த முடியும்.
தற்போது வரையில் போக்குவரத்து தவறுகளுக்காக அறவிடப்படும் குறைந்தப்பட்ச அபராத பணம் 500 ரூபாவாகும்.
அதேவேளை சிறிலங்காவில் சிற்றூர்ந்து விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இலத்திரனியல் மோட்டார் சிற்றூர்ந்துகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க 
அறிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.