புதன், 6 மே, 2026

மீண்டும் சர்வதேச சந்தையிலும் இலங்கையிலும் உயர்ந்த தங்கத்தின் விலை

மீண்டும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,648 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ள நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 
 கொழும்பு ஹெட்டிவீதி  தங்கச் சந்தை வட்டாரங்களின்படி, இன்று காலை 8 மணியுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை   7,000  ரூபாயால் உயர்ந்துள்ளது.
 அதன்படி,   22 காரட் தங்கத்தின் விலை 363,400 ரூபாவாகுவும்,  24 காரட் தங்கத்தின் விலை  395,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது
. என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் கிளிநொச்சி மாவட்ட வீதி புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

இந்த ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் I ROAD திட்டம் மூலம் புனரமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட வீதிகள் தொடர்பாக கிராம மட்ட அமைப்புக்களை தெளிவு படுத்தும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
 குறித்த கலந்துரையாடலில் I ROAD பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட மட்ட உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ,கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேற்படி புனரமைப்பு பணிகள்  கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நலிவு காரணமாக தடைப்பட்டிருந்தமை என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 5 மே, 2026

நாட்டில் இன்றைய வானிலை பல பகுதிகளிலும் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

இலங்கையில்  பல பகுதிகளில் பிற்பகல் 01.00 மணிக்கு மேல் கடுமையான மழை பொழிவு பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 
 மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவ, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 சில இடங்களில் 50 மி.மீ-க்கு மேல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், முன்னறிவிக்கப்பட்டுள்ளது. 
 அதேநேரம் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு சுமார் (30-40) கி.மீ வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும். 
 இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் ஹொரணையில் பரபரப்பு சம்பவம் நான்கு பெண்கள் கைது

நாட்டில்  ஹொரண மற்றும் கோனப்பொல பகுதிகளைச் சேர்ந்த 26–29 வயதுடைய நான்கு பெண்கள், அங்குருவாதொட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் 
வெளியாகியுள்ளது.
பொலிஸ் தகவலின்படி, ஹொரண பெல்லபிட்டிய பகுதியில் உள்ள ஆற்றுப் பகுதிக்கு குளிக்கச் சென்ற இவர்கள், அங்கு மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. பின்னர் போதை நிலையில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
வீதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் இவர்களை நிறுத்தி பரிசோதனை செய்தபோது, அவர்கள் மது போதையில் இருந்ததாக கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று 
வருகின்றன.
 சம்பவம் தொடர்பான தகவல்கள் பொலிஸ் அறிக்கைகளின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகின்றன; விசாரணையின் பின்னரே முழு உண்மை உறுதியாகும்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 4 மே, 2026

காணாமல் போன முல்லைத்தீவு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

நாட்டில் .முல்லைத்தீவு -கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களும் பாதுகாப்பாக இன்று மீட்கப்பட்டுள்ளனர். கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து
 இருந்து நேற்று முன்தினம் (2) காலை 10 மணியளவில் படகு ஒன்றில் கடற்றொழிலுக்காக குறித்த 2 மீனவர்களும் சென்றிருந்தனர்.
எனினும் நேற்று வரை அவர்கள் கரைக்கு திரும்பாத நிலையில், அந்த பகுதி மீனவர்கள் தேடுதல் பணியினை முன்னெடுத்தனர். 
எனினும் அந்த முயற்சி பலனளித்திருக்கவில்லை என்பதுடன் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் இரண்டாம் நாளாக இன்றும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த இரண்டு மீனவர்களும் சென்ற படகு நடுக்கடலில் இயந்திர கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த இருவரையும் தேடிச் சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது..

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் தையிட்டி விகாரை வீதியை விடுவிக்கிறோம் என இனவாதிகளுக்கு தீனி போட முயற்சி

யாழ் .தையிட்டி விகாரைக்குள் இருக்கும் வீதியை மீட்பதாகக் கூறி சிலர் இனவாதிகளுக்கு தீனி போடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குற்றம் சாட்டியுள்ளார்
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய முயற்சித்த வேளை, காணி உரிமையாளர்கள் சிலருக்கு நம்பிக்கை இல்லை என்பதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால் காணி அளவீடு 
நடைபெறவில்லை.
மீண்டும் காணி உரிமையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசி காணிகளை அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்து 
வருகின்றோம். இந்த விகாரையானது, எமது ஆட்சிகாலத்தில் கட்டபட்ட ஒன்றல்ல.
 காணிகளை மீள கையளிக்கவே நாங்கள் முயற்சிக்கின்றோம். எமது அரசாங்கத்தில் காணிகளை சுவீகரிக்கும் எண்ணம் எமக்கில்லை.
காணி உரிமையாளர்களுடன் மீண்டும் பேசி காணிகளை அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் எவரும் வரவில்லை. எழுத்து மூலத்தை விட எம் மீதான மக்களின் நம்பிக்கையே எமக்கு மிக முக்கியம்.
பவானி வீதியை மிக துரிதமாக விடுவிக்க முயல்கின்றோம். அதற்குள் சிலர் வீதிகளை விடுவிக்க வேண்டும் என குழப்பங்களை ஏற்படுத்தி இனவாதிகளுக்கு தீனி போடுகின்றனர் வீதியை விடுவிப்பதற்கான நடவடிக்கைளை எடுக்கும் போது அதனை குழப்புகின்றனர்.
விகாரை விடயத்தில், பலாலி பொலிஸார் பாதுகாப்பு கடமைகளையும், இனங்களுக்கு இடையிலான நல்லுறவையும் ஏற்படுத்தவே செயற்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது..

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 3 மே, 2026

நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கட்டணங்கள் கனடாவில் அதிகரிப்பு

கனடாவில் .2026 ஏப்ரல் 30 நிலவரப்படி, எக்ஸ்பிரஸ் நுழைவு, மாகாண நாமினி திட்டங்கள் (PNPs) மற்றும் குடும்ப அனுசரணை திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகள் மற்றும் திட்டங்களிலும் கனடாவின் நிரந்தர குடியிருப்பு (PR) செயலாக்கக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான பிரிவுகளில், தோராயமாக 4 முதல் 5 சதவிகிதம் வரை கட்டணம் அதிகரித்துள்ளது. குடும்ப அனுசரணை கட்டணம் மட்டும், அதிகப்படியாக 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 
நீங்கள் குடியிருப்பு அனுமதிக்கு ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்பே விண்ணப்பித்திருந்தாலும், The Right of Permanent Residence Fee (RPRF) கட்டணத்தை பிறகு செலுத்தலாம் என திட்டமிருப்பீர்கள் என்றால் இப்போது நீங்கள் புதிய கட்டணத்தை செலுத்தவேண்டியிருக்கும்.
நீங்கள் ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்கு முன்பே இணையவழியில் விண்ணப்பமும் செய்து, உங்கள் விண்ணப்பத்தையும் கட்டணத்தையும் கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அதை ஏற்றுக்கொண்டு விட்டது என்றால், நீங்கள் கூடுதலாக எதுவும் செய்யத்தேவையில்லை.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


தஞ்சம் கோரியிருந்த இலங்கை இளைஞர் பிரித்தானியாவில் திடீரென கைது

தஞ்சம் கோரியிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் பிரித்தானியாவில் திடீரென கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட உள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது .
ஸ்காட்லாந்தின் தர்சோ நகரில் வசித்து வந்த  சேம் ஹேரத் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 
கடந்த ஏப்ரல் 13ம் திகதி, வழக்கமான பதிவிற்காக போலீஸ் நிலையம் சென்றபோது அவர் திடீரெனக் கைது செய்யப்பட்டு, குடியேற்றத் தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 
இலங்கையில் பௌத்த துறவியாக இருந்த சேம் ஹேரத், அங்கிருந்த சில உயர்மட்டத் துறவிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல்களைப் அம்பலப்படுத்தியதால் தனக்குக் கொலை அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறுகிறார். 
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனுக்கு வந்த இவர், தர்சோ நகரில் ஒரு தன்னார்வலராகவும், அன்பானவராகவும் மக்கள் மத்தியில் 
பெயரெடுத்துள்ளார்.
தற்போது இவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார் .அவரை நாடு கடத்துவதைத் தடுக்க சட்டப் நடவடிக்கைகள் 
தொடங்கப்பட்டுள்ளன.
இதற்கான சட்டச் செலவுகளை ஈடுகட்ட ‘GoFundMe’ மூலம் மக்கள் நிதி திரட்டி வருகின்றனர். இதுவரை சுமார் 2,000 பவுண்டுகள் வரை நிதி சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தேவாலயத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 2 மே, 2026

நாடில் கணிதத்தில் ஓட்டமாவடி மாணவி தேசிய மட்டப் போட்டியில் 'மெரிட் பாஸ்' சாதனை

நாட்டில் தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் மட்டக்களப்பு, ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தின் தரம் 6 மாணவி என்.நீபா ஷைனப் (N. Neeba Zainab) 'மெரிட் பாஸ்' (Merit Pass) பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார். 
வலய, மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் வெற்றி பெற்று, கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்திய இவர், தற்போது அடுத்த கட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். 
கணித ஆசிரியர் எம்.எம். நவாஸின் புதல்வியான இவருக்கு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்
.என்பதும்  குறிப்பிடத்தக்கது.
.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி - இரு எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் ஆறாம் நாளான இன்று  இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் 
             காணப்பட்டுள்ளன.
 இன்று அடையாளம் காணப்பட்ட இரண்டு எலும்புக்கூடுகளுடன் சேர்த்து, செம்மணிப் புதைகுழியில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக  246 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில்  243 எலும்புக்கூடுகள் முழுமையாக 
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
அத்துடன் புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்துக்கிடமான கறுப்பு நிற மண் சேகரிக்கப்பட்டு, தற்போது உலர விடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து மாதிரிகள் பெறப்பட்டு மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி
 வைக்கப்படவுள்ளன.
 புதைகுழிக்குள் மரத்திலான பெட்டி போன்ற உருவம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனைச் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 
இது குறித்த உறுதியான தகவல்கள் அப்பணிகளின் பின்னரே தெரியவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது.
.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வெள்ளி, 1 மே, 2026

நாட்டில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு எரிபொருள் விலை மாற்றம் இல்லை

நாட்டில்  வெள்ளிக்கிழமை.01-05-2026.இன்று எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது
எரிபொருள் விலை திருத்தம் குறித்து இன்று தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும், இது தொடர்பான தீர்மானம் எதிர்காலத்தில் எடுக்கப்படும் எனவும் கூட்டுத்தாபனத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

இன்று யாழில் திரண்ட மக்கள்: சுதந்திர மனித உரிமை அமைப்பின் மே தினப் போராட்டம்

இன்று  இலங்கையின் 137-வது சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கை சுதந்திர மனித உரிமை அமைப்பினால் (Freedom Human Rights Organization) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கவனயீர்ப்புப் பேரணி இன்று யாழ் பொது நூலகத்திற்கு முன்பாக உணர்வுபூர்வமாக
 நடைபெற்றது.​
இந்தப் பேரணியில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சுலோகங்கள் ஏந்தப்பட்டிருந்தது, இனங்களைக் கடந்து தொழிலாளர் வர்க்கத்தின் பலத்தை பறைசாற்றுவதாக அமைந்தது "தொழிலாளர்களைப் பாதுகாப்போம்", "தொழில் முயற்சியைப் பாராட்டுவோம்" போன்ற பாதுகாப்பு வாசகங்கள் முழங்கப்பட்டன.
உழைப்பிற்கேற்ற ஊதியம் மற்றும் சுதந்திரமான வாழ்வுரிமைக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கத்தோலிக்க மதகுருமார், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினரும் இந்தப் போராட்டத்திற்குத் தார்மீக ஆதரவை வழங்கினர்.
தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தும் சுலோக அட்டைகளை ஏந்தி, யாழ். பொது நூலக முன்றலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பிய கோஷங்கள் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தன.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 30 ஏப்ரல், 2026

அவுஸ்திரேலியவில் சுகமில்லாத மகனை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த தாய்

தாய் தனது 6 வயது மகனுக்குப் புற்றுநோய் இருப்பதாகப் பொய் கூறி, பொதுமக்களிடம் நிதி வசூலித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த அவுஸ்திரேலியத் தாய்க்கு அந்த நாட்டு நீதிமன்றம் கடும் தண்டனை 
விதித்துள்ளது.
தெற்கு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 45 வயதுடைய இந்தப் பெண், தனது மகனுக்குப் புற்றுநோய் இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் உருக்கமான பதிவுகளை இட்டுள்ளார்.
இதனை நம்பிய பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சிறுவனின் மருத்துவச் செலவுக்காகப் பெருமளவு நிதியை 
வழங்கியுள்ளனர்.
பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அந்தத் தாய் செய்த செயல்கள் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டன. சிறுவன் புற்றுநோயாளி என்று நம்புவதற்காக அவனது தலைமுடி மற்றும் புருவங்களைச் சிரைத்துள்ளார்.
உடலின் பல்வேறு பகுதிகளில் கட்டுகளைப் போட்டு, அவனை எப்போதும் சக்கர நாற்காலியில் (Wheelchair) அமர வைத்து 
நாடகமாடியுள்ளார்.
வசூலித்த பணத்தை மகனின் மருத்துவத்திற்குப் பயன்படுத்தாமல், தனது ஆடம்பரத் தேவைகளுக்காகவும் உல்லாசப் பயணங்களுக்காகவும் செலவிட்டுள்ளார். சிறுவனின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
மருத்துவப் பரிசோதனையில் சிறுவன் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதும், அவனுக்குப் புற்றுநோய் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. அத்துடன், பணத்திற்காகத் தாய் திட்டமிட்டு இந்த நாடகத்தை ஆடியது 
அம்பலமானது.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி, "ஒரு தாய் தனது சொந்தப் பிள்ளைக்கே இழைத்த இந்தக் கொடுமை மன்னிக்க முடியாதது"
 என்று சாடினார்.
பணத்திற்காகப் பிள்ளையின் ஆரோக்கியத்தையும் அடையாளத்தையும் சிதைத்த குற்றத்திற்காக அந்தப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் தொடருந்து பயணிகளின் கவனத்திற்கு: வடக்கிற்கான சேவைகளில் புதிய திருத்தங்கள்

யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தொடருந்து ஒன்று, வவுனியா - புளியங்குளம் பகுதியில் இயந்திர சிக்கலுக்கு 
உள்ளாகியுள்ளது.
இதனால் வடக்கு மார்க்கத்திலான தொடருந்து சேவை தாமதமாகியுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் அசங்க சமரசிங்க எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
தொடருந்தின் இயந்திர சிக்கலைச் சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்..என்பதும்  குறிப்பிடத்தக்கது.


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 29 ஏப்ரல், 2026

தற்போது மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: பனாமா கால்வாய் வழியாக பயணிக்கும் கப்பல்கள்

தற்போது ஈரான் மீதான போர் காரணமாக, அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் பனாமா கால்வாய் வழியாக கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சுமார் 300 கூடுதல் கப்பல்கள் கடந்து சென்றுள்ளதாக
 பனாமா கால்வாய் அதிகார சபையின் நிதித் தலைவர் 
தெரிவித்துள்ளார்.
"மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை சீராகும் வரை இந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று விக்டர் வியல் ஒரு கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி
 வெளியிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான் கடற்கரையோரம் உள்ள நீர்வழியினைத் தவிர்ப்பதற்காக வேறு நாடுகளுக்கு திருப்பி விடப்பட்ட அல்லது வேறு நாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட சரக்குகளை ஏற்றிச் செல்லும் வணிகக் கப்பல்கள் இப்போது பனாமா கால்வாய் வழியாகப்
 பயணிக்கின்றன.
இந்தக் கால்வாயைக் கடப்பதற்கான சராசரி கட்டணம் ஒரு கப்பலுக்கு 300,000 டொலர் முதல் 400,000 டொலர் வரை வசூலிக்கப்படுகிறது. மேலும், கடைசி நிமிடத்தில் கால்வாயைக் கடப்பதற்கான அனுமதியை உறுதி செய்ய சில கப்பல்கள் கூடுதலாக 425,000 டொலர் வரை கட்டணம் செலுத்துவதாக அசோசியேட்டட் பிரஸ் இந்த வார தொடக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.                                                      என்பதும்  குறிப்பிடத்தக்கது                                                                                                                                              

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சில நிறுவனங்கள் விமானங்கள் கட்டுப்படியாகாத இயக்கச் செலவுகள் இருப்பதாக எச்சரித்துள்ளது

 தற்போது ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வானூர்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு, இந்திய வான்வழிப் போக்குவரத்துத் துறை "
தீவிர அழுத்தத்தில்" இருப்பதாகவும், சில நிறுவனங்கள்
 "செயல்பாடுகளை நிறுத்தும் விளிம்பில்" இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
மே 1 ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு முன்னதாக, அவசர விலை நிவாரணத்தை வழங்குமாறு அரசாங்கத்திடம் இக்கூட்டமைப்பு கோரிக்கை
 விடுத்துள்ளது.
மசகு எண்ணெயை வானூர்தி எரிபொருளாக சுத்திகரிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டும் இலாப வரம்பு, ஒரு பீப்பாய்க்கு 11-18 டொலரிலிருந்து தற்போது 130 டொலருக்கும் அதிகமாக 
உயர்ந்துள்ளது.
இது மசகு எண்ணெய் விலையை விட (பீப்பாய் ஒன்றுக்கு 72 டொலரிலிருந்து 118 டொலராக உயர்வு) மிக வேகமாக எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. கொவிட்-19 காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போன்ற "கிரெக் பேண்ட்" விலை நிர்ணய முறையை 
அறிமுகப்படுத்துமாறு 
இந்திய வானூர்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு முன்மொழிந்துள்ளது. 
இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் நியாயமான இலாபத்தைப் பெறுவதுடன், வானூர்தி நிறுவனங்களின் சுமையைக் குறைக்க முடியும். ஏப்ரல் 1 அன்று உள்நாட்டு வானூர்தி எரிபொருள் 
விலையை 25 வீதம் மட்டுமே உயர்த்திய அரசாங்கம், சர்வதேச வானூர்திகளுக்கான எரிபொருள் விலையை கிட்டத்தட்ட 100 வீதம் அதிகரித்துள்ளது.
இதனால் சர்வதேச சேவைகளை நடத்துவது சாத்தியமற்றதாகிவிட்டதோடு, பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய வானூர்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வானூர்தி எரிபொருளுக்கு தற்போது 11 வீத உற்பத்தி வரி விதிக்கப்படுவதுடன், மாநில அளவிலான மதிப்பு கூட்டு வரி மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் 29 வீதம் மற்றும் டெல்லியில் 25 வீத வரி 
வசூலிக்கப்படுகிறது.
மும்பை, பெங்களூரு போன்ற முக்கிய மையங்களிலும் 16 வீதம் முதல் 20 வீத வரை வரி காணப்படுகிறது. இந்தியாவின் 95 சதவீத விமானப் போக்குவரத்துச் சந்தையைக் கொண்டுள்ள இந்த நிறுவனங்கள், போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடல் போன்றவற்றால்
 ஏற்பட்டுள்ள இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க கலால் வரி மற்றும் வற் வரி குறைப்பு போன்ற அவசர நடவடிக்கைகளை அரசாங்கத்திடம் எதிர்பார்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
என்பதும்  குறிப்பிடத்தக்கது                                                                                                                                              

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 28 ஏப்ரல், 2026

கனேடிய பிரதமர் எரிபொருள் மீதான உற்பத்தி வரியை நீக்குவதாக அறிவிப்பு

கனடா  ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதி செய்த மறுதினமே, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய உற்பத்தி வரியை தற்காலிகமாக நீக்குவதாகப் பிரதமர் மார்க் கார்னி
 அறிவித்துள்ளார்.
இந்த வரி நீக்கம் வரும் திங்கட்கிழமை முதல் செப்டம்பர் 7ம் திகதி வரை அமலில் இருக்கும். இதன் மூலம் பெட்ரோல் லீட்டருக்கு 10 காசுகள், டீசல் லீட்டருக்கு 4 காசுகள் குறையும், விமான எரிபொருள் லீட்டருக்கு 4 காசுகள் வரி நீக்கப்படும்.
இந்த தற்காலிக வரிச் சலுகையினால் அரசுக்கு சுமார் 2.4 பில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் உடனான போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் கார்னி, "ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி வழியான எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இது கனடியர்களிடையே ஏற்படுத்தியுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க இந்த 'வரி விடுமுறை' ஒரு பாலமாக அமையும்," என்று ஒட்டாவாவில் 
தெரிவித்தார்.
தற்போது கனடாவில் ஒரு லீட்டர் பெட்ரோலின் சராசரி விலை 1.76 டொலராக உள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு இது 1.26 டொலராக இருந்தது 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை அளக்க மீண்டும் முயற்சி

யாழ் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 08 மணிக்கு அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட செயலர் காணி உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

பேருந்துகளில் பயணிகள் சுவிஸ் லவுசான் மாநிலத்தில் தொலைபேசி பேச தடை

.புதிய சட்டத்திட்டங்கள் சுவிற்சர்லாந்திலே  2026ம் ஆண்டு முதலாம் மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலாக்கப்பட்டது. அது கட்டடச் சட்டங்கள், பயணச் சட்டங்கள் என்ற பல 
வகையாக உள்ளது. 
இந்நிலையில், ஸுக் மாநிலத்தில் பேருந்துகளில் நாங்கள் பயணிக்கும் போது எந்த உணவுகளையும் அதற்குள்ளே வைத்துச் சாப்பிடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. 
அதே வழியில் தற்போது லவுசான்மாநிலத்தில் பேரூந்துகளில் இருந்து தொலைப்பேசி பேசுவது தடை 
செய்யப்பட்டிருக்கிறது. 
தொடர்ந்து ஏனைய மாநிலங்களிலும் மேற்குறிபிடிப்பட்ட சட்டம் தொடரும் என நம்பப்படுகிறது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 27 ஏப்ரல், 2026

நாட்டில் தொடருந்து ஓட்டுநர்களின் அதிரடி முடிவு: வேகம் குறையும் புகையிரதங்கள்.

இலங்கையில் தொடருந்து ஓட்டுநர்கள் இனிவரும் காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாடுகளை கடுமையாகப் பின்பற்றி தொடருந்துகளை இயக்கத் தீர்மானித்துள்ளதாக லோகோமோட்டிவ் இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜீவ குணவர்தன 
தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தொடருந்து பயணங்களில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாத்துவ பகுதியில் தடம் புரண்ட 'சாகரிகா' தொடருந்து ஊழியர்கள் நால்வர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
"சாகரிகா தொடருந்து தடம் புரண்ட சம்பவத்திற்காக சாரதி உள்ளிட்ட ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது தவறானது. அவர்கள் கடமைக்கு சமூகமளித்தாலும், நிர்வாகம் அவர்களைப் பணியில் அமர்த்துவதில்லை. இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட தவறு அல்ல" 
எனத் தெரிவித்தார்.
தொடருந்தில் 80 சதவீதமானவற்றில் வேகத்தை அளவிடும் கருவிகள் சரியாக இயங்குவதில்லை எனவும், தொடருந்து தண்டவாளங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை எனவும் அவர்
 குற்றம் சாட்டினார்.
"இதுவரை காலமும் ஓட்டுநர்கள் தமது வேலைப் பாதுகாப்பைப் பணயம் வைத்தே தொடருந்தை சரியான நேரத்திற்கு இயக்கினர். ஆனால் இனி அந்த அவதானத்தை எடுக்கப் போவதில்லை.
வேகக் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றுவதால் தொடருந்து தாமதமாகவே இயங்கும்" எனத் தெரிவித்தார். குறைபாடுகள் உள்ள தொடருந்துகளைத் திருத்திக் கொடுக்குமாறு கோரிக்கை
 விடுத்துள்ள அவர்கள், அவ்வாறு செய்யத் தவறினால் அந்த தொடருந்துகளை இயக்குவதில் இருந்து விலக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.