சனி, 30 நவம்பர், 2024

நாட்டில் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய திட்டமிடும் அரசாங்கம்

 நாட்டில்  டாக்டர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை (NFTH) அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் சுகாதார அமைச்சில் சந்திப்பின்போதே
 இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக 
குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதன்போதுசுகாதார அமைச்சகத்தின் கீழ் NFTH ஐ கையகப்படுத்தவும், சிறப்பு மருத்துவர்கள் உட்பட அனைத்து ஊழியர்களையும் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 29 நவம்பர், 2024

நாட்டில் அதி சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானம்

அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
 இந்த சொகுசு வாகனங்களைப் பராமரிக்க அரசாங்கம் பாரிய செலவைச் சுமக்க வேண்டியுள்ளதுடன், இவற்றில் பெரும்பாலானவை 
முன்னாள் அமைச்சர்களே பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது.




வியாழன், 28 நவம்பர், 2024

நாட்டில் உள்ளுராட்சி தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

நாட்டில்உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கான திகதிகளை நிர்ணயிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 
இதன்படி தேர்தல் ஆணைக்கு 27-11-2024.அன்று கூடி கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளது. 
பரீட்சைகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் தேர்தலை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 27 நவம்பர், 2024

நாட்டில் வடக்கு கிழக்கில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

நாட்டில் புதுக்குடியிருப்பில் வர்த்தக சங்கத்தினர் அனைத்து கடைகளையும்
 பூட்டி.27-11-2024.  இன்று புதன்கிழமை மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க ஆதரவு வழங்கியுள்ளனர்.
 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் பூட்டி யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காக ஆதரவு
 வழங்கியுள்ளதாக
 புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் தர்மலிங்கம் நவநீதன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு இன்று மாலை அஞ்சலி செலுத்துவதற்கு 
தயாராகி இருக்கின்றன. மேலும் மாவீரர் தின நினைவேந்தல் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில்.27-11-2024. புதன்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் பொதுசுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது தியாகி திலீபனின் நினைவுத் தூபி 
முன்பாகவும் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள மாவீர்ர் நினைவாலயம் முன்பாகவும் சிவாஜிலிங்கம் தலைமையிலான நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.







 

செவ்வாய், 26 நவம்பர், 2024

நாட்டில் ஒட்டுமொத்த பரீட்சை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிடும் அரசாங்கம்

நாட்டில் கல்வி வகுப்புகளை தடை செய்ய தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 
 இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டுள்ள அவர்,  கல்வியில் விரிவான சீர்திருத்தத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட 
வேண்டும் என்றார். 
 தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் கல்வியின் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் தொடர்பிலான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,  முறையான கலந்துரையாடலின் பின்னர், 
ஒட்டுமொத்த பரீட்சை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது  


 


 

திங்கள், 25 நவம்பர், 2024

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு இலங்கையில் தடையில்லை அனுர அரசாங்கத்தின் முடிவிற்கு பெரும் வரவேற்பு

 

இலங்கையில் மாவீரர் தின வார நினைவுகூரல் நிகழ்வுகள் தற்பொழுது ஆரம்பமாகி நினைவுகூரப்பட்டு வருகின்றது.
 இந்த நிலையில் ஆட்சி மாற்றம் நடந்த இந்த சூழ்நிலையில் மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக இருந்த மாவீரர் தின நிகழ்வுகள் பற்றிய 
ஐய்யப்பாடுகள் எழுந்த வண்ணம் இருந்தன.
ஆனால் அரசாங்கம் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடையில்லை என அறிவித்துள்ளது. அதாவது நாட்டின் சட்டத்திட்டங்களை மதித்து அதற்கு இணங்க மாவீரர் தினத்தை கடைப்பிடிக்குமாறு பொது 
பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால 
தெரிவித்துள்ளார்.
 போரின் போது உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவு கூருவதை அரசாங்கம் தடுக்காது எனவும் நினைவுகூருவதற்கான உரிமை 
மற்றும் நாட்டின் சட்டக் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் மதித்து, சட்டத்தின் எல்லைக்குள் நினைவேந்தல்களை நடத்துமாறும் கோரிக்கை 
விடுத்துள்ளார்.
 யுத்தம் நிறைவடைந்ததன் பிற்பாடு இலங்கையில் மாவீரர் தின நினைவேந்தல்களிற்கு கடந்த கால அரசாங்கங்களினால்  தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் துயிலும் இல்லங்களுக்கு
 எதிராகவும் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்து நீதிமன்றங்களை பொலிஸார் நாடுவது வழமையாக நடந்து வரும் செயற்பாடாக இருந்தது. 
 அவ்வாறு இருந்தும் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் ஒரு சிலரால் இந்த நினைவேந்தல் அனுஷ்ட்டிக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை இது முற்றிலுமாக மாறி அரசாங்கம் தற்பொழுது 
வெட்டவெளிச்சமாக தடையில்லை என அறிவித்துள்ளமை அனுர அரசாங்கம் மீது தமிழ் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை
 ஊட்டியிருக்கின்றது.
 அரசாங்கம் பொலிசாருக்கும் மாவீரர் தினம் தொடர்பில் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அதாவது மாவீரர் தின நிகழ்வுகளில் பொது மக்கள் பங்கேற்கும் பொழுது 
அவர்களுக்கு இடையூறுகளை விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
அதே போல் பாதுகாப்பு படையினருக்கும் இந்த அறிவுறுத்தலை அரசாங்கம் விடுத்துள்ளது. அதே போல் 26 மற்றும் 27ம் திகதிகளில் பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு முடிவு 
எடுக்கப்பட்டிருந்த 
நிலையில் மாவீரர் தினம் காரணமாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொள்ள வேண்டும் என்பதற்காக குறித்த 
அமர்வுகளை ஒத்திவைத்துள்ளமையும் என்பதாகும் .
 இவற்றை எல்லாம் நோக்கும் பொழுது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்களுக்கு ஒரு வித நம்பிக்கையை ஊட்டும் செயற்பாடாக அமைந்துள்ளது. 
 இந்த நிலையில் இலங்கையில் என் பி பி அரசாங்கத்தினால் மாற்றம் நிகழும் என்பது ஒரு நம்பிக்கைக்குரிய விடயமாக
 அமைந்துள்ளது.
 எதுஎவ்வாறாக இருந்தாலும் மாவீரர் தின நிகழ்வுகள் இலங்கையில் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கு தடை நீக்கத்தை செய்த என் பி பி அரசாங்கத்திற்கு இந்த இணையமும் நன்றிகளை தெரிவிக்கின்றன 
என்பது குறிப்பிடத்தக்கது 



ஞாயிறு, 24 நவம்பர், 2024

நாட்டில் மாவீரர்கள் தினத்துக்கு தடை இல்லை தேசிய மக்கள் சக்தி அறிக்கை

தமிழ் மக்கள் உயிர்நீத்தவர்களுக்கான வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எவ்வித தடையும் கிடையாது.
அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தமுடியும் என்று புதிய அரசின் கடற் றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிர்நீத்தவர்கள் தினத்தை தமிழ் மக்கள் இம்முறை எந்தவிதமான கெடுபிடிகளும் இன்றி நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்க முடியும்.பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்கவேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 தமிழ் தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 என்பது குறிப்பிடத்தக்கது.




சனி, 23 நவம்பர், 2024

யாழ் சுண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது

யாழ் சுண்டிக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவேந்தலும், பெற்றோர் கௌரவிப்பும் கிளிநொச்சியில்.23.11.2024. இன்று உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது.
 கடந்த 7 ஆண்டுகளாக சுண்டிக்குளம் இளைஞர்களால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
 2024ம் ஆண்டு மாவீரர் வாரம் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நிகழ்வு எழுச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. மாவீரர்களின் பெற்றோரால் பொது உருவப்படம் ஏந்திவரப்பட்டது. 
எழுச்சி கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன், வீதி வளைவும் அமைக்கப்பட்டு பெற்றோர் அஞ்சலி மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், மலர்தூவி 
அஞ்சலிக்கப்பட்டது. 
இதன்போது மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவீரர் பெற்றோரை கெளரவிக்கும் வகையில் உலருணவுப்பொதியும், மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
என்பது குறிப்பிடத்தக்கது
.
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வெள்ளி, 22 நவம்பர், 2024

நாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவீரர் வார நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக ஆரம்பம்

நாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவீரர் வார நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக. 21-11-2024.அன்று  
ஆரம்பமானது.
 மாவீரர் தினத்தின் இறுதி நாளான 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் நேற்று மகாவீரர் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
 கிளிநொச்சி பெரிய பரந்தன் பிரதேசத்தில் நடைபெற்ற மவீரர் தின வைபவம் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்றதுடன், உயிரிழந்த 
மாவீரர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தி, அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
 1982 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி, லெப்டினன் சங்கர் என்ற விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி, போரில் உயிரிழந்த முதலாவது விடுதலைப் புலி உறுப்பினராக மரணமடைந்ததையடுத்து, அவரது
 நினைவாக 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முல்லைத்தீவு நிட்டகைக்குளம் காட்டில் முதலாவது மகாவீரர் தின விழா கொண்டாடப்பட்டது.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 21 நவம்பர், 2024

மீண்டும் எமது நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமில்லை கொள்கைப் பிரகடன உரையில் ஜனாதிபதி

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய குற்றங்கள் குறித்து மீண்டும் விசாரணைகளை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சபையில் 
தெரிவித்துள்ளார்.
 தனது கொள்கை விளக்க பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில்
 இடமில்லை.
 எந்தவொரு மதவாதத்திற்கும் இடமில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். “ஆனால் எமது நாட்டில் மீண்டும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத, கோசங்களை 
கட்டியெழுப்ப எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என 
உறுதியளிக்கிறேன்” அனைவரும் மக்கள் பிரதிநிதிகள் என்றால், நாடாளுமன்றத்தில் கூறப்படும் அனைத்தையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
 வலுவான அரச சேவையின்றி நாடு ஒருபோதும் முன்னோக்கி செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். “வினைத்திறன் மிக்க அரச சேவை, மக்களின் நலனுக்காகச் செயற்படும் பொதுச் சேவை, இந்த நாட்டில் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என நாங்கள் நம்புகின்றோம். அதற்காக அரச ஊழியர்களிடமிருந்தே எமக்கு பலமான ஆணை 
வழங்கப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். 
அதில் கவனம் செலுத்தியுள்ளோம்” இனம், மதம், மொழியின் அடிப்படையில் யாரும் தனிமைப்படுத்தப்படக்கூடாது ஒவ்வொரு 
பிரஜையும் அவரவர் மதம், கலாசாரம் மற்றும் மொழியின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்படக் கூடாது என்றும் ஜனாதிபதி 
தெரிவித்தார். “அரசியல் மாற்றங்கள் இருக்கலாம். சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. 
எனவே, அனைவருக்கும் அச்சம் மற்றும் சந்தேகம் இல்லாத சுதந்திர ஜனநாயக அரசை உருவாக்குவது நமது பொறுப்பாகும். அதை 
நாங்கள் உருவாக்குவோம் என்பதை உறுதியளிக்கிறோம்.”
 கடந்தகாலங்களில் இடம்பெற்ற குற்றங்களுக்கு
 தீர்வு “சட்டம் அமுல்படுத்தப்படுவதை 
மக்கள் உணர 
வேண்டும். சட்டத்தின் மீது மக்கள் வைத்திருந்த
 நம்பிக்கையை உடைத்தெறிவதே சமீப காலமாக நாட்டில் நடந்துள்ளது. சட்டம், ஒழுங்கு மீது பொதுமக்களின் நம்பிக்கை தகர்ந்து விட்டது. இதற்குப் பிறகு யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. 
அனைவரும் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். சட்டத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்.” கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய குற்றச் செயல்கள் தொடர்பில் மீள விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட 
வேண்டும் எனவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். “நான் உங்களுக்கு 
உத்தரவாதம் தருகிறேன். 
சர்ச்சைக்கு வழிவகுத்த குற்றங்கள், அதற்கு காரணமானவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு, அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். சட்டத்தையும் நீதியையும் அனுமதிக்கும் ஒரு அரசு நமக்குத் தேவை” சர்வதேச நாணய நிதியத்துடனான
 ஒப்பந்தம் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் ஒப்பந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட முடியும் எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
 சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னோக்கி செல்லும் பயணத்தில் இது மிகவும் முக்கியமான படியாகும் என்றும் ஜனாதிபதி கூறினார். “பொருளாதாரம் மிகவும் நுணுக்கமாக வீழ்ச்சியடைய அனுமதிக்காமல் எல்லா பக்கங்களிலும் இருந்து சிந்திக்க வேண்டிய ஒரு காலகட்டத்திற்கு
 நாம் வந்துள்ளோம். 
இந்த பொருளாதாரம் தவறு செய்ய எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை.எனவே ஒவ்வொரு நுட்பமான இடத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” புதிய பொருளாதார மூலோபாயத்தில் பிரவேசிக்கப்பட வேண்டும் என்றும் அது மூன்று பகுதிகளைக் கொண்டது என்றும் ஜனாதிபதி
 தெரிவித்தார்.
 “முதலாவதாக, பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியில் விரைவான வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் அவசியம். அப்படியானால் அந்த பொருளாதாரத்தில் மக்களை ஈடுபடுத்த வேண்டும் என்பதே அந்த பொருளாதாரத்தின் அடுத்த பண்பு.மக்கள் ஒதுக்கப்பட்ட பொருளாதாரத்தால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. பொருளாதாரத்தின் ஒவ்வொரு செயல்முறையிலும் மக்கள் தங்கள் திறனைப் பொறுத்து
 பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக 
இருக்க வேண்டும். 
மூன்றாவது குணாதிசயம் என்னவென்றால், நாம் எவ்வளவுதான் தேசியச் செல்வத்தை உருவாக்கினாலும், அந்தச் செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிந்தால், அது அரசை நிலைப்படுத்தாது.பொருளாதார 
பலன்கள் நியாயமான முறையில் மக்களுக்கு கிடைக்க
 வேண்டும் என்பதே எங்கள் கொள்கை.” எரிசக்தி சந்தை எரிசக்தி சந்தை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என
 ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இது மிகவும் உணர்ச்சிகரமான 
இடம் என்றும், நிதிச் சந்தையும் அத்தகைய முக்கியமான இடம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
 இதன்படி, அரச பங்காக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும், சிதறிய சந்தைக்குப் பதிலாக சந்தை ஒழுங்குபடுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். கூட்டுறவு வலையமைப்பை மீண்டும் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து 8 மில்லியன் டொலர் பொருளாதாரத்தை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 5 வருடங்களுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடைய நிபுணர்களின் எண்ணிக்கையை 2 இலட்சமாக உயர்த்த எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத் துறையின் ஏற்றுமதி வருமானம் 5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
 அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம் எதிர்வரும் வரவு செலவு திட்ட பிரேரணையில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி 10 ஆவது 
பாராளுமன்ற அமர்வின் போது தனது கொள்கை பிரகடனத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அக்டோபர் முதல் அனைத்து ஓய்வூதியர்களின் கொடுப்பனவுகளிலும் 3,000 ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 20 நவம்பர், 2024

நாட்டில் கிளிநொச்சியில் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு

நாட்டில் கிளிநொச்சி பெரிய பரந்தன் வட்டாரத்திற்கான மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு உருத்திரபுரம் முருகன் ஆலய அறநெறிப்பாடசாலை மண்டபத்தில்.20-11-2024. இன்று  பிற்பகல் 
நடைபெற்றது. 
 பெரிய பரந்தன் வட்டார தமிழரசுக்கட்சியின் அமைப்பாளர் சு.யதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டிருந்தார்.
 பெரிய பரந்தன் வட்டாரத்தைச்சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் கெளரவிக்கப்பட்டனர்.என்பது குறிப்பிடத்தக்கது





 

செவ்வாய், 19 நவம்பர், 2024

நாட்டில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது

 

நாட்டில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்.19-11-2024. இன்று  நடைபெறவுள்ளது. 
 அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. 
 22 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை நேற்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. 
 இதேவேளை, புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் நாளை மறுதினம் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளனர். 
 எவ்வாறாயினும், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


திங்கள், 18 நவம்பர், 2024

இலங்கை பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் தயார்நிலையில்

 பத்தாவது  பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடாத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக 
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் சாளரம் ஏற்படுத்தப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர 
தெரிவித்துள்ளார். 
 இந்த சாளரம் இன்றும் (19.11) நாளையும் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பாராளுமன்ற வளாகத்தில் திறந்திருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 அங்கு அனைத்து எம்.பி.க்களுக்கும் பயனுள்ள தகவல் ஆவணங்கள் வழங்கப்படும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடையாள அட்டைக்கு புகைப்படங்கள் எடுக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் தொடர்பான கைரேகைகள் மேற்கொள்ளப்படும்.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 17 நவம்பர், 2024

நாட்டின் தமிழ் அல்லது முஸ்லிம் ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் அனுரவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டின் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க வழங்கிய வாக்குறிதிகள் உண்மை எனில் உடனடியாக மாவீரர் துயிலுல் இல்லங்களிலிருந்து வெளியேறி மாவீரர் நாளுக்கு முன்னதாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த 
வேண்டும் என யாழ் மாவட்டத்தில் பாராளுமன்ற 
தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட பொன் சுதன் 
தெரிவித்துள்ளார்.
வடமராட்சி பகுதியில் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், போரினால் தமது பிள்ளைகளை பறிகொடுத்த தாய்மார்கள் கூட உங்களது வாக்குறுதிகளை நம்பி வரலாற்றில் என்றுமில்லாதவாறு தங்களிற்க்கு 
வாக்களித்துள்ளார்கள். 
இது தாங்கள் வழங்கிய நம்பிக்கையின் அடிப்படையில் ஆகும், எனவே அந்த வாக்குறுதிகள் உண்மை எனில் முதல் கட்டமாக தாங்கள் யுத்தத்தில் மரணித்தவர்களை அடக்கம் செய்தவர்களை புதைத்த
 இடகக்களிலிருந்து உடனடியாக வெளியேறி நல்லெண்ணத்தை 
காண்பிக்க வேண்டும்.
உண்மையான நல்லிணக்கம், சமாதானத்தை ஏற்படுத்துவதற்க்கு தமிழ் அல்லது முஸ்லிம் ஒருவரை நாட்டின் பிரதமராக நியமிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். குறிப்பிடத்தக்கது என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 16 நவம்பர், 2024

நாட்டின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் கொள்கை அறிக்கையை சமர்ப்பிக்கும் ஜனாதிபதி

 

நாட்டின்  பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வின் தொடக்கத்தில் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை ஜனாதிபதி 7அவர்கள் 
நவம்பர் 21, 2024 அன்று பிற்பகல் 3:00 மணிக்கு சமர்ப்பிக்க உள்ளார். 
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கும், நாடாளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாக நாடாளுமன்றம் அறிக்கை ஒன்றை 
வெளியிட்டது. 
அதன்படி, பாராளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைக்கிறார். 
 இங்கு ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக தனது அரசாங்கத்தின் பார்வை பற்றிய விரிவான பகுப்பாய்வை பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் வழங்கவுள்ளார்.  என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 15 நவம்பர், 2024

நாட்டின் பத்தாவது பாராளுமன்றத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள்

நாட்டின் பத்தாவது  நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற.14-11-24. அன்றய தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
மாவட்டரீதியாக கட்சிகள் பெற்ற வாக்குகள்
திருகோணமலை மாவட்டம்  - மூதூர் தேர்தல் தொகுதி

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)           - 29,433 வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி (NPP)          -   24,145 வாக்குகள்

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) -  8,415 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)  - 6,825 வாக்குகள்

ஜனநாயக தேசிய கூட்டணி(DNA) - 3,310 வாக்குகள்

ஜனநாயக இடதுசாரி முன்னணி - (DLF) - 683 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்(ACTC)    -  568 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள்        -   76,572
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்     -    4,305
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   80,877
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 118,878    

பதுளை மாவட்டம்  - பதுளை தேர்தல் தொகுதி

தேசிய மக்கள் சக்தி (NPP)             - 24,452 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)              - 6,597 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)  - 4,227 வாக்குகள்

ஐக்கிய தேசிய கூட்டணி(UNA)    - 823 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 641 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள்        -  39,088
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்     -   2,284    
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   41,372
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 57,405

யாழ்ப்பாண மாவட்டம்  - மானிப்பாய் தேர்தல் தொகுதி

தேசிய மக்கள் சக்தி (NPP)          -   10,059 வாக்குகள்

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) -  4,386 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி(DTNA) - 3,443 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்(ACTC)    -  2,751 வாக்குகள்

சுயேட்சை குழு 17                  - 2,413 வாக்குகள்

தமிழ் மக்கள் கூட்டணி (TMK) -  1,892 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி(EPDP)    -  1,193 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)           - 874 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள்        -   32,516
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்     -    3,484
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   36,000
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 60,146    

யாழ்ப்பாண மாவட்டம்  - கிளிநொச்சி தேர்தல் தொகுதி

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) -  23,293 வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி (NPP)          -   8,717 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)           - 8,554 வாக்குகள்

சுயேட்சை குழு 17                  - 2,098 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி(EPDP)    -  1,497 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்(ACTC)    -  1,441 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி(DTNA) - 1,098 வாக்குகள்

தமிழ் மக்கள் கூட்டணி (TMK) -  307 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள்        -   53,252
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்     -    6,518
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   59,770
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 96,953    

யாழ்ப்பாண மாவட்டம்  - யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி

தேசிய மக்கள் சக்தி (NPP)             - 9,066 வாக்குகள்

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 2,582 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்(ACTC)    - 1,612 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி(EPDP)    - 1,361 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி(DTNA) - 1,124 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள்        -   21,866
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்     -    1,765
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   23,631
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 37,397  

யாழ்ப்பாண மாவட்டம்  - நல்லூர் தேர்தல் தொகுதி

தேசிய மக்கள் சக்தி (NPP)          -   8,831 வாக்குகள்

தமிழ் மக்கள் கூட்டணி (TMK) -  3,527 வாக்குகள்

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 3,228 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்(ACTC)    - 2,396 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி(DTNA) - 1,528 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி(EPDP)    -  1,104 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள்        -   28,084
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்     -    2,163
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   30,247
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 50,806    

யாழ்ப்பாண மாவட்டம்  - ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி

ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி(EPDP)    -  3,296 வாக்குகள்

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) -  2,626 வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி (NPP)          -   2,116 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்(ACTC)    -  1,000 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி(DTNA) - 624 வாக்குகள்

தமிழ் மக்கள் கூட்டணி (TMK) -  195 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள்        -   13,192
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்     -    1,758
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   14,950
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 24,842    

ஹம்பாந்தோட்டை மாவட்டம்  - திஸ்ஸமகாராம தேர்தல் தொகுதி

தேசிய மக்கள் சக்தி (NPP)             - 76,841 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)              - 23,262 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 7,531 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)  - 4,111 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 1,623 வாக்குகள்


செல்லுபடியான வாக்குகள்        -  118,137
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்     -   6,247    
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   124,384
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 181,536    

ஹம்பாந்தோட்டை மாவட்டம்  - முல்கிரிகல தேர்தல் தொகுதி

தேசிய மக்கள் சக்தி (NPP)             - 42,699 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)              - 10,302 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 6,042 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)  - 4,281 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 1,550 வாக்குகள்


செல்லுபடியான வாக்குகள்        -  69,950
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்     -   3,739
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   73,689
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 106,369    

ஹம்பாந்தோட்டை மாவட்டம்  - பெலியத்த தேர்தல் தொகுதி

தேசிய மக்கள் சக்தி (NPP)             - 36,002 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)              - 7,008 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 5,857 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)  - 2,381 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 929 வாக்குகள்


செல்லுபடியான வாக்குகள்        -  54,416
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்     -   2,242
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   56,658
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 79,700    

காலி மாவட்டம்  - பெத்தேகம தேர்தல் தொகுதி

தேசிய மக்கள் சக்தி (NPP)             - 41,294 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)              - 12,413 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 3,558 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)  - 3,967 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 972 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள்        -  64,715
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்     -   3,540
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   68,255
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 100,128    

காலி மாவட்டம்  - ஹினிதும தேர்தல் தொகுதி

தேசிய மக்கள் சக்தி (NPP)             - 40,170 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)              - 15,498 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 3,320 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)  - 3,044 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 2,880 வாக்குகள்


செல்லுபடியான வாக்குகள்        -  67,531
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்     -   3,285
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   70,816
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 102,924    

காலி மாவட்டம்  - பெந்தர - எல்பிட்டிய தேர்தல் தொகுதி

தேசிய மக்கள் சக்தி (NPP)             - 39,475 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)              - 9,326 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 3,163 வாக்குகள்

ஐக்கிய ஜனநாயக குரல்        - 2,705 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)  - 2,219 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 1,044 வாக்குகள்


செல்லுபடியான வாக்குகள்        -  59,862
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்     -   2,500
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   62,362
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 92,167    

காலி மாவட்டம்  - ஹபறாடுவ தேர்தல் தொகுதி

தேசிய மக்கள் சக்தி (NPP)             - 38,080 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)              - 7,964 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 3,217 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)  - 2,116 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 991 வாக்குகள்


செல்லுபடியான வாக்குகள்        -  54,017
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்     -   2,074
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   56,091
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 85,347

காலி மாவட்டம்  - கரந்தெனிய தேர்தல் தொகுதி

தேசிய மக்கள் சக்தி (NPP)             - 35,787 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)              - 6,649 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 2,258 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)  - 2,125 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 504 வாக்குகள்


செல்லுபடியான வாக்குகள்        -  49,600
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்     -   1,809
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   51,409
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 77,608    

 

காலி மாவட்டம் - காலி தேர்தல் தொகுதி

தேசிய மக்கள் சக்தி (NPP) - 39,707 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 9,410 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 3,741 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1,885 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 715 வாக்குகள்

ஐக்கிய ஜனநாயக குரல் - 183 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள் - 56,597
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1,667
அளிக்கப்பட்ட வாக்குகள் - 58,264
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 83,718

காலி மாவட்டம்  - றத்கம தேர்தல் தொகுதி

தேசிய மக்கள் சக்தி (NPP)             - 33,113 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)              - 7,083 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 3,408 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)  - 2,751 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 1,957 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள்        -  49,983
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்     -   2,009
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   51,992    
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் -80,811    

காலி மாவட்டம் - அக்மீமன தேர்தல் தொகுதி

தேசிய மக்கள் சக்தி (NPP) - 48,629 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 8,496 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 5,008 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 4,153 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 885 வாக்குகள்

ஐக்கிய ஜனநாயக குரல் - 514 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள் - 69,010
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,155
அளிக்கப்பட்ட வாக்குகள் - 71,165
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 103,518

காலி மாவட்டம் - அம்பலாங்கொடை தேர்தல் தொகுதி

தேசிய மக்கள் சக்தி (NPP) - 36,196 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 7,536 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 3,075 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 2,047 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 1,123 வாக்குகள்

ஐக்கிய ஜனநாயக குரல் - 251 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள் - 51,651
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1,814
அளிக்கப்பட்ட வாக்குகள் - 53,465
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 79,776

காலி மாவட்டம் - பலப்பிட்டிய தேர்தல் தொகுதி

தேசிய மக்கள் சக்தி (NPP) - 21,681 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 5,588 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 1,855 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1,471 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1,318 வாக்குகள்

ஐக்கிய ஜனநாயக குரல் - 312 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள் - 33,284
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1,392
அளிக்கப்பட்ட வாக்குகள் - 34,676
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 54,925

அஞ்சல் முலவாக்குகள் மாவட்டரீதியாக
புத்தளம் மாவட்டம்  - அஞ்சல் மூல வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 11,404 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,661 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 672 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 454 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 159 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள்        -    14,914
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்     -   429                
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   15,343        
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 15,770

கொழும்பு மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 28,475 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,985 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1,814 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 934 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 728 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள் - 35,502
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 964
அளிக்கப்பட்ட வாக்குகள் - 36,466
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 37,069

காலி மாவட்டத்திற்கான அஞ்சல் மூலவாக்கெடுப்பு

தேசிய மக்கள் சக்தி (NPP) - 32,296 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,523 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1,846 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 607 வாக்குகள்

இரத்தினபுரி மாவட்டத்துக்கான அஞ்சல் மூல வாக்கெடுப்பு முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 27,776 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,969 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1,528 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1,031 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 463 வாக்குகள்

களுத்துறை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 29,076 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,340 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1,913 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 1,160 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 613 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள் - 36,810
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 936
அளிக்கப்பட்ட வாக்குகள் - 37,746
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 38,328

ஹம்பாந்தோட்டை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 17,326 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1.623 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 1,293 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 774 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 188 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள் - 21,676
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 572
அளிக்கப்பட்ட வாக்குகள் - 22,248
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 22,684

பதுளை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 33,780 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,866 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 2,227 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 675 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 209 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள் - 41,701
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1,196
அளிக்கப்பட்ட வாக்குகள் - 42,897
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 43,502

திருகோணமலை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 9,705 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,853 வாக்குகள்

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 1,749 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 382 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 140 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 112 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள் - 15,896
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 622
அளிக்கப்பட்ட வாக்குகள் - 16,518
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 16,807

மொணறாகலை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 19,686வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,297 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 833 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 650 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 170 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள் - 25,010
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 711
அளிக்கப்பட்ட வாக்குகள் - 25,721
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 26,326

நுவரெலியா மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 13,937 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,477 வாக்குகள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 1,660 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 303 வாக்குகள்

ஐக்கிய ஜனநாயக குரல் - 201 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 121 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள் - 19,400
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 740
அளிக்கப்பட்ட வாக்குகள் - 20,140
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 20,502

மாத்தளை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 17,123 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,201 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 954 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 637 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 200 வாக்குகள்

ஐக்கிய ஜனநாயக குரல் - 84 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள் - 21,515
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 785
அளிக்கப்பட்ட வாக்குகள் - 22,300
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 22,723

மாத்தறை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 24,954 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,692 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1,823 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 641 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 548 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள் - 30,951
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 679
அளிக்கப்பட்ட வாக்குகள் - 31,630
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 32,278

பொலன்னறுவை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 16,052 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,184 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 425 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 386 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 230 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள் - 19,695
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 504
அளிக்கப்பட்ட வாக்குகள் - 20,199
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 20,616

வன்னி மாவட்டம்  - அஞ்சல் மூல வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி (NPP)             - 4,371 வாக்குகள்

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 2,349 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)              - 2,184 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி    - 1,399 வாக்குகள்

செல்லுபடியான வாக்குகள்        -    13,317
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்     -   466            
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   13,783    
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 14,060.
குறிப்பிடத்தக்கது. என்பதாகும் 


Blogger இயக்குவது.