சனி, 30 அக்டோபர், 2021

இரு கால்களினால் தனது அனைத்து கடமைகளை பூர்த்தி செய்து வரும் இலங்கைச் சிறுவன்

இரு கைகளும் இல்லாத சிறுவனின் திறைமையை பாராட்டமல் இருக்க முடியுமா?வாழ்த்துக்கள் தம்பி சஞ்ஞீவன் ஹங்குரன்கெத்த பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஹேவாஹெட்ட ரூக்வூட் தோட்டம் ஹோவாஹெட்ட நகரில் இருந்து சுமார் ஏழு கிமீ தொலைவில் மலை உச்சியில் காணப்படும் தேயிலை தோட்டமாகும்.
இத்தோட்டம் முதலாம் இரண்டாம் மூன்றாம் பிரிவு என மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது .
இங்கு முன்றாம் இலக்க லயன் குடியிருப்பு தொகுதியில் வசிக்கும் வினோத திறமையுள்ள சிறுவன்தான் சஞ்ஞீவன்.
பிறப்பில் இரண்டு கைகளும் அற்ற நிலையில் 2013.5.5 கண்டி வைத்திய சாலையில் பிறந்த போதும் .
இறைவன் கொடுத்த இரு கால்களினால் தனது அனைத்து கடமைகளை பூர்த்தி செய்து வரும் திறமை படைத்தவன் .
தனது தந்தை தலைநகரத்தில் கூலி தொழில் செய்து வரும் நிலையில் தாயார் தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.இரு சகோதரிகளுக்கு ஒரே ஒரு சகோதரன் (சஞ்சீவன் )ரூக்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி பயின்று வரும் ஒரு திறமைசாலி மாணவன் தனது இரு
கால்களினால் முத்து போன்ற மூன்று மொழிகளிலும் எழுதுவதிலும் சித்திரம் வரைவதிலும் வல்லவன்.
ஏனைய பல விளையாட்டு திறமைகளை அவனது கால்கள் மூலம் காட்டும் திறமை அப்பிரதேச மக்களை ஆனந்தமடைய வைக்கிறது.
சிறுவனின் திறைமையை பாராட்டமல் இருக்க முடியுமா இந்த  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.