வியாழன், 21 அக்டோபர், 2021

திருகோணமலையில் திடீர் சோதனையில் அழகு சாதன பொருள்கள் பறிமுதல்

திருகோணமலை தலைமையக  காவல்துறை பிரிவுக்குட்பட்ட என்.சி.வீதி, மத்திய வீதி மற்றும் 3ஆம் குறுக்குத்தெரு வீதிகளில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளும் காவல்துறையினரும் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, பாவனைக்கு ஒவ்வாத அழகு சாதனப் பொருள்கள், கிறீம் வகைகள், சாயப்பொருள்கள், போலியாக தயாரிக்கப்பட்ட சவக்கார வகைகள் மற்றும் இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு தடைசெய்யப்பட்ட பொருள்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாக, நுகர்வோர் பாதுகாப்பு 
அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் சந்தைப் பெறுமதி சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகம் என தெரிவித்த அதிகாரிகள், அப்பொருள்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும் கடை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் 
தெரிவித்தனர்.
மேலும், குறிப்பிட்ட தடை விதிக்கப்பட்ட பொருள்களை சமூக வலைதளங்களில் விற்க முற்பட்ட ஒருவரையும், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள்.21-10-2021. இன்று காலை  
கைதுசெய்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.