புதன், 18 ஆகஸ்ட், 2021

இறுமாப்புடன் இலங்கை அரசாங்கம் நாட்டை முடக்க முடியாது

நாட்டை முடக்கவே மாட்டேம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். எனினும், நாடு முழுவதும் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.17-08-2021.அன்றிரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை முடக்கினால், நாட்டின் பொருளாதாரத்தை
 முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும், அன்றாட வருமானத்தை உழைப்போர் பாரிய அசெளகரியங்களை எதிர்நோக்குவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொரோனா பரவலை தடுப்பதற்காக, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர்
 மேலும் தெரிவித்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.