திங்கள், 23 ஆகஸ்ட், 2021

வேன் மோட்டார் சைக்கிள் கிளிநொச்சி ஏ-9 நெடுஞ்சாலையில் விபத்து

கிளிநொச்சி ஏ-9 நெடுஞ்சாலையில் 23-08-2021. இன்று  இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில்
 இடம்பெற்றுள்ளது.
தென்னிலங்கையிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த டொல்பின் ரக வேன் ஒன்றும் நேர் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக சம்பவத்தை நேரில் அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் வேனின் சாரதியின் தூக்கக் கலக்கமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது
இந்நிலையில் குறித்த வேன் சாரதி கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், படுகாயம் அடைந்தவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறமை
 குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.