வியாழன், 8 ஜூலை, 2021

கனகபுரம் பகுதியில்மக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் வீடு முற்றுகை

கிளிநொச்சி–கனகபுரம் பகுதியில் மருத்துவர் ஒருவருடைய 50 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் அதிகளவானோர் கலந்து கொண்டு நடப்பதாக பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி கனகபுரத்தில் மருத்துவர் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடம் நடைபெறுவதாகவும் நிகழ்வில் 20 இற்கும் மேற்பட்ட சுகாதாரத் தரப்பினர் உட்பட்ட பெருமளவானவர்கள் பங்குகொண்டிருப்பதாகவும் பொதுமக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.
இதயைடுத்து சம்பவ இடத்திற்குள் நுழைந்துள்ள பொலிஸார் தமக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் முறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்தவருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.