ஞாயிறு, 7 மே, 2017

இன்று யாழில் திடீர் மழை. மகிழச்சியில் மக்கள்

யாழ். வலிகாமத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பிற்பகல் திடீர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த மழை வீழ்ச்சி இன்று பிற்பகல் 12.30 மணி முதல் சுமார் அரை மணித்தியாலங்களுக்கு நீடித்துள்ளது.
கடந்த பல நாட்களாக யாழ். குடாநாட்டில் கடும் வெப்பமுடனான காலநிலை நீடித்து வந்த நிலையில் திடீர் மழை வீழ்ச்சியால் வெப்பம் சற்றுத் தணிந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
திடீர் மழை வீழ்ச்சியால் சிறு போக விவசாயத்தில் ஈடுபட்டுள்ள வலிகாமம் பகுதி விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக
 கூறப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.