செவ்வாய், 30 மே, 2017

சூறா­வளி வராது மழை­யுடன் கூடிய கால­நிலை செப்­டெம்பர் வரை தொடரும்!

தற்­போது நாட்டில் நில­வு­கின்ற மழை­யுடன் கூடிய கால­நிலை எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் வரையில் நீடிக்கும் சாத்­தியம் உள்­ளது. அதனால் இடி, மின்­ன­லுடன் கூடிய மழை தொடரும் என­ வ­ளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­தது.
அதே­நேரம் வங்­களா விரி­கு­டாவில் மையம் கொண்­டி­ருந்த உயர் அழுத்த காற்று இலங்­கைக்கு அப்பால் பய­ணிப்­பதால் சூறா­வளி காற்று ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தியம் இல்­லாது போயுள்­ள­தென வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தின் எதிர்­வு­கூறல் அதி­காரி அதுல கரு­ணா­ரத்ன 
தெரி­வித்தார்.
 அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் 
தெரி­விக்­கையில்,
தற்­போதும் நாட்டின் மேற்குஇ சப்­ர­க­முவ,தெற்கு, வட­மத்­திய மாகா­ணங்­களில் இடி­யுடன் கூடிய மழை தொட­ர்ந்தும் நீடிக்கும் சாத்­தியம் உள்­ளதை வானிலை அவ­தான நிலை­யத்தின் அறிக்­கைகள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன.
மேல்­மா­கா­ணத்­திற்கு அதிக மழை­வீழ்ச்சி 
பதி­வா­வ­தற்­கான சாத்­தி­யப்­பாடு­களும் தென்­ப­டு­கின்­றன. எவ்­வா­றா­யினும் வங்­காள விரி­கு­டாவில் மையம் கொண்­டி­ருந்த உயர் அமுக்க காற்று தற்­போது இலங்­கைக்கு அப்பால் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளதால் சூறா­வளி தாக்கம் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்­புக்கள் இல்­லாது போயுள்­ளன.
இருப்­பினும் நாட்டின் மலை­யகம் மற்றும் வடக்கு பிர­தே­சங்­களில் மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோ மீற்­றர்கள் வேகத்தில் காற்­று­வீசும் கரை­யோர பிர­தே­சங்­களில் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 ஆக காணப்­படும். 
மலை­யக பகு­தி­களில் காற்றின் வேகம் அதி­க­ரிக்கும் போது மரங்கள் முறிந்து விழுந்து அதி­க­ள­வி­லான அனர்த்­தங்கள் 
ஏற்­ப­டக்­ கூடும்.
அதேபோல் இடி மின்­ன­லுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என்று அறியப்பட்டுள்ளது. மின்னலின் தாக்கம் அதிகரிப்பை காண்பிக்கக்கூடும். இந்த காலநிலை மே மாதத்தில் தொடங்கி செப்டெம்பர் வரையில் தொடரும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.