செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

பாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை?

பாகிஸ்தானில் காதலர் தினம் கொண்டாடுவதற்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 14ம் திகதி உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதேபோல் பாகிஸ்தானிலும் காதலர் தினத்தை கொண்டாடி வந்தனர். இந்த ஆண்டு காதலர் தினத்துக்கு தடை விதிக்கக் கோரி
 இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்துல் வாகித் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். ‘‘காதலர் தினம் இஸ்லாமிய பாரம்பரியத்துக்கு எதிரானது.  எனவே காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘‘பாகிஸ்தானில் காதலர் தினத்தை கொண்டாட தடை விதிக்கப்படுகிறது’’ என்று உத்தரவிட்டது. காதலர் தின கொண்டாட்டத்தை நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு
 உடனடியாக எடுக்க வேண்டும். இந்த உத்தரவை
 அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அரசு மட்டுமின்றி ஊடகங்கள், பத்திரிகைகளிலும் காதலர் தின கொண்டாட்டத்தை ஊக்குவிக்காமல் தவிர்க்க வேண்டும் என்றும்
 அவர் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.